Tuesday, May 01, 2007

என்னுடைய பின்னூட்டங்கள் - மே 2007

மே 2007ல் மற்ற வலைப்பூக்களில் இடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

218 comments:

  1. http://vettipaiyal.blogspot.com/2007/04/blog-post_30.html

    அப்பா வெட்டி....உண்மையிலேயே அசந்துட்டேன். திருமறைக்காட்டுல அப்பருக்கு நேர்ந்த நிலைல நான் இருக்கேன். முருகா!


    குமரன், எனக்கு முருகன் பாடலாகத் தோன்றியிருக்கலாம். வெட்டிக்கு கண்ணன் பாட்டு. ஆனால் இரண்டும் ஒன்றுதானே.

    ReplyDelete
  2. http://sivamgss.blogspot.com/2007/05/blog-post_02.html

    அப்படியானால்...மறைந்து வாழ வேண்டியதற்கான காரணம் என்ன? மறைவாக இருந்து எதுவும் போராட்டம் நடத்தியிருக்கலாமே! ஒருவேளை உடல்நலக் குறைவாக இருந்திருக்குமோ!

    ReplyDelete
  3. http://wikipasanga.blogspot.com/2007/05/blog-post.html

    கம்பன் கவிஞன். பழைய எழுத்தாளர்களையெல்லாம் புலவன் என்பார். எழுதிப் பாடுகின்றவரைப் பாணன் என்பார். ஆனால் கவிச்சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுகிறவர் இவர் ஒருவர்தான். சமகாலத்துப் பாண்டி நாட்டாரான புகழேந்தியும் புலவர்தான். ஓட்டக்கூத்தரும் புலவர்தான். கம்பராமாயணத்தின் மையக்கருத்தில் கருத்து மாறுபாடு இருக்கலாம். இல்லாமல் போகலாம். ஆனால் அது கம்பரின் கவிச்சுவையைப் பருகுவதை தடை செய்யாது.

    ஜெயஸ்ரீ அவர்களின் விளக்கமும் மிக அருமை.

    கல்யாண வீட்டில் உளுந்துதானே போட வேண்டும். வடைக்கு! அதான் போட்டிருக்கிறார்.

    மண்டோதரியின் புலம்பல்...மிகவும் கவித்துவமான புலம்பல். திரும்பத்திரும்ப படித்துப் பாருங்கள். விளக்கமே தேவையில்லை. "கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்" என்ற சொல்லாடல் ஒன்றே போதும். கிட்டத்தட்ட கண்ணதாசன் பட்டுக்கோட்டை காலத்தைய சொற்கோர்ப்பு.

    ReplyDelete
  4. http://aaththigam.blogspot.com/2007/05/19.html

    நன்றி விஎஸ்கே. கேட்டதை மறந்து விட்டேன். ஆனால் நீங்கள் மறக்காமல் கொடுத்திருக்கின்றீர்கள். மீண்டுமொரு நன்றி.

    இந்தத் திருப்புகழ் எனக்கு மிகவும் பிடித்த திருப்புகழ்களில் ஒன்று. அதிலும் வரையினிலெங்கணும் உலவி நிறைந்தது வரிசை தரும் பதமது பாடி என்ற வரிகள் மிகப் பிடித்தம். அருமையான விளக்கம். கவிதை நடையில்.

    // அணிமணி குங்குமமும்
    அழகிய சந்தனமும்
    அளவோடு சேர்த்து
    அரும்பெரும் மார்பினில்
    அணிந்திருக்கும் அழகனே! //
    இதை மிகவும் ரசித்தேன். மிகமிக.

    முருகனருள் முன்னிற்கட்டும்.

    ReplyDelete
  5. http://radiospathy.blogspot.com/2007/05/4.html

    கேட்டேன். கேட்டேன். கதம்பம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு பாட்டு. எம்பதுகளின் மத்தியில் வந்த பாட்டு முதலில். பிறகு எழுபதுகளின் இறுதியில் வந்த பாடல். பிறகு அறுபதுகளின் இறுதியில் வந்த பாடல். பிறகு மீண்டும் 80. அடுத்து 50. அப்பப்பா! நல்ல கதம்பந்தான்.

    அத்தோட முடிஞ்சதா? வந்ததுக்கு அடுத்து ரெண்டு பாட்டு கேக்கனுமே.
    1. மண்ணில் வந்த நிலவே என்ற பாடல் நிலவே மலரே என்ற படத்திலிருந்து.
    2. ஒனக்கெனத்தானே இந்நேரமா என்ற பாடல் பொண்ணு ஊருக்குப் புதுசு என்ற படத்திலிருந்து
    3. சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது என்ற பாடல் சரணம் ஐயப்பா படத்திலிருந்து.
    ரெண்டுன்னு சொல்லி மூனு கேட்டுட்டேன். வர்ரேன்.

    ReplyDelete
  6. http://birund.blogspot.com/2007/05/blog-post_01.html

    அருமை. அருமை. அடடா!

    ReplyDelete
  7. http://kannansongs.blogspot.com/2007/05/blog-post.html

    மதுரைச் சித்திரைத் திருவிழா என்பது தமிழ்நாட்டின் பண்பாட்டுத் திருவிழா என்று சொல்லலாம். திருமாலிருஞ்சோலையிலிருந்து கிளம்பி ஊரூராக எதிர்சேவை ஏற்றுக்கொண்டு வந்து பொங்கும் பூம்புனல் (ஒருகாலத்தில்) வைகையில் இறங்கி...அப்படியே உலகத்து உயிர்களின் உளத்தில் இறங்கிடும் கள்ளழகர் மாட்சியே மாட்சி. காணக்கொடுத்தமைக்கு நன்றி பல.

    சிறுவயதில் நாங்கள் மதுரையில் சில ஆண்டுகள் இருந்தோம். அப்பொழுது சித்திரைத் திருவிழாவையும் பொருட்காட்சியையும் மிகவும் அனுபவித்திருக்கிறோம்.

    ReplyDelete
  8. http://muslimpage.blogspot.com/2007/05/blog-post_02.html

    மிகவும் கொடிய செயல். மனிதத்தன்மையற்ற கொடுர மனங்கள். எங்கேயிருந்து பிடித்து வந்தார்களோ!

    ReplyDelete
  9. http://madhavipanthal.blogspot.com/2007/05/4.html

    1. நாரதர்
    3. நரசிம்ம அவதாரம்
    5. தேரெழுந்தூர்
    8. இராமன் இலக்குவன்
    10. சம்பாதி-ஜடாயு

    ReplyDelete
  10. http://aaththigam.blogspot.com/2007/04/18.html

    // குமரன் (Kumaran) zei...
    எஸ்.கே. ஜேசுதாஸ் பாடிய திருப்புகழ் பாடல்களில் இதுவும் ஒன்று. பல முறை கேட்டது.

    அல்லி நேரும் நினது தானம் (தாமரை போன்றது உனது ஸ்தானம் - திருவடிகள்) என்றே இதுவரை நினைத்திருந்தேன். இன்று தான் புரிந்தது அது 'அல்லில் நேரும் மின் அது தானும்' என்று. //

    நானும் யேசுதாஸ் பாடிக் கேட்டிருக்கிறேன் குமரன். அவருடைய தமிழுச்சரிப்பில் சிறிது பிழையிருக்கும். அதிலும் இது போன்ற பழந்தமிழ்ப் பாக்கள் எனும் பொழுது "எந்த ரோம கானு பாவுலு"வாக சில பொழுதுகளில் ஆகி விடுகிறது. திருப்புகழைப் படியுங்கள். திரும்பத் திரும்ப. மனதில் கொஞ்சமேனும் பதிந்தது என்றால் பிறகு கேளுங்கள். வேறுபாடு உங்களுக்குப் புரியும்.

    ReplyDelete
  11. http://madhavipanthal.blogspot.com/2007/05/4.html

    மொதல்ல இந்த பாப்பப் பின்னூட்டம விட்டு வாங்க. இல்லைன்னா பின்னூட்டம் போடவே மாட்டேன்.

    ReplyDelete
  12. http://ennulagam.blogspot.com/2007/05/ii-54.html

    கடன் வாங்கிக் கல்யாணம் பண்ணுன்னு நம்மூர்ல ஒரு பழமொழி உண்டு. கடன் வாங்கித் தொழில் நடத்துன்னு வணிகம் சொல்லுதோ!

    உண்மைதான் சார். நம்மூர்ல எப்படி கன்செஷன் அனுபவிக்கலாம். எப்படி ஃபிரி வாங்கலாம். எப்படி திருப்பிக் கட்டாத கடன் வாங்கலாம். எப்படி வரி கட்டாம இருக்கலாம்...இதுலதானங்க யோசிக்கிறாங்க. அப்புறம் எங்க....அதுவுமில்லாம இந்த மாதிரி பணப்புழக்கந்தான் பணக்காரங்கள மட்டுமே பணக்காரங்களா வெச்சிருக்குது. வெகுசிலர் அந்த வழியைத் தெரிஞ்சிக்கிட்டுப் பணக்காரக்கூட்டத்துல ஐக்கியமாயிர்ராங்க.

    ReplyDelete
  13. http://madhavipanthal.blogspot.com/2007/05/4.html

    // kannabiran, RAVI SHANKAR (KRS) zei...
    //G.Ragavan said...
    மொதல்ல இந்த பாப்பப் பின்னூட்டம விட்டு வாங்க. இல்லைன்னா பின்னூட்டம் போடவே மாட்டேன்//

    ஆகா...pop up பின்னூட்டம் மேல ஏங்க ஜிரா உங்களுக்கு இம்புட்டு கோபம்?
    அது இன்னான்னா, முன்பு ஒரு புதிரா புனிதமா-வில், ஒரு அனானி pop up பின்னூட்டம் கேட்டாரு.
    கேள்வியைப் பாத்துக்கிட்டே, பதிலைக் காப்பி பேஸ்ட் செய்ய வசதியா இருப்பதாகச் சொன்னாரு. //

    ஐயோ ரவி...அதுல அந்த ரெண்டு வரியை டைப் அடிக்குறதுக்குள்ள எனக்கு உயிரே போயிருச்சு. அதுலயும் அல்ட்-2வையும் மாத்துனா...அது இங்க போகுது இது அங்க போகுது...அப்பா இது வசதியா இருக்கு. ரொம்ப நன்றி. ரொம்ப நன்றி. "வாங்க" அப்படீன்னு அடிச்சா "வா அங்க"ன்னு வருதுங்க. அதான் கோவிச்சுக்கிட்டேன். எனக்கு மட்டுந்தான் இந்தப் பிரச்சனையா...மத்தவங்களுக்கு இல்லையா? மொதல்ல அதச் சொல்லுங்க மக்களே.

    ReplyDelete
  14. http://madhavipanthal.blogspot.com/2007/05/4.html

    // இராமநாதன் zei...
    KRS,
    ராகவன் கதைக்கு ராகவனின் துணையை நாடி பத்தாம் கேள்விக்கு

    10) இ) சம்பாதி-ஜடாயு //

    போட்டுக் குடுத்துட்டீரே இராமநாதா...போட்டுக் குடுத்துட்டீரே. இதெல்லாமா வெளிய சொல்றது! ஆனா அங்கதன்னு நீரு ஜில்பான்ஸ் லாஜிக் படிச் சொன்னதும் இன்னொரு லாஜிக்ல சரியாயிருச்சே.

    // kannabiran, RAVI SHANKAR (KRS) zei...
    //இராமநாதன் has left a new comment on your post "புதிரா? புனிதமா?? - 4":
    KRS, ராகவன் கதைக்கு ராகவனின் துணையை நாடி பத்தாம் கேள்விக்கு//

    ஆகா...
    மருகேலரா ஓ ராகவா தெரியும்!
    ஆனா
    மறைவென்ன காண் ஜி ராகவா?
    பிட் அடித்தவரை விட, பிட் கொடுத்தவருக்கே அதிக தண்டனை! :-)) //

    என்ன செய்வது ரவி. ஆலவாயப்பன் பிட்டுக்கு மண் சுமந்தவன். அவனுக்கும் தண்டனை. எனக்கும் இங்கு தண்டனை. சரி. எல்லாம் நல்லதுக்கே. :-)

    ReplyDelete
  15. http://anbuthozhi.blogspot.com/2007/05/blog-post.html

    செண்பகவல்லி அம்மன் திருக்கோயில்...என்னுள் பல நினைவுகளைத் தட்டி விடுகிறது. நாங்களும் கோயில்பட்டியில் சிறிதுகாலம் இருந்தோம். அப்பொழுது செண்பகவல்லியம்மன் கோயில் எங்களுக்கு நல்லதொரு தொழுகையிடம்.

    கோயிலின் பழமை உள்ளே சென்றதும் தெளிவாகத் தெரியும். ஆண்டுக்கொருமுறை வளையல் சாத்துதலும் நடக்கும். நாம் வளையல்களைக் கொடுத்து ரசீது வாங்கிக் கொள்ள வேண்டும். சாற்று நாளுக்குப் பிறகு அந்த வளையலை வீட்டிற்கு வாங்கிக் கொண்டு போகலாம். பெண்பிள்ளைகளுக்கு ரொம்பவும் நல்லது என்பார்கள்.

    கோயிலுக்குள்ளே முருகப் பெருமானுக்கும் தனிச்சந்நதி உண்டு. அங்கும் பலகாலம் உருகி நின்றிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் என்னுடைய மனம் இரைஞ்சும். அப்பனே முருகா...கதிரேசன் கோயில் என்று சொல்கிறார்களே...அது பாழ்பட்டு சீழ்பட்டு மலைக்குமேலை மலக்குவியல்களுக்கு நடுவிலே வீணாய்ப்போனதே....யாராவது எடுத்துச் செய்ய வைக்க மாட்டாயா..இல்லையேல்..எனக்காவது செல்வத்தை நிறையக் கொடு. நானெடுத்துச் செய்கிறேன் என்று வேண்டுவேன். எங்க சொந்தக்காரங்க அந்தக் கதிரேசன் மலைக்கோயில் தெருவில் இருக்காங்க. நான் அந்த மலைக்கோயிலுக்கு உடைஞ்சு காணமப்போன படிகள்ள ஏறிப்போயி...நாலு முட்டுச் சுவத்த மட்டும் பாத்துட்டுப் பாத்துட்டு வர்ரது அவங்களுக்குத் தெரியும். அப்புறம் நாங்கள்ளாம் அங்க இங்கன்னு போயி பெங்களூருக்கு வேலைக்கு வந்தாச்சு. அப்பத்தான் இடிஞ்ச சுவர்களைத் தள்ளி விட்டுவிட்டு கோயில் எழுப்பி..படிகளைச் செதுக்கி..கிரிவலப் பாதை செய்து...என்று காதில் பஞ்சாமிர்தம் ஊற்றினார்கள். அதற்குப் பிறகு அங்கு சென்றதும் பார்த்ததும் மகிழ்ந்ததும்....
    http://gragavan.blogspot.com/2006/05/7.html இங்க இருக்கு.

    ReplyDelete
  16. http://koodal1.blogspot.com/2007/05/blog-post_03.html

    ராஜ்குமார் செய்த தொண்டு சிறப்பு. தமிழக அரசு இதை அங்கீகரிக்க வேண்டும். இதைப் பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும். செய்வார்களா? ராஜ்குமாரைப் போல மொழிக்கு ஆக்கபூர்வமாகவும் சிந்திக்கிறவர்கள் மனம் வைத்தால் நடக்கலாம்.

    ReplyDelete
  17. http://chennaicutchery.blogspot.com/2007/05/blog-post_04.html

    :-) பகுத்தறிவு எல்லாருக்கும் தேவைப்படுகிறது. மொத்தக் குத்தகைக் கடைக்கும் கூட.

    ReplyDelete
  18. http://imsai.blogspot.com/2006/06/blog-post_115096244665313268.html

    எனக்குத் தெரிஞ்சு போச்சு. பரமசிவனுக்கும் பார்வதிக்கும் பிள்ளையார் முருகன் மட்டுமில்லாம ஒரு பெண்குழந்தையும் இருந்திருக்கு. அந்தப் பெண்குழந்தைய ஒதுக்கி வெச்சுட்டாங்க. அந்தக் குழந்தையோட சந்ததியினர் இன்னமும் இருக்காங்க. அதுக்கான ஆதாரம் புறநானூறு, சீவகசிந்தாமணி, திருச்செந்தூர் கோயில், ஸ்ரீரங்கம் மடப்பள்ளி, கம்பராமாயணம், பாரதிதாசன் பாடல்கள், தில்லானாமோகனாம்பாள் திரைப்படம் (மோகனாவின் அப்பா யார்? அங்கதான் ரகசியம்), அப்புசாமியின் கதைகள் என்ற புத்தகம்...ஆகியவற்றில் உள்ளது.

    ReplyDelete
  19. http://raamcm.blogspot.com/2007/05/blog-post.html

    என்னப்பு இத்தோட முடிச்சிட்ட! விட்டுப்போனதுகள்ள ரெண்டு இங்க.

    ஏலே ராமேய்...அங்கயே பாக்கதல. அந்தப் பிள்ளைக்கு ஏற்கனவே கல்யாணம் ஆய்ட்டு.

    இந்தா...ரப்பன விடு..ஒன்னயத்தான் ராமுங்காங்களா. பொறப்புடுறப்பயே சிலுக்குவார்ப்பட்டீல ஆத்தா சொல்லுச்சு

    ReplyDelete
  20. http://vettipayal.wordpress.com/2007/05/05/spider-man-3

    புதிய வீட்டிற்கு எனது வாழ்த்துகள். என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாமா? சொல்ல விருப்பம் இருந்தால் சொல்லலாம்.

    விமர்சனம் நான் நேற்றே கேட்டு விட்டேன். நொந்து நூலாகி அந்து அல்வாவாகி வந்த நண்பர்கள் படம் எப்படி என்று சொல்லி விட்டார்கள்.

    ReplyDelete
  21. http://thulasidhalam.blogspot.com/2007/05/55.html

    வரலாற்றாளர் என்ற பட்டத்தையும் நியூசிலாந்தாலஜிஸ்ட் என்ற பட்டத்தையும் உங்களுக்கு ஒருங்கே அளித்து பெருமைப்படுகிறேன்.

    லாட்டரி நல்ல லாட்டரியாவும் இருக்குதே. உப்பு...புளி...மிளகாய் வாங்கும் போதே லாட்டரியா. சரி. நல்லதுக்குப் பயன்படுத்துறாங்க. அதுனால நல்லதுதான்.

    குழந்தைகள் தாய்மொழியைக் கற்க வேண்டும். அதற்காக மாவோரிகள் எடுத்துக் கொண்ட சிரமங்களுக்கும் முயற்சிகளுக்கும் என்னுடைய பாராட்டுகள்.

    ReplyDelete
  22. http://koodal1.blogspot.com/2007/05/blog-post_05.html

    சற்று அதிகப்படியாகவே தெரிகிறது. இப்படி நல்லவர்கள் ரொம்ப நல்லவர்களாகவும் கெட்டவர்கள் ரொம்பக் கெட்டவர்களாகவும் ஆகிக்கொண்டேயிருக்கிறார்கள் காலங்காலமாக. இது போன்றத் திரிபுகள் ஏற்கனவே எக்கச்சக்கம். என்னவோ போங்கள். உங்களுக்கெல்லாம் பிடித்திருந்தால் சரி.

    ReplyDelete
  23. http://puliamaram.blogspot.com/2007/05/blog-post_04.html

    // நடுநிலை நாளேடு என்று தன்னை கூறிக்கொள்ளும் தினமலரின் ஒரு இதழையும், கட்சி சார்பு ஏடாக அறியப்படும் தினகரனின் ஒரு இதழையும் ஒன்றாக வைத்து ஒப்பிட்டுப் பார்த்தீர்களேயானால் ஓரளவுக்கு உங்களுக்கு நிலவரம் புரியலாம் :) //

    ரெண்டையும் குப்பையில தள்ள வேண்ட்டியதுதான். தள்ளமுடியாமத்தான ஒவ்வொருத்தர் கிட்ட இருந்தும் அந்தந்த பத்திரிகைக்கு அடைமொழிகள் கிடைச்சிக்கிட்டிருக்கு. நல்லவன்னு சொல்லிக்கிட்டு திருடுறவன் பொய் சொன்னதால "திருடன்னு சொல்லிக்கிட்டே திருடுறவன்" நல்லவனாயிற முடியாது. அடுத்தவன் தப்பு செஞ்சப்ப எங்க போனன்னு கேட்டுக்கிட்டே தப்பு செய்றது எப்பவும் பாஷன். இப்ப மட்டும் என்ன? அரசியல்வாதிகள் மட்டும் வாழ்க. அடிக்க முடியுறப்ப அடி.

    ReplyDelete
  24. http://bharathi-kannamma.blogspot.com/2007/05/blog-post_06.html

    என்னப்பா காபி, பூம்புபுராணம்...இல்ல பாம்புபுராணமெல்லாம் தொடங்கீருக்க. பாம்புன்னா எல்லாருக்கும் வெடவெடங்குமேப்பா! சின்னவயசுல தூத்துக்குடியில எங்க வீட்டுல ஒரு ஊர்க்காரப் பாட்டி இருந்தாங்க. அவங்க திடீர்னு வெளக்கமாத்தக் கொண்டு போய் ரெண்டு மூனு குட்டிப்பாம்புகளை அடிச்சுத் தூக்கிப் போட்டாங்க. ய்ப்போய்! நான் பாத்த மொத வீராங்கனை அவங்க. அதே மாதிரி சாத்தூர்ல இருந்து புதூர் போற வழி. இருக்கங்குடி நெம்மேனிதாண்டி போகும். அதுல வெம்பூருக்கு முன்னாடி ஒரு பெரிய பாம்புய்யா...ரோட்டத் தாண்டைல பஸ்ஸோ டிராக்டரோ அடிச்சிருக்கு. பாவம். அது மேல ஏத்தாம ஒதுங்கிப் போனோம்.

    ReplyDelete
  25. http://livingsmile.blogspot.com/2007/05/blog-post_07.html

    ம்ம்ம்ம். புரிகிறது.

    ReplyDelete
  26. http://thulasidhalam.blogspot.com/2007/05/56.html

    அடடே! அது நீங்களா? அடையாளமே தெரியலை. நாங்கூட நடிகை பத்மினி ஒரு குழந்தையோட உக்காந்து எடுத்துக்கிட்ட படம்னு நெனச்சேன். ஹி ஹி. (உண்மையிலேயே அடையாளம் தெரியல. பயங்கர லாங்ஷாட் போட்டோ)

    என்ன பிரதமரு அவரு? நம்மூர்ல பாத்தீங்கன்னா ஐசியூல இருந்தே ஐந்தாண்டுத் திட்டம் போடுறாங்க. அவரு மனுசன்னு நெனைக்கிறேன்.

    ReplyDelete
  27. http://ennulagam.blogspot.com/2007/05/ii-55.html

    வியப்பும் பெருமையும் ஒருங்கே வருகிறது. ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றித் தாழாது உஞற்றுபவர் என்கிறார் வள்ளுவர். அதாவது ஆழ்ந்து உழைக்கிறவங்க ஊழ்வினையோட மறுபக்கத்தையும் பாத்துருவாங்களாம். அதாவது ஊழ இங்குட்டுக்கூடித் தொளச்சி அங்குட்டு வந்துருவாங்களாம். இன்றைய ஆங்கிலத்தில் சொன்னால் "hardworker say fuckoff to fate"

    ReplyDelete
  28. http://raasaa.blogspot.com/2007/04/blog-post_18.html

    ஐயா இந்த popup பின்னூட்டப் பெட்டியக் கொஞ்சம் மாத்துங்க. பின்னூட்டம் அடிக்கக் கஷ்டமா இருக்கு.

    இப்படித்தாய்யா ஒங்களைப் பதிவு போட வெக்க வேண்டியிருக்கு. நடக்கட்டும் நடக்கட்டும். நல்ல அழகாச் சொல்லீருக்கீக. பிரிச்சு பிரிச்சுச் சொன்னா நாங்க பிரிச்சு மேஞ்சுருவோம்னு மொத்தமாச் சொல்லீட்டீரே! சரி. மொத்தீர வேண்டியதுதான். :-))

    பெங்களூருக்கு வந்திருக்காங்களா? ஊருல நல்ல சலாத்தா இருந்தவங்களுக்கு இங்க அடஞ்சு கெடக்குறது கஷ்டமாயிருக்கும். எதுக்கும் போரம் கருடா எல்லாம் கூட்டீட்டுப் போங்க. நல்லா பொழுது போகும்.

    ReplyDelete
  29. http://madippakkam.blogspot.com/2007/05/blog-post.html

    அடடே! அப்ப ஜெயகாந்தன் நல்லவராயிட்டாரு! இனிமே அவரத் திட்ட மாட்டாங்க. அப்பச் சரி. :-)

    ReplyDelete
  30. http://ilavanji.blogspot.com/2007/02/blog-post_26.html

    பிரமாதமா படம் புடிச்சிருக்கீருய்யா. நீரே புடிச்சதா? இல்ல காபி ஷாப்ல யாராவது குடுத்து வாங்கீட்டு வந்ததா? போட்டோக்கு வெளக்கம் வேணுமய்யா! வெளக்கம் வேணும்!

    ReplyDelete
  31. http://vivaatham.thamizmanam.com/archives/36

    // Comment by luckylook
    2007-05-07 04:19:06
    //மொத்தத்தில் மக்களுக்கும் எனக்கும் ஏமாற்றமே அதிகமாக உள்ளது!!! //

    நன்றி. உங்களுக்கு தேர்தல் முடிவுகளே ஏமாற்றமாக தான் இருந்தது ஜெய்சங்கர்! //

    லக்கி இது சரியாகத் தோன்றவில்லை. கருத்து கேட்டீர்கள். அவரும் சொல்லியிருக்கிறார். அந்தக் கருத்துக்கு மறுகருத்துச் சொல்லாமல் இப்படிச் சொல்வது சரியன்று. இது இனிமேல் கருத்துச் சொல்ல வருகின்றவர்களை அது உற்சாகப்படுத்தாது.

    என்னுடைய விமர்சனம். இந்த அரசாங்கம் இதுவரையில் ஏமாற்றம் தரும் அரசாங்கம். தேர்தல் முடிவுகள் எனக்கு ஏமாற்றமாக இருந்ததா இல்லையா என்று என்னுடைய தேர்தல் முடிவு பற்றிய அலசல் பதிவைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  32. http://vivaatham.thamizmanam.com/archives/36

    // Comment by luckylook
    2007-05-07 06:21:43
    அறிவுரைக்கு நன்றி கோ. இராகவன்!

    ஜெய்க்கும், எனக்கும் இந்த விளையாட்டு ரொம்ப நாட்களாகவே நடந்து வருகிறது. ஜெய் இதை சீரியஸாக எடுத்துக் கொண்டால் நான் இந்த விளையாட்டை நிறுத்திக் கொள்கிறேன். //

    ஐயகோ! இதென்ன பாண்டி நாட்டுக்கு வந்த சோதனை! அப்ப அங்க ஸ்மைலி..கிண்டல் ஸ்மைலி எதையாவது போடுங்கய்யா! நாங்க வேற தேவையில்லாம டென்சன் ஆக வேண்டியிருக்குய்யா! அதான் சொன்னேன்.

    ReplyDelete
  33. http://isaiinbam.blogspot.com/2007/05/1.html

    இவை இன்ஸ்பிரேஷனல் வகையில் வரும் என்று கருதுகிறேன். ரயிலின் ஓசையையும் இன்ஸ்பிரேஷனாக வைத்து இசையமைத்திருப்பதாக மெல்லிசைமன்னர் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். உலக்கைச் சத்தத்தை வைத்துச் செய்திருப்பதாக இளையராஜா சொல்லியிருக்கிறார். அந்த மாதிரிச் செய்வது (நீங்கள் குடுத்திருக்கும் எடுத்துக்காட்டுகள் கூட) சரியே. இது போலக் குடுங்கள். இவைகளைக் காப்பி வகையிலேயே சேர்க்க முடியாது. காப்பி என்றோர் வகை உண்டு. தனியே அதற்கோர் குணமுண்டு. உங்களுக்கும் தெரியும். அடுத்தடுத்து அவையும் வரும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  34. http://manggai.blogspot.com/2007/05/blog-post_08.html

    குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்க்காத கண் என்ன கண்? குழந்தைகளைக் குழந்தைகளாக நினைக்காத நெஞ்சென்ன நெஞ்சு?
    குழந்தைகளைக் குழந்தைகளாகத் தொடாத கை என்ன கை?
    சீச்சீ! என்ன வயிற்றெரிச்சல்! இந்தக் கொடுமை மறைந்தே ஆகவேண்டும்.

    ReplyDelete
  35. http://ennulagam.blogspot.com/2007/05/ii-56.html

    // அது இருக்கட்டும். வங்கியிலே நாம் போடற பணத்துக்கு ரொம்பக் குறைஞ்ச
    வட்டியைக் கொடுத்துட்டு, வங்கியிலே வேலை செய்யறவங்களுக்கு ஆடம்பரமா யூனிஃபாரம்
    கொடுக்கரதும், வருஷத்துக்கு ஒரு முறை அப் க்ரேடு செய்யறோமுன்னு உள்ளெ
    இருக்கும் (ஏற்கெனவே அருமையா இருக்கும்) இண்டீரியரை மாத்தறதும் பார்த்தாக்
    கொஞ்சம் எரிச்சலா வருதேங்க.
    இதுக்கு எதாவது விசேஷக் காரணம் இருக்கா? //

    இந்த இண்டீரியரை மாத்துரதுல ஒரு சைக்காலஜி இருக்குறதா நான் நெனைக்கிறேன். ஒரே மாதிரி இருக்குன்னு யாருக்கும் போரடிச்சிரக்கூடாதில்லையா. அதுனால இருக்கலாம். எல்லாம் வாடிக்கையாளரைக் கவரத்தான்.

    ReplyDelete
  36. http://satrumun.blogspot.com/2007/05/blog-post_6995.html

    கருணாநிதி இப்பொழுது வருத்தப்பட்டு என்ன பயன்? முதலிலேயே சிந்தித்திருக்க வேண்டும். பணமும் அதிகாரமும் குவிந்திருக்கும் இடத்தில் உட்கட்சி ஜனநாயகத்தை வளரவிடாமல் மகன்களையும் மருமக்களையும் வளரவிட்டு வாரிசு அரசியலாக்கிவிட்டு இப்பொழுது எரிகிறதே வலிக்கிறதே என்றால்? இதில் அடுத்த கட்சியைப் பற்றிக் கிண்டல் வேறு! வார்த்தைஜாலம் மக்களை மட்டுமே ஏமாற்றும் என்பதை இப்பொழுதாவது உணர்ந்தால் சரி. இவர்கள் பிரச்சனையில் இறந்தது அப்பாவிகள். ஆனால் பாவிகள் மட்டும் இன்னும் உருண்டையாக.

    ReplyDelete
  37. http://pangaali.blogspot.com/2007/05/blog-post_09.html

    பங்காளி, நீங்க ரொம்ப மானரோசம் உள்ளவருன்னு தெரியுது. அப்படியே இருந்துக்கிருவோம்.

    // இராம் zei...
    அண்ணே...

    இந்த நாடும் இந்தநாட்டுமக்களும் நாசமா போகட்டும்'ன்னு வசனம் எந்த படத்திலே? யாரு எழுதுனது??? //

    அநேகமா அந்தப் படம் தேர்தல் தோல்விக்கு அப்புறமா வந்திருக்கும்.

    ReplyDelete
  38. http://koodal1.blogspot.com/2007/05/blog-post_08.html

    பதிவுகளையும் பின்னூட்டங்களையும் பார்க்கும் பொழுது உண்மையிலேயே சூடாகத்தான் இருக்கிறது. மற்றபடி உங்கள் கேள்விக்கான விடை தெரிந்திருக்கவில்லை. இங்கு வந்துதான் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  39. http://govikannan.blogspot.com/2007/05/blog-post_09.html

    நண்டு கொழுத்தா வலையில தங்காதுன்னு சொல்வாங்க. அது மாதிரிதான் இது. நண்டு கொழுத்திருச்சு. வலையும் சிறிசு. அடுத்த வலைய நோண்ட வேண்டியதுதானே. நோண்டீருச்சு. பலனை அனுபவிக்குது. ஆனா பாவம். இறந்து போனது வேற குடும்பத்துக்காரங்க. அதுதான் வயித்தெரிச்சல். உட்கட்சி ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைச்சிட்டு வாரிசு அரசியல் நடத்துனா இப்படித்தான் இருக்கும். அடுத்த கட்சியக் கிண்டல் அடிக்கும் போது இனிச்சது. இப்ப கசக்குது.

    ReplyDelete
  40. http://veyililmazai.blogspot.com/2007/05/blog-post_09.html

    வாப்பா ஜீ, இப்பத்தான் அமைப்புல இருக்கன்னு தெரியுது. தமிழ், கன்னடம், தெலுங்குன்னு கதம்பமா குடுத்திருக்கியே. அடேங்கப்பா! பரட்டை படம் ஜோகீன்னு கன்னடத்துல நல்லா ஓடுச்சு. நல்ல படமும் கூட. அது தனுஷ் நடிச்சு வரப்போகுதுன்னு தெரிஞ்சதுமே படத்தோட முடிவு தெரிஞ்சு போச்சு. இப்ப அரசு-வ தமிழ்ல தனுஷ வெச்சு எடுக்கப் போறாங்களாம். முடிவு என்னாகும்னு நான் சொல்ல வேண்டியதில்லை.

    பொம்மரில்லுவை நானும் எறக்குமதி செஞ்சிருக்கேன். அப்படியே ஆனந்த் அப்படீங்குற படமும். நாமும் "வெட்டி" வேலை பாக்க வேண்டியதுதான். குற்றப்பத்திரிக்கை தேசியப்பறவைன்னு முயற்சி செஞ்சு பாத்து மண்ட காஞ்சதுதான் மிச்சம். இனிமே தெலுகுதேசம் வெள்ள வேண்டியதுதான். மலையாளமும் இப்பப் போறதுண்டு. யோதா பாத்தாச்சு.

    ReplyDelete
  41. http://pangaali.blogspot.com/2007/05/blog-post_09.html

    // பங்காளி... zei...
    ஜீரா...

    கலைஞர் இந்த மாதிரி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இப்போது எதிர்பார்க்கிறேன். அதை விடுத்து குடும்பம் என மூடி மறைத்தால் அது தி.மு.க வை மேலும் பலவீனமாக்கும் என்கிற நியாயமான கவலை எனக்கு உண்டு.

    தி.மு.க வின் மீது எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும்...இட ஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளுக்காகவாவது தி.மு.க வலுவோடு இருக்க வேண்டுமென நினைப்பவன் நான். //

    பங்காளி பொதுவில் எல்லாரும் ஒரு தவறு செய்து விடுகிறார்கள். கருணாநிதியை எதிர்த்தால் அது ஜெயலலிதா ஆதரவு என்று. ஆனால் ஜெயலலிதாவை எதிர்த்தது இன்னும் என்னுடைய எதிர்ப்பு உயிரோடுதான் இருக்கிறது. ஆனால் சென்ற தேர்தல் வரைக்கும் கருணாநிதிக்குக் கொடுத்த வந்த ஆதரவு இந்தத் தேர்தலில் இருந்து எதிர்ப்பாகவே போயிற்று. கட்சியின் கொள்கைகள்..தேர்தல் அறிக்கை...கூட்டணிக்கட்சியினரை நடத்தும் விதம்..உட்கட்சி ஜனநாயகம் என்று திமுக அதிமுகவாகி விட்டது என்பது என் கருத்து. இனிமேல் எதிர்பார்ப்பு எதுவுமில்லை. திமுக வந்து தமிழனைக் காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கையெல்லாம் போயே போச்சு. அவனவன் அவனவனக் காப்பாத்தீக்கோங்கப்பா!


    //// இராம் zei...
    // இராம் zei...
    அண்ணே...

    இந்த நாடும் இந்தநாட்டுமக்களும் நாசமா போகட்டும்'ன்னு வசனம் எந்த படத்திலே? யாரு எழுதுனது??? //

    அநேகமா அந்தப் படம் தேர்தல் தோல்விக்கு அப்புறமா வந்திருக்கும்.

    ஜிரா,

    திரைப்படத்துக்காக எழுதிய வசனத்தை நிஜ வாழ்க்கையோடு குழப்பிக்கொள்ளும் வீணர்கள்'ன்னு யாராவது அறிக்கை விடுவாங்களா???

    ஹி ஹி //

    இன்னும் விடலையா ராமு...விட்டிருக்கனுமே...ஆட்டோ வருதான்னு ஜன்னல் வழியா எட்டிப்பாரு.

    ReplyDelete
  42. http://satrumun.blogspot.com/2007/05/update.html

    // இதனிடையே பத்திரிகைக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் சம்பவம் குறித்த சரியான விபரம் தங்களுக்கு கிடைக்கவில்லை, உயிர் சேதங்கள் இருப்பின் அது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.
    Congress downplays incident of sibling rivalry in DMK //

    இந்தம்மாவுக்கு எப்பவும் இப்பிடித்தான். முந்தி ஒரு வாட்டி..சரியா குண்டு வெடிக்கும் போது மட்டும் காணாமப் போனாங்க. இப்ப இப்பிடியா.

    ReplyDelete
  43. http://theyn.blogspot.com/2007/05/1000_09.html

    வாழ்த்துகள் சிறில். ஆயிரம் செய்தி சொல்லிய அபூர்வ வலைப்பூ! :-)

    போட்டியில் கலந்து கொள்ள முயல்கிறேன்.

    ReplyDelete
  44. http://ennulagam.blogspot.com/2007/05/blog-post_09.html

    இது விஷயமா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை சார். பாதிப்பு இருக்கவே இருக்காதுன்னு உறுதியா சொல்ல முடியலை. கண்டிப்பா பாதிப்புன்னும் உறுதியாச் சொல்ல முடியலை. புட்வேர்ல்டு கடைகள் ஊர் முழுக்க இருக்க. அதுலயே காய்கறிகளும் கிடைச்சிக்கிட்டுதான் இருந்தது. இப்ப காய்கறிக்குன்னு தனிக்கடை.

    ஆனா ஒன்னு. மக்களுக்கு எத எங்க வாங்குறது நல்லதுன்னு தெரிஞ்சிருக்கு. குறிப்பா பெண்களுக்கு. சகோதரியோட ரிலையன்ஸ் கடைக்குப் போயிருந்தேன். சென்னையில. அங்க காய்கறிகள் அது இதுன்னு வாங்குனா. அப்ப மருமகன் பலாப்பழம் வேணும்னு கேட்டதாச் சொன்னா. நானும் ஒரு பாலாப்பழப் பாக்கெட்டைப் பையில போட்டேன். அத அவ எடுத்து வெளிய வெச்சுட்டு. இத வெளிய வாங்கனும். அங்கதான் வெலையும் குறைச்சலா இருக்கும்னு சொன்னா. நானும் சரீன்னு கேட்டுக்கிட்டேன். எது எப்படியோ! எல்லாரும் நல்லாயிருந்தாச் சரி.

    ReplyDelete
  45. http://thulasidhalam.blogspot.com/2007/05/57.html

    பள்ளிக்கூடத்துல என்னென்ன செய்றாங்க பாருங்க. ம்ம்ம்....குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம் போகவே ஆசையா இருக்கும். இது மாதிரி நம்மூர்லயும் செஞ்சு பாக்கலாம்.

    முந்தி நம்மூர்லயும் ஒரு டீவிதான இருந்தது. பாம்பபாம்பாங்குன்னு செவப்பா சுத்திக்கிட்டே வருமே. அதெல்லாம் போயி இப்ப ஒவ்வொரு டீவியும் 24மணி நேரமும் கதறிக்கிட்டிருக்கு. இருந்தாலும் டிடியில அந்த செவ்வாக்கெழம நாடகம் மட்டும் இன்னும் மாறவேயில்லை.

    ஒரு கட்சி ஒடஞ்சதுக்கே இந்த ஆச்சிரியமா? நம்மூர்ல வந்து பாத்தா இவங்கள நேரடியா ஐசியூக்குதான் கொண்டு போகனும்.

    ReplyDelete
  46. http://sirippu.wordpress.com/2007/05/10/sridevi/

    அப்படியே அம்மாதான். வருங்காலத் திரையுலகத்துக்கு ரெண்டு கதாநாயகிகள் ஆச்சு. யாருப்பா அங்க? யாராவது மூன்றுமுடிச்சு ரீமேக்ல எடுக்குறீங்களா? ஸ்ரீதேவி கதாநாயகியா நடிச்ச மொதப்படம் அதான.

    ReplyDelete
  47. http://kilumathur.blogspot.com/2007/05/blog-post_10.html

    கோவியின் ஆத்திரத்தில் நியாயம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். நடப்பது ஒரு குடும்பத் தகராறு. அதிலும் ஒரு மேயரே முன்னின்று தகராறு செய்வதாகக் கூறப்படுகிறது. போனவர்களுக்கு அரசாங்கப்பணத்தை வாய்க்கரிசி போட்டு விடலாம். வாரிசுகளைக் கூட்டி வைத்து பஞ்சாயத்து செய்து விடலாம். அப்படியே கொலையை யார் செய்தார்கள் என்று மூடியும் மறைத்து விடலாம்.

    // மகேந்திரன்.பெ zei...
    என்ன் ஜிகே நீங்களுமா? அவர் அழகிரியோட அப்பா மட்டுமில்லை, முதல்வர், அவரது வேலையை செய்கிறார். அதற்க்காக ரவுடிகளுக்கு ஆதரவு தெரிவித்தால்தான் தவறு //

    மகேந்திரன், அப்படி வாய் திறந்து ஆதரவு சொல்ல கருணாநிதி முட்டாள் அல்ல. இனிமேல் எல்லாவற்றையும் பூசி மெழுகும் வேலைதான் அவருக்கு. நன்றாகவே செய்வார். நாமும் வாழ்க போட்டுக்கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். திமுக இன்னொரு அதிமுகவாகி விட்டது என்பதே என் கருத்து.

    ReplyDelete
  48. http://govikannan.blogspot.com/2007/05/blog-post_10.html

    // கருத்துக் கணிப்பால் பிரச்சினை வரும் என்று எனக்கு முன்கூட்டியே தெரியும். எனவேதான் தினகரன் நிர்வாகத்துடன் போனிலும், நேரில் ஆட்களை அனுப்பியும் இதை வெளியிட வேண்டாம் என்றேன். இது அவசியம் இல்லாத கருத்துக் கணிப்பு. ஆனால் எனது பேச்சைக் கேட்காமல் வெளியிட்டு விட்டனர் என்றார் கருணாநிதி. //

    ஓ இவரு ஏற்கனவே வெளியிட வேண்டாம்னு சொல்லியும் கேக்கலையாக்கும். ம்ம்ம்ம்..அந்த அளவுக்கு வாரிசுக்காய்ச்சல் கொதிக்குது. அவருக்குப் பிறகு பல வண்ணத்திரைப்படத் திருப்பங்கள் காணக்கிடைக்கும்.

    ReplyDelete
  49. http://satrumun.blogspot.com/2007/05/blog-post_540.html

    IT/BT துறைகளுக்கு விலக்கு அளிக்க வில்லையென்றால் கம்பெனிகள் பக்கத்தூருக்குப் பொட்டி கட்டி விடுமே! ஆனாலும் இந்தச் சட்டம் முழுக்க முழுக்க சரியா என்று சொல்ல முடியவில்லை. மருத்துவத்துறையின் முதுகெலும்பே பெண்கள்தான். அந்தத் துறைக்கும் விலக்கு உண்டா?

    ReplyDelete
  50. http://ilavanji.blogspot.com/2005/05/blog-post.html

    // இளவஞ்சி zei...

    என்னை திரும்ப பதிவுலகுக்கு இழுக்க நடக்கும் சதி இது என்பதினை ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்! ஹிஹி... //

    ஆணித்தரமாச் சொன்னாலும் ஆடித்தரமாச் சொன்னாலும்...உங்களைப் பதிவுலகத்துக்குள்ள இழுக்குற சதி வெற்றி பெற உளப்பூர்வமாகப் பாடுபடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

    ReplyDelete
  51. http://idlyvadai.blogspot.com/2007/05/blog-post_7327.html

    நடந்தது மிகப்பெரிய தவறு. முன்பு பஸ் எரிந்ததே அதே அளவிற்குப் பெரிய தவறு. அன்று அதிமுக பதவி விலகியிருந்தால் இன்று ஜெ பேசலாம். கருணாநிதி குற்றவாளி ஆவதால் மட்டும் ஜெயலலிதா உத்தமி ஆக முடியாது. இன்று கருணாநிதி எவ்வளவு கண்டனங்களைச் சம்பாதிக்கிறாரோ...அவையனைத்தையும் ஏற்கனவே சம்பாதித்தவர் ஜெ. இன்று எகிறுகிறார். அது சரி. அரசியலில் அது சகஜந்தான்.

    ReplyDelete
  52. http://myspb.blogspot.com/2007/05/blog-post_09.html

    நல்ல பாடல் இது.

    ப்ரசன்ன, பாக்யராஜ் இளையராஜாவோடு பிரச்சனை கொண்டிருந்தார் என்பதே புதிய செய்தி. அந்தப் படம் வந்த காலகட்டங்களில் சங்கர் கணேஷ்தான் பெரும்பாலும் இசையமைத்துக் கொண்டிருந்தார். டார்லிங் டார்லிங் ஆகட்டும் எங்க சின்ன ராசாவாகட்டும். இன்னும் சொல்லப் போனால் இந்தப் படத்திற்குப் பிறகுதான் இளையராஜாவோடு ஒரு படத்தில் சேர்ந்தார். என்னங்க படம் அது...ஐஸ்வர்யா நடிச்சாங்களே. ஆனால் நீங்க குறிப்பிட்ட காலகட்டத்தில் இளையராஜாவுக்குப் பலரோடு கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான்.

    இந்தப் பாடலைப் பொருத்த வரையில்...இது நல்ல பாடலே. பாலுவும் வாணியும் மிகச்சிறப்பாகவே செய்திருப்பதாகக் கருதுகிறேன். முழுப் பெருமையையும் பாலுவிற்கு மட்டும் தூக்கிக் கொடுப்பதும் ஏற்புடையதல்ல.

    ReplyDelete
  53. http://idlyvadai.blogspot.com/2007/05/blog-post_7327.html

    // Anonymous zei...
    என்ன ராகவரே ஒரேயடியா எகிறிரீரு? அந்த ஜெயா வேண்டாம்னுதானே இந்த உத்தமபுத்திரனுக்கு நீங்க எல்லாம் ஓட்டு போட்டீங்க? ஒரு முதல்வர் அதுவும் போலீஸ் இலாகா மந்திரி பேசும் பேச்சா இது? தர்மபுரி பஸ்ஸை எரித்தவர்களாவது உடனடியாகக் கைது செய்யப் பட்டனர், தூக்கு தண்டனையும் கிடைத்துள்ளது, அதே மாதிரி அழகிரிக்கு தூக்கு கிடைக்குமா அட குறைந்த பட்சம் அவனது ஜாமீனாவது ரத்து ஆகுமா? ஜெயாவின் கேசை பக்கத்து மாநிலத்துக் கொண்டு போனீங்களே அன்றைக்கு அதே போல பக்கத்து கர்நாடாக மாநிலத்தில் அழகிரி கேசையும் ஏன் நடத்தக் கேட்க்கக் கூடாது? ஜெ உத்தமி அல்ல ஊருக்கே தெரியும் அதற்காக உத்தமிகள்தான் கேள்வி கேட்க்க வேண்டும் என்றால் இன்றைக்கு தமிழ் நாட்டில் யாருமே கேட்க்க முடியாது உங்களையும் சேர்த்துதான். முதலில் கருணாநிதி பதவி விலக வேண்டும் கருணாநிதியும், அழகிரியும் தூக்கில் போடப் பட வேண்டும் //

    நண்பரே, நான் எகிறவில்லை. இது தொடர்பான பதிவுகளில் கருணாநிதி செய்தது தவறு. சிபிஐ விசாரணை என்பது நாடகம் என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவு ஜெயின் அறிக்கையைப் பற்றிப் பேசுவதால் நான் ஜெயைப் பற்றி மட்டும் சொன்னேன்.

    // dondu(#11168674346665545885) zei...
    //நடந்தது மிகப்பெரிய தவறு. முன்பு பஸ் எரிந்ததே அதே அளவிற்குப் பெரிய தவறு. அன்று அதிமுக பதவி விலகியிருந்தால் இன்று ஜெ பேசலாம்.//
    என்ன ஸ்வாமி, பஸ் எரிப்பின் போது (பிப்ரவரி 2000) ஜெ பதவியிலேயே இல்லையே? இவ்வளவு ஞாபக மறதியா உங்களுக்கு?

    அன்புடன்,
    டோண்டு ராகவன் //

    டோண்டு சார், நான் அதிமுக பதவி விலகியிருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறேன். நீங்கள் ஜெ என்று படிக்கிறீர்கள். அவ்வளவு அவசரமா உங்களுக்கு?

    அன்புடன்,
    கோ.இராகவன்

    ReplyDelete
  54. http://madhavipanthal.blogspot.com/2007/05/108.html

    வாழ்த்துகள் ரவி. வென்றோம் என நம்பினால்தான் வெற்றி. சென்றோம் என நம்பினால்தான் பயணம். நீங்கள் நம்புகிறீர்கள் இந்தப் பயணம் வெற்றி என. வாழ்த்துகள்.

    ஆன்மீகப் பதிவுகள் தேவையா? தேவைதான். தான் பெற்றதை உற்றதை மற்றவர்க்குச் சொல்வதுதானே. இதில் தவறேதும் இருப்பதாக இல்லை. தமிழர்க்கு ஆன்மீகம் என்பது மொழி சார்ந்ததாகவும் இருக்கிறது. அப்படி இருக்கையில் மொழிவளத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு முயற்சியாக அது இருக்கிறது. ஆகையால் ஆன்மீகப் பதிவுகள் தேவைதான். அதே நேரத்தில் அவை பாகுபாடுகளை ஒழிக்கவும் பயன்பட வேண்டும்.

    ReplyDelete
  55. http://thulasidhalam.blogspot.com/2007/05/58.html

    ரவுண்டாக்குறேன்னு 95ன்னு குறைச்ச பொழைக்கத் தெரியாதவங்கள என்ன செய்றது. 1ன்னு மாத்துனதுதான் சரி. இல்லைன்னா நாலு செண்ட் நட்டமாகுதல்ல.

    தமிழ்நாட்டுலயும் ஒரு வாட்டி அப்படி நடந்துச்சு. ஒரே ஒரு வாட்டி. அதுக்கப்புறம் அப்படி நடக்கவேயில்லை. ஏன்னா யாரும் மண்டையப் போடலையே...அப்பத்தான அனுதாப அலையடிக்கும்.

    ReplyDelete
  56. http://myspb.blogspot.com/2007/05/blog-post_09.html

    ரவீ, இன்று போய் நாளை வா பாடல்கள் எனக்கும் பிடிக்கும். ஆனால் பாக்யராஜின் உச்சப்படம் என்று அதைக் கருத முடியாது. அப்படிக் கருதும் படங்கள்,

    அந்த 7 நாட்கள்
    மௌன கீதங்கள்
    முந்தானை முடிச்சு
    டார்லிங் டார்லிங் டார்லிங்
    எங்க சின்ன ராசா
    சுந்தர காண்டம் (கூட)
    இது நம்ம ஆளு படத்தைச் சேர்க்கலாம் என நினைக்கிறேன். ஆனால் வெற்றிப்படமா என உறுதியாகத் தெரியவில்லை. இருந்தாலும் இயக்கம் பாலகுமாரன். ஆகையால் சேர்க்க வேண்டியதில்லை.

    மற்ற வெற்றிப்படங்கள் அடுத்த வரிசையில் வருகின்றன. இவை தவிர்த்த படங்களில் பாடல் நன்றாக இருக்காது என்று சொல்ல வரவில்லை. பாடல்கள் நன்றாக இருக்கும். படமும் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் மேற்கூரிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும். no match to them. ஆனால் பொதுவில் பாக்யராஜ் படங்களில் பாடல் நன்றாக இருக்கும். ஆரம்பத்தில் மெல்லிசை மன்னர் இசையமைத்த பாமா ருக்மணி, ஒரு கை ஓசை ஆகட்டும்..பிறகு கங்கை அமரன் இசையமைத்த மௌனகீதங்கள் மற்றும் சுவரில்லாத சித்திரங்கள் ஆகட்டும்..பிறகு சங்கர் கணேஷ், இளையராஜா, அவரே இசையமைத்தது என்று பார்த்தாலும் பாடல்கள் சோடை போயிருக்காது. அது ஒரு இயக்குனரின் திறமைதான்.

    ReplyDelete
  57. http://sirumuyarchi.blogspot.com/2007/05/blog-post_11.html

    உதிர்ந்த நட்சத்திரங்கள். உதிராத உள்ளங்கள். குதிர்ந்த பருவம். குதிராத திருமணம். தனிமையை விரட்ட எத்தனை வழிகளைத் தேட வேண்டியிருக்கிறது. ம்ம்ம்ம்...தாய் தந்தைதான் என்றும் துணையோ!

    ReplyDelete
  58. http://valaippadhivu.blogspot.com/2007/05/blog-post.html

    நல்லதொரு ஆதங்கம். நம்மூரில்தான் இவரை விட்டால் நாடே பிழைக்க முடியாது. அவரை விட்டுவிட்டால் உலகமே பிழைக்க முடியாது போன்ற கதாநாயக/நாயகி எண்ணங்கள். நாடு இருக்கும். மக்கள் பிழைப்பர். ஆனால் மாற்றம் என்று வரவேண்டியது மக்கள் மனதிலிருந்து. ஒவ்வொரு நபரும் தான் நல்லவராகவும் சரியான அணுகுமுறை உள்ளவராகவும் மாறத் தொடங்கினால் விரைவில் மாற்றம் வந்து விடும். அரசியல்வாதிகளும் மனிதர்கள்தான். ஆகவே மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும். தொடங்கும். மாற்றம் வரும்.

    ReplyDelete
  59. http://vavaasangam.blogspot.com/2007/05/blog-post_10.html

    ஈ ரோஜு ஒக முக்யமைன ரோஜு. மன வெட்டிகாரு..தெலுகு பிட்டா...புட்னே ரோஜு. மன தெலுகு பாரம்பர்யமு சம்ஸ்க்ருதிலு அந்தா தெலுசி அரவாடுகி செப்பே உத்தமமைன பணி சேஸ்தாவுன்னாரு. அவரிகி ஈ ரோஜு மஞ்சி ரோஜூகா உண்டாலா அனி மேவு அந்தரு வாழ்த்து செப்தாமு. புட்னரோஜு சுபாகாஞ்ச்சனலு!

    (இதுவரைக்கும் நான் பார்த்த தெலுங்குப் படங்களுக்கு நன்றி. இந்த ஒரு பின்னூட்டத்துக்கே ஒரு வேளை சாப்பாடு சரியாப் போச்சு)

    ReplyDelete
  60. http://vavaasangam.blogspot.com/2007/05/blog-post_10.html

    // துர்கா|thurgah zei...
    //ஈ ரோஜு ஒக முக்யமைன ரோஜு. மன வெட்டிகாரு..தெலுகு பிட்டா...புட்னே ரோஜு. மன தெலுகு பாரம்பர்யமு சம்ஸ்க்ருதிலு அந்தா தெலுசி அரவாடுகி செப்பே உத்தமமைன பணி சேஸ்தாவுன்னாரு. அவரிகி ஈ ரோஜு மஞ்சி ரோஜூகா உண்டாலா அனி மேவு அந்தரு வாழ்த்து செப்தாமு. புட்னரோஜு சுபாகாஞ்ச்சனலு!//


    grrrr..ஒன்னுமே புரியவில்லை.என் பங்குக்கு ஒன்னு

    abang vetti.selamat hari jadi.Harap abang akan gembira selalu.Jangan tipu kawan kawan dengan suma palsu.Harap kami semua akan dapat kakak ipar yang tulen.
    daripada,
    adik thurgah

    ஆனால் நான் வாழ்த்து புரியாத மொழியில் சொன்னாலும் அதை தமிழில் அர்த்தம் சொல்லிவிட்டுதான் போவேன்.ஏன்னென்றால் எனக்கு ரொம்ப நல்ல மனசு ;-)//

    ஆத்தா மகமாயி...அப்போ எனக்கு ரொம்ப ரொம்ப நல்ல மனசா? மயிலார் ரொம்பக் கோவமா இருக்காரு. மலேசியா வரைக்கும் பறந்து வந்து நியாயம் கேப்பாரு.

    சரி. நான் சொன்னதுக்கு விளக்கம் சொல்லீர்ரேன். அது தெலுகுல தப்பாக்கூட இருக்கலாம். குறிப்பா வரிகளைக் கோர்த்தமை. தமிழ்ல இருந்து அப்படியே தெரிஞ்ச சொல்லா போட்டுக்கிட்டு வந்தேன். ஒரு எடத்துல மாட்டிக்கிருச்சு.

    ஈ ரோஜு ஒக முக்யமைன ரோஜு. - இந்த நாள் ஒரு முக்கியமான நாள்
    மன வெட்டிகாரு..தெலுகு பிட்டா...புட்னே ரோஜு - நம்ம வெட்டியார்...தெலுங்கு மைந்தன்...பிறந்த நாள்
    மன தெலுகு பாரம்பர்யமு சம்ஸ்க்ருதிலு - நம்முடைய தெலுங்கு பாரம்பரியம் பண்பாடு
    அந்தா தெலுசி - அனைத்தும் அறிந்து
    அரவாடுகி செப்பே உத்தமமைன பணி சேஸ்தாவுன்னாரு. - தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லும் உத்தமப் பணியைச் செய்கின்றார்
    அவரிகி ஈ ரோஜு மஞ்சி ரோஜூகா உண்டாலா அனி - அவருக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய வேண்டுமென்று
    மேவு அந்தரு வாழ்த்து செப்தாமு. - நாங்கள் அனைவரும் வாழ்த்துச் சொல்கிறோம்
    புட்னரோஜு சுபாகாஞ்ச்சனலு! - பிறந்தநாள் வாழ்த்துகள்.

    இது மாதிரி பத்திபத்தியா பிரிச்சுச் சொல்ல முடியுமா? நான் தமிழ்லயே எழுதி ஒங்களுக்குப் புரியல. நீங்க இங்கிலீசுல எழுதி எப்படி எல்லாருக்கும் புரியும்?

    ReplyDelete
  61. http://vavaasangam.blogspot.com/2007/05/blog-post_10.html

    // நாமக்கல் சிபி zei...
    //ஈ ரோஜு ஒக முக்யமைன ரோஜு. //

    இந்த நாள் ஒரு முக்கியமான நாள்

    //மன வெட்டிகாரு..தெலுகு பிட்டா...புட்னே ரோஜு.//

    நம்ம வெட்டிப் பயலாரு! தெலுங்கு பிட்டு படமா பார்த்த நாள்!

    //மன தெலுகு பாரம்பர்யமு சம்ஸ்க்ருதிலு அந்தா தெலுசி அரவாடுகி செப்பே உத்தமமைன பணி சேஸ்தாவுன்னாரு. //

    இந்த தெலுங்கு தேசமே பயனுறும் வகையில் அந்த தெலுங்கு பிட்டு படங்களுக்கு விமர்சனம் எழுதி உயர்ந்த சேவை செய்து வருகிறார்.

    //அவரிகி ஈ ரோஜு மஞ்சி ரோஜூகா உண்டாலா அனி மேவு அந்தரு வாழ்த்து செப்தாமு. //

    அவருக்கு நடிகைகள் ரோஜா, மஞ்சு, ராதிகா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    //புட்னரோஜு சுபாகாஞ்ச்சனலு!//

    பூடான் அரசும் அவருக்கு சுபா மற்றும் காஞ்சனா ஆகியோரின் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது! //

    ஆகா ஆகா! சிபியாரே புல்லரித்துப் போய் விட்டது. செந்தமிழ்ச் செல்வராக இருந்து செந்தெலுங்குக்கு இப்படி இனியது கேட்கின் செய்வீங்கன்னு எதிர்ப்பார்க்கலை. விளக்கம் மிக அருமை. வெட்டி மெய்சிலிர்த்துப் போயிட்டதா கேள்விப்பட்டேன்.

    உங்களப் போல மஞ்ச்சிவாளு இருக்கப் போயே நாட்டுல வர்ஷம் போஸ்துந்தி. நீங்க இட்ல பணி செஞ்சுகிட்டே உண்ணாலி அனி கேட்டுக்கிறோம். எல்லாரும் பாக உண்ணாலி. நாங்க ஏற்கனவே உண்டுட்டோம். :-)

    ReplyDelete
  62. http://vavaasangam.blogspot.com/2007/05/blog-post_10.html

    // துர்கா|thurgah zei...

    நீங்க late.சிபி அண்ணா சொல்லிட்டு போயிட்டாரு.யாரு இது மயிலார்.நான் சிங்கப்பூர் பொண்ணு,முடிந்தால் அங்கே சந்திப்ப்போம் //

    ஓ ஜிங்கப்பூரா! தாயா அண்ணா சிங்கப்பூரா! அந்த ஜிங்கப்பூரா? ஒங்க ஊர்ல ஒரு ஜிங்கம் இருக்குதே ஜிங்கம்...பாலத்துக்குப் பக்கத்துல உக்காந்துக்கிட்டிருக்குதே..வெள்ளை ஜிங்கம். அந்த ஜிங்கத்துக்கே ஐதராபாத்துல இருந்து பிரியாணி வாங்கி அனுப்பிச்சிருக்கோம். எல்லாம் வெட்டி தயவு. தெரிஞ்சுக்கோங்கம்மா.

    ////இது மாதிரி பத்திபத்தியா பிரிச்சுச் சொல்ல முடியுமா? நான் தமிழ்லயே எழுதி ஒங்களுக்குப் புரியல. நீங்க இங்கிலீசுல எழுதி எப்படி எல்லாருக்கும் புரியும்? //

    அதுக்குதான் எங்க மலேசியா பதிவில் வந்த மலாய் கத்துகனும்.எல்லாம் ஒரு விளம்பரம்தான் அண்ணா ;-) //

    மலாய்னா டீ பாலாடைதானே. மதுரைல ஜிகிரிதண்டான்னு ஒன்னு இருக்கு. அதோட தலைல ஜலஜலன்னு போட்டுக் குடுக்குறாங்க. அடடா! அது..மலாய். இதுக்கு ஏன் மலேசியா வரைக்கும் போகனும். மலேசியா போயிருக்கேன். டிலாரங் மாசூக். ஹி ஹி.

    ReplyDelete
  63. http://vavaasangam.blogspot.com/2007/05/blog-post_10.html

    // கப்பி பய zei...
    /உங்களப் போல மஞ்ச்சிவாளு இருக்கப் போயே நாட்டுல வர்ஷம் போஸ்துந்தி. நீங்க இட்ல பணி செஞ்சுகிட்டே உண்ணாலி அனி கேட்டுக்கிறோம். எல்லாரும் பாக உண்ணாலி. நாங்க ஏற்கனவே உண்டுட்டோம். :-)
    //

    ஜிரா,

    வெட்டியை விட நீங்க் நல்லா தெலுகு பேசறதைப் பார்த்தா எனக்கு மைல்டா டவுட் வருதே :))) //

    கப்பி, மன தெலுகுலோ மாட்லாடுத்தம். கன்னடதல்லி மாத்தாடுதினி. மலையாளத்தில் சம்சாரிக்கும். என்ன கழுத...இந்த இந்திதான் மாலும் நை. தெரிஞ்சிருந்தா நான் அவனில்லை.

    ReplyDelete
  64. http://vavaasangam.blogspot.com/2007/05/blog-post_10.html

    // கப்பி பய zei...
    //அவருக்கு நடிகைகள் ரோஜா, மஞ்சு, ராதிகா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்//

    தள,

    சற்றுமுன் வந்த செய்தி: நமீதா ஷூட்டிங் ஸ்பாட்டில் இனிப்பு விநியோகித்து வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். //

    என்னய்யா இது..இப்பத்தான் சாண்ரா புல்லக்கு போன் போட்டு வைன் பாட்டிலை ஒடைச்சிக் குடிச்சி வெட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடுறாங்களாம். இப்ப வெட்டி ஆணி பிடுங்கீட்டிருக்கிறதால ஆவணியில அவரைச் சந்தித்து வாழ்த்துச் சொல்ல இருக்காங்களாம்.

    ReplyDelete
  65. http://vavaasangam.blogspot.com/2007/05/blog-post_10.html

    // துர்கா|thurgah zei...
    @ராகவன்
    /ஓ ஜிங்கப்பூரா! தாயா அண்ணா சிங்கப்பூரா! அந்த ஜிங்கப்பூரா? ஒங்க ஊர்ல ஒரு ஜிங்கம் இருக்குதே ஜிங்கம்...பாலத்துக்குப் பக்கத்துல உக்காந்துக்கிட்டிருக்குதே..வெள்ளை ஜிங்கம். அந்த ஜிங்கத்துக்கே ஐதராபாத்துல இருந்து பிரியாணி வாங்கி அனுப்பிச்சிருக்கோம். எல்லாம் வெட்டி தயவு. தெரிஞ்சுக்கோங்கம்மா.//

    இதுக்கு பெயர்தான் வெட்டி பந்தா ;-) //

    அம்மா துர்கா, வெட்டி விளையாடாத பந்தா? வழக்கமா இந்த சச்சின் டெண்டுல்கர் கூட்டணி வெட்டிகிட்டதாம் பந்த ஆசி வாங்கீட்டுப் போகும். இந்த வாட்டி பெரிய இவங்களாட்டம் போனாங்க. என்னாச்சுன்னு தெரியும்ல.

    // டிலாரங் மாசூக் மட்டும் தெரியுதுன்னா உங்களை எத்தனை பெயர் மலேசியாவில் விரட்டி அடிச்சி இருப்பாங்க அண்ணா.ஹிஹி.அதுதான் உள்ளே வரதேன்னு மட்டும் உங்களுக்குத் தெரியுது //

    அடடே! அவ்வளவு குறைச்சலா எடை போடாதம்மா....மொதல்ல குராங்கான் லாஜு. மெல்ல மெல்ல மாசூக். :-)

    ReplyDelete
  66. http://vavaasangam.blogspot.com/2007/05/blog-post_10.html

    தற்போதைய செய்தி. அண்ணாகாரு வெட்டிகாரு இப்பொழுது ரொம்பவும் பிசிகா உண்ணாரு. ஆகையால நெதர்லாந்து வந்து எனக்கு டிரீட் கொடுக்க முடியாது காதா...தானிகி...எனக்கு 500யூரோ அனுப்பியிருக்காரு. தானி பெட்டி எனக்கு நானே டிரீட்டிக்கனுமாம். யாருக்கும் இய்ய கூடாதாம். :-) வெட்டி புகழ் ஓங்குக.

    ReplyDelete
  67. http://vavaasangam.blogspot.com/2007/05/blog-post_10.html

    // வெட்டிப்பயல் zei...
    மக்களே!!!
    டீம் லஞ்ச் போறேன்... வந்து கண்டினியூ பண்றேன்... //

    இந்த டீம் எந்த டீம்? சாண்ரா புல்லக் தனியா வந்து பாக்குறதா சொல்லீருக்காங்க. கேட் வின்ஸ்லெட் நேத்து ராத்திரி 12மணிக்கே வந்து பாத்துட்டு போயாச்சு. அப்ப கிர்ஸ்டென் டண்ஸ்ட், கெய்ரா நைட்லி, எம்மா வாட்சன், ஆன் ஹாத்வே, மார்கரீட்டா லெவீயா ஆகியோர் அடங்கிய டீம்தானே?

    ReplyDelete
  68. http://vettrikandaswamy.blogspot.com/2007/05/blog-post.html

    பார்த்தேன் வெற்றி. நல்லதொரு பதிவு. நல்லதொரு தொகுப்பு. அடுத்த பாகங்களையும் காணக் காத்திருக்கிறேன். இலங்கையில் அமைதி தவழ்ந்து, ஈழத்தமிழர் பீடு வாழும் நாளை விரும்பிக் காத்திருக்கிறேன். அந்த நாள் விரைவில் வரும். கண்டிப்பாக வரும்.

    ReplyDelete
  69. http://sirumuyarchi.blogspot.com/2007/05/blog-post_09.html

    இதைப் படித்தவுடன் படக்கென்று கண்ணதாசனின் வரிகள் நினைவிற்கு வருகின்றன

    ரசிக்கத்தானே இந்த அழகு
    ரசனையோடு வந்து பழகு

    ReplyDelete
  70. http://sirumuyarchi.blogspot.com/2007/05/blog-post_09.html

    // முத்துலெட்சுமி zei...

    ராகவன் என்ன பாட்டுங்க அது நியாபகமே வரலை. //

    நாடோடி படத்தில் மெல்லிசைமன்னர் இசையில் இசையரசி பாடியது. இதே படத்தில்தான் "அன்றொரு நாள் இதே நிலவில்" என்ற பாட்டும் "நாடு அதை நாடு" என்ற பாடலும் உள்ளது.

    ReplyDelete
  71. http://birund.blogspot.com/2007/05/blog-post_09.html

    இதுனால இந்தியாவிற்கு...குறிப்பாக தமிழகத்துக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன?

    ReplyDelete
  72. http://vinaiooki.blogspot.com/2007/05/blog-post_09.html

    கடவுள் எல்லாருக்கும் பொது. எல்லாரையும் ஒன்றாகத்தான் நேசிக்கிறார். ஆனால் நாம்தான் கூடக் குறைய என நினைத்துக் கொண்டு நம்மையும் ஏமாற்றி கடவுளையும் ஏமாற்றப் பார்க்கிறோம். அன்பே சிவம்.

    ReplyDelete
  73. http://isaiinbam.blogspot.com/2007/05/2.html

    சிவிஆர், எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்பகாலப் பாடல்கள் நன்றாகவே இருக்கும். முடிந்த வரையில் சுயமாகவே செய்தார். சின்னப்பூவே மெல்லப் பேசு என்ற படத்தில் அறிமுகமானார். அதில் வரும் பாடல்கள் அனைத்துமே அருமை. பிறகு சிதாரா விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் இணைந்து நடித்த படம்..பெயர் மறந்து விட்டது...சொல்லிக் கொடுத்தா குயிலு சிந்து படிக்கும் என்ற பாடல் நினைவில் இருக்கிறது. புதுப்புது ராகங்கள் என நினைக்கிறேன். இந்தப் படத்தில் அத்தனை பாடல்களும் நன்றாக இருக்கும். ஆனால் என்னவோ பிறகு திடீரென மாறி விட்டார். இன்னும் சொல்லப் போனால் அதற்குப் பிறகுதான் இவருக்கு வாய்ப்புகள் நிறைய கிடைத்தன. இவருடைய பல பாடல்கள் பழைய தமிழ்ப் பாடல்களின் ஆலிங்கணங்களே.

    ReplyDelete
  74. http://poonspakkangkal.blogspot.com/2007/05/blog-post.html

    பொன்ஸ், உண்மையச் சொன்னா மீதிக்கதைதான் கதை. முதல் பாதி கத்தரித்திருக்கலாம். கற்பனை முடிவானாலும் நல்ல முடிவு. அதுதான் சிறப்பு.

    ReplyDelete
  75. http://balaji_ammu.blogspot.com/2007/05/ii-13.html

    7. மங்கையரில் மகராணி மாங்கனி போல் பொன்மேனி

    10. வரவு எட்டணா செலவு பத்தணா

    இப்போதைக்கு இதத்தான் கண்டுபிடிக்க முடிஞ்சது.

    ReplyDelete
  76. http://balaji_ammu.blogspot.com/2007/05/ii-13.html

    7. மங்கையரில் மகராணி மாங்கனி போல் பொன்மேனி

    10. வரவு எட்டணா செலவு பத்தணா

    இப்போதைக்கு இதத்தான் கண்டுபிடிக்க முடிஞ்சது.

    ReplyDelete
  77. http://satrumun.blogspot.com/2007/05/blog-post_7538.html

    ஒன்றுமில்லாததை ஊதிப் பெரிதாக்குவதில் நம்மவர்கள் பெரியவர்கள். கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் செய்தியாகியிருக்காது. பலருக்கும் தெரிந்திருக்காது. இப்பொழுது! எதிர்ப்பதினாலேயே விளம்பரம் தேடித்தருவதில் இந்தியர்கள் பெரியவர்கள்.

    ReplyDelete
  78. http://satrumun.blogspot.com/2007/05/blog-post_12.html

    அப்துல்கலாம் வீட்டுக்கு இன்னமும் ஆட்டோ போகலையா! அவருக்கு மக்கள் ஆதரவு இருக்குன்னு எல்லாருக்கும் தெரியுமே! ஆனா அரசியல்வாதிகள். குறிப்பா காங்கிரஸ்...அவங்களுக்குத்தான் கலாம் வேப்பங்காயா கசக்குறாரே!

    ReplyDelete
  79. http://saathveegan.blogspot.com/2007/05/blog-post_11.html

    இதை மின்னஞ்சலில் படித்திருக்கிறேன். குழந்தைகள் குழந்தைகள். ஆயிரம் குறும்பு செய்தாலும் அவை குழந்தைகள். அந்தக் குழந்தையின் கேள்விக்கு விடையுண்டா? அதனால்தான் தற்கொலை செய்தார் தந்தை. சற்று சிந்தித்திருப்பாரேயானால் இருவரும் சுகமாக வாழ்ந்திருப்பார்கள். அன்பின் வழியது உயிர்நிலை.

    ReplyDelete
  80. http://espradeep.blogspot.com/2007/05/blog-post.html

    கட்டிய வரிக்குக் கணக்குக் கேட்டா ஒடம்புல வரிவரியா போட்டுரப் போறாங்க. புழுக்கத்தைக் கூடப் பொறுத்துக்கலாம். ஏசி ரூம்ல தூங்கீட்டு வெட்டி நியாயம் பேசுற அந்த அரசியல்வாதிப் பயகள/பொம்பளைகள விடுங்க. ஒன்னும் பண்ண முடியாது. இப்போதைக்கு ஒரு ஜெனரேட்டர் வாங்கி வெச்சுக்கிருங்க.

    ReplyDelete
  81. http://sivabalanblog.blogspot.com/2007/05/blog-post_11.html

    பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமை தவறே. உட்பகை இவ்வளவு வெளிப்படையாகத் தெரிந்து விட்டது.

    சரி. எல்லாரும் தயாநிதிமாறனைக் கும்முகிறீர்கள். சரி. கும்மப்பட வேண்டிய அழகிரியை எல்லாரும் மறந்து விட்டீர்களே. இந்தத் தயாநிதியைப் பத்திரிகைகள் பலிகடாவாகச் சித்தரிக்கட்டும். ஆனால் அழகிரி தப்பித்துக் கொண்டிருக்கிறாரே. அதைப் பற்றியும் பேசுவதே சரி. மகனா மருமகன் குடும்பமா என்று கருணாநிதி முடிவெடுத்து விட்டது தெரிந்தது. திமுகவிற்கு இதனால் ஆபத்து வரும் என்று நினைக்கவில்லை. அழகிரிக்கும்தான். தயாநிதி பதவி விலகல்/பறிப்பு மட்டும் நடக்கும்.

    ReplyDelete
  82. http://muruganarul.blogspot.com/2007/04/blog-post_30.html

    முருகப்பெருமானை அடியவர் வழிபடு முறையினைத் தமிழ்படு கவிதையில் அழகாக இயம்பியுள்ளார் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் அவர்கள். அதை இசைபடு மொழியில் பாடிச் சிறப்பித்திருக்கிறார்கள் சூலமங்கலம் சகோதரிகள். இந்தப் பாடலைக் கேட்கவும் ஆவலாக உள்ளது. சுட்டி கிடைக்குமா?

    வேலும் மயிலும் கூடி நாடி வரும் அடியவர்க்குக் கந்தன் கொடுக்கும் அற்புதக் காட்டியை அன்றி காலமெல்லாம் இனிக்கும் காட்சி எது!

    ReplyDelete
  83. http://blog.arutperungo.com/2007/05/blog-post.html

    கடைசியாகச் சொல்லியிருக்கும் மொழிபெயர்ப்புக் கவிதை மிக அருமை. ரசித்தேன்.

    // "சுற்றுலா போக என்னவெல்லாம்
    எடுத்து வைக்க?" - அப்பாவியாய்க் கேட்கிறாய்.
    இரண்டு இதயமும், ஒரு கனவும் போதாதா? //

    இரண்டல்ல இதயங்கள்
    ஒன்றென்றாய்
    இன்று இரண்டானது எப்படி?

    ReplyDelete
  84. http://sirippu.wordpress.com/2007/02/19/malayalacinema

    சமீபத்திய மம்முட்டியின் ராஜமாணிக்கம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தமிழ்நாட்டில் நடக்கும். ஆனால் எல்லா நல்ல பாத்திரங்களும் மலையாளிகள். வில்லத்தனம் செய்யும் மலையாளிப் பாத்திரம் கூடத் திருந்தி விடும். ஆனால் சேவியர் நாடார் என்ற பாத்திரம் மட்டும் திருந்தாமல் மாடு முட்டிச் செத்துப் போவார். சிவப்புச் சட்டை போட்டிருப்பார். அதில் வரும் தமிழ் அரசியல்வாதிகளும் காமெடியன்கள்தான். இந்த மம்முட்டிதான் மிகவும் கண்ணியமாக ஐயர் தி கிரேட்-டில் நடித்தது.

    மேலேபரம்பில் ஆண் வீடு என்றொரு படம். மலையாளி ஒருவன் பொள்ளாச்சிக்கு வேலைக்கு வருகிறான். அங்கு தமிழ்ப் பெண் ஷொபனாவைத் திருமணம் செய்து கொள்கிறான். பிரச்சனைகள் வருகின்றன. இந்தப் படம் நடுநிலையானது என்று சொல்லலாம். மலையாளப் படம் என்று பார்க்கப் போகையில்...இந்தப் படத்தை மன்னித்து விடலாம்.

    ஆனால் கிளாஸ்மேட்ஸ் வேறு விதம். அதில் பாலச்சந்திரமேனன் பாத்திரம் தமிழ்ப் பாத்திரம். அது மிகுந்த குணச்சித்திரம் கொண்ட பாத்திரம். அந்தப் பாத்திரம் தனது மனைவியோடும் மகனோடும் மட்டும் தமிழ் பேசும். மகன் இறந்த பின் அம்மா தமிழில்தான் கதறுவார். மகனோடு படித்தவர்கள் மனைவி மக்களோடு வருகையில், "நம்ம மகனும் இருந்திருந்தா இப்பிடி மனைவியோட வந்திருப்பான் இல்ல" என்று புலம்புவார். கிளாஸ்மேட் இந்த விஷயத்தில் பாராட்டப் படவேண்டியதே. நல்ல படமும் கூட. கண்டிப்பாக பாருங்கள்.

    பொதுவாக இப்பொழுது புதிதாக வரும் இயக்குனர்களே மசாலாவை அள்ளித் தெளிக்கிறேன் என்று இந்த மாதிரி குசும்புகள் செய்வது. பெரிய இயக்குனர்கள் அமைதியாகவே இருக்கிறார்கள்.

    ReplyDelete
  85. http://sivabalanblog.blogspot.com/2007/05/blog-post_11.html

    // முத்துகுமரன் zei...
    //சரி. கும்மப்பட வேண்டிய அழகிரியை எல்லாரும் மறந்து விட்டீர்களே. இந்தத் தயாநிதியைப் பத்திரிகைகள் பலிகடாவாகச் சித்தரிக்கட்டும். ஆனால் அழகிரி தப்பித்துக் கொண்டிருக்கிறாரே.//
    ஆளுக்கொரு வாளெடுத்து போய் சீவிவிடுவோமா :-). ///

    தேவையில்லை. தயாநிதி மாறனை வாளெடுத்தா சீவிவிட்டோம். ஆனால் அதைப் பற்றிய பேச்சே இல்லை என்பதுதான் நான் சொல்ல வருவது.

    // அழகரியின் செயல் காட்டுமிராண்டிதனமானதே. அது கண்டிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்தேதும் இல்லை. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. பார்ப்போம் என்ன மாதிரியான விசாரணை நடக்கிறது என? இந்தபதிவு தயாநிதியைப் பற்றீ என்பதாலே அவருக்கு கும்மி. பதிவுக்கு வெளியே போவது அறமாகாது :-) //

    சிபிஐ விசாரணை என்றால் தெரியாதா முத்துக்குமரன். எத்தனை விசாரணைகள் நடந்திருக்கின்றன. அழகிரி உத்தமராகவே இருப்பார். யாராவது தொண்டர்கள் தியாகியாவார்கள். பூசி மெழுகல் நடக்கும். நம்ம அறத்துக்குள்ளயே இருந்து பேசுவோம் முத்து. அதுக்கு வெளியில போக வேண்டாம்.

    // அருண்மொழி zei...
    ராகவன்,

    அழகிரி சொல்லித்தான் தாக்குதல் நடந்ததா என்பது எனக்கு தெரியாது - உங்களுக்கும் தெரியாது என்று நம்புகின்றேன். //

    நிச்சயமாக. நடந்ததை நேரில் பார்த்தவன் இல்லை நான். அழகிரி மீதான ஆதாரங்களும் என்னிடம் இல்லை.

    // அதற்காக அழகிரிக்கு நான் support செய்கின்றேன் என்று நினைக்கவேண்டாம். CBI விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறார்கள். அதை பற்றி விளம்பரங்கள் பத்திரிக்கைகளில் வந்துள்ளது. விசாரணையின் முடிவில் அவர் குற்றவாளி என்றால் அதற்குரிய தண்டனை பெறுவார். //

    இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே அருண்மொழி. சரி. என்ன நடக்குதுன்னுதான் பாப்பமே.

    // வட இந்தியாவில் எங்கே குண்டு வெடித்தாலும் - அது ISIயின் செயல்.
    ஆந்திராவில் வெடித்தால் - அது நக்ஸல் செயல்.
    தமிழ்நாட்டில் வெடித்தால் - அது புலிகளின் செயல்.
    மதுரையில் வெடித்தால் - அது அழகிரியின் செயல்.

    இந்நிகழ்ச்சியில் Sun Tvயின் செயலும், கலாநிதி மாறனின் செயலும் மிகத்தவறு என்பது என் கருத்து. //

    கலாநிதி மாறனின் எந்தச் செயல் தவறு? கருத்துக்கணிப்பை வெளியிட்டதா? அதில் எல்லா கட்சியினரையும் இழுத்திருக்கிறார்கள். பொதுவில் இது போன்ற கருத்துக்கணிப்புகள் மிகுந்த எச்சரிக்கையோடு கையாளப்பட வேண்டும். அது நடக்கவில்லை. அது தவறு என்பதற்காக அந்த வன்முறை தவறாகாது என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர் என்றே நம்புகிறேன். உங்கள் எழுத்தும் அதைத்தான் சொல்கிறது. அழகிரி செய்திருக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். வாய்ப்பிருக்கிறது என்று நினைக்கிறேன் நான். அவ்வளவுதான் வித்யாசம்.

    ReplyDelete
  86. http://sivabalanblog.blogspot.com/2007/05/blog-post_11.html

    என்னைக் கேட்டால் தயாநிதிமாறன் பதவி விலகக் கூடாது என்றுதான் சொல்வேன். அவர் சிறந்த அரசியல்வாதியாக இல்லாமல் இருக்கலாம். தனியாக நின்றால் ஓட்டு விழாமல் கூட இருக்கலாம். ஆனால் ஒரு அமைச்சராக அவர் தொடர்வதையே விரும்புகிறேன்.

    ReplyDelete
  87. http://shylajan.blogspot.com/2007/05/blog-post.html

    நீங்க சொன்ன நிழக்ச்சிதான் நிதர்சனம். அம்மா என்று அன்பு. தாயிற் சிறந்த கோயிலுமில்லை. அம்மா நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டீர்கள். ம்ம்ம்ம்...அம்மா!

    ReplyDelete
  88. http://shylajan.blogspot.com/2007/05/blog-post.html

    நீங்க சொன்ன நிழக்ச்சிதான் நிதர்சனம். அம்மா என்று அன்பு. தாயிற் சிறந்த கோயிலுமில்லை. அம்மா நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டீர்கள். ம்ம்ம்ம்...அம்மா!

    ReplyDelete
  89. http://gopinath-walker.blogspot.com/2007/05/blog-post_13.html

    இந்தப் படத்தப் பாத்ததும் கண்ணுல தண்ணி வந்துருச்சு கோபி. தாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் அன்பு எனச் சொலல்.

    ReplyDelete
  90. http://muruganarul.blogspot.com/2007/05/043.html

    //// kannabiran, RAVI SHANKAR (KRS) zei...
    //பாதிசக்தி ஆனவர்தம்
    நீலிக்கண்ணிலே பிறந்த முருகன் வந்தான்
    //

    விளக்குங்க ஜிரா.
    நம்ம ஊரிலே நீலிக்கண், நீலிக்கண்ணீர்-ன்னாலே வேறு அர்த்தம் ஆகி விட்டது! :-) //

    நான் விளக்கனுமா ரவி? நீங்களே விளக்கலாமே. நீலிக்கண் என்று சொல்லப்படுவது நெற்றிக்கண். நீலிக்குக் கண்ணீர் நெற்றியிலே என்று சொல்லும் பழமொழியும் பிரபலமே.

    ////ஆங்கார சக்தி என்னும்
    ஓங்காரத் தாமரைக்குள்
    ரீங்காரம் செய்யும் வண்டு
    கந்தன் வந்தான்//

    பாட்டின் மகுடமே இங்கு தான்.
    அவ்வளவு அற்புதமான வரிகள்.
    ஆங்கார-ஓங்கார-ரீங்கார என்று அவ்வளவு அருமை!

    சோமாஸ்கந்த திருவுருவத்தை நினைவுக்குக் கொண்டு வரும் வரிகள்.
    தாமரைக்கும் தண்டுக்கும் இடையே தாவிப் பாயும் வண்டோ அந்த முருகன்! //

    உண்மைதான் இந்த வரிகள் அப்பன், அம்மை, மகன் மூவரையும் இணைக்கும் வரிகள். அதைத்தான் கவிஞரும் இங்கு சொல்கிறார்.

    ReplyDelete
  91. http://muruganarul.blogspot.com/2007/05/043.html

    // kannabiran, RAVI SHANKAR (KRS) zei...
    இந்தப் படத்தை ஒரு முறை கண்டு களித்த போழ்து, கண்களுக்கு மற்றுமொரு அரும்பொருளாய் புலப்பட்டது!

    தாமரை என்றாலே திருமகள் அல்லவா?
    அந்தத் தாமரைக்குள் இருக்கும் ஓங்காரத் தேன் பெருமாள்.

    அந்த மாமனிடம் காதல் கொண்டு
    ஓங்காரத் தேன் பருக
    ரீங்காரம் செய்ய வந்தான்
    மருகன், வண்டாய் முருகன்! //

    இது நீங்கள் சொல்லும் பொருள் ரவி. கவிஞர் சொல்வது அதல்ல. சோமாஸ்கந்தந்தைச் சொல்கிறார் கவியரசர். மேலும் இங்கு ஓங்காரம் என்பது தாமரை. அந்தத் தாமரையோடு சேர்ந்தது சக்தி. அந்த சிவசக்தியோடு ரீங்காரம் செய்யும் வண்டு முருகன். நீங்கள் சொல்லும் பொருளில் ஆங்கார சக்தி காணப்படவில்லையே.

    ReplyDelete
  92. http://myspb.blogspot.com/2007/05/blog-post_13.html

    நல்ல பாடல். ரவி, நீங்கள் இசையரசியும் பாடும் நிலாவும் இணைந்து பாடிய "ஓடம் கடலோடும்" என்ற பாடலையும் கேட்கவும். மிகவும் ரசிப்பீர்கள்.

    ReplyDelete
  93. http://cdjm.blogspot.com/2007/05/blog-post_13.html

    நல்ல விமர்சனம். இந்தப் படத்தை இன்னமும் பார்க்கவில்லை. பெரியாரைப் பற்றித் தெரிந்தது மிகக் குறைவு. இந்தப் படம் எல்லாமும் சொல்லியிருக்கும் என்று நினைக்கவில்லை. ஆனாலும் விவரங்கள் நிறையத் தெரியவரும் என்று உங்கள் விமர்சனத்திலிருந்து தெரிகிறது.

    சத்யராஜ் இதுவரை நடித்த குண்டக்கமண்டக்க கில்பான்ஸ் படங்களுக்கு இது ஒரு பிராயச்சித்தம். இந்தப் படத்தில் நடித்ததால் அவர் புண்ணியராக மாட்டார். அவர் ஒரு நடிகர். நன்றாக நடித்திருக்கிறார் என்று மட்டுமே கொள்ள வேண்டும். பெரியாராக நடித்ததால் அவர் பெரியார் அல்ல.

    ReplyDelete
  94. http://muruganarul.blogspot.com/2007/05/043.html

    // வெற்றி zei...
    இராகவன்,
    இதுவரை கேட்டிராத பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. //

    வெற்றி அருமையான பாடல் இது. முடிந்தால் இறக்குமதி செய்து கேளுங்கள். நல்ல தமிழ்ப் பாக்களை விரும்புகிறவர்கள் இதையும் விரும்புவார்கள்.

    ///* நம்ம ஊரிலே நீலிக்கண், நீலிக்கண்ணீர்-ன்னாலே வேறு அர்த்தம் ஆகி விட்டது! :-) */

    ரவி, முற்றிலும் உண்மை. எங்கட ஊரிலும் இதே நிலைதான், -;))) //

    வெற்றி, அதற்குக் காரணம் பழையனூர் நீலி. அவள் பெயர் நீலிதானா என்று தெரியவில்லை. அழுது அழுதே காரியம் சாதித்தாள். அவளால் திருவாலங்காட்டு நெசவாளர்கள் எல்லாரும் தீப்பாய்ந்தார்கள். ஆனால் அவள் கணவனைப் பழிவாங்கி விட்டாள். அது உண்மை. அனைத்திற்கும் ஆலங்காட்டு ஈசனே சாட்சி.

    ReplyDelete
  95. http://muruganarul.blogspot.com/2007/05/043.html

    // கோவி.கண்ணன் [GK] zei...
    மிக அருமையான அழகான பாடல் ! //

    ஆமாம் கோவி. மிக அழகான பாடல். கவியரசரின் சொல்நயம் மிக அருமை.

    ReplyDelete
  96. http://muruganarul.blogspot.com/2007/05/043.html

    // kannabiran, RAVI SHANKAR (KRS) zei...
    //நீங்கள் சொல்லும் பொருளில் ஆங்கார சக்தி காணப்படவில்லையே//

    ஜிரா
    கவிஞர் அடியேன் சொன்ன பொருளில் பாடவில்லை தான்.
    அதான் சோமாஸ்கந்தம் என்று முதல் பின்னூட்டத்திலேயே சொல்லி விட்டேனே!

    ஆங்கார சக்தி = பிரகருதி, அதுவே தண்டு.
    ஓங்காரம்/தாமரை = பெருமாள்/திருமகள்
    இதே போன்ற வர்ணனை திருமழிசைப்பிரான் கவியிலே வரும்!

    அதில் ரீங்கரிக்கும் வண்டு நம்ம மருகன் என்று நான் தான் சும்மா ஒரு சுவைக்குக் கொண்டேன். அவ்வளவே! :-) //

    அதத் தெளிவாச் சொல்லீருங்க. ஏன்னா..நீங்க ஆன்மீகப் பதிவு போடுறவரு. நீங்க சொல்றது சரின்னு இங்க நெறையப் பேரு நெனைப்பாங்க. ஆகையால கொஞ்சம் பாத்துக்கோங்க ரவி. :-)

    // இப்படிப் பல்வகையாலும் பொருத்தி மகிழ்வதும் ஒரு இன்பம் தானே!
    திருப்புகழின் ஒவ்வொரு அடியிலும் பெருமானே என்னாது பெருமாளே என்று தானே இன்புறுகிறோம்! :-) //

    மறுபடியும் மன்னிக்கனும். பெருமாள் என்பது பெரும் ஆள். அந்த வகையில்தான் அருணகிரி அந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். கண்ணன் மருகன் என்று சொன்னதெல்லாம் சரிதான். ஆனால் கோனாடு சூழ் விராலி மலையுறை பெருமாளே என்று சொல்லும் பொழுது அது முருகனை மட்டுந்தான் குறிக்கிறது. இந்த இடத்தில் அந்தப் பெருமாள் வரவில்லை.

    ReplyDelete
  97. http://gowrykaran.blogspot.com/2007/05/blog-post_5946.html

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ப்ரபா. இறையருளால் நீடு வாழ்க. பீடு வாழ்க.

    ReplyDelete
  98. http://dharumi.blogspot.com/2007/05/216.html

    தருமி, எப்பொழுது ஒன்று வளரும் தெரியுமா? நெருக்கடி கொடுக்கப்படும் பொழுதுதான். ஆதரவை விட எதிர்ப்பு ஒன்றை வளர்த்து விடும். அந்த வகையில் எம்.ஜி.ஆரை வளர்த்து விட்டது கருணாநிதி என்றே நினைக்கிறேன். இந்த ஜெயலலிதா....காணமப் போயிருக்க வேண்டிய இவங்க இந்த அளவுக்கு இன்னமும் அரசியல்ல இருக்கக் காரணம் கருணாநிதிதான். வைகோ விஷயத்துல கருணாநிதி தீவிர எதிர்ப்பெல்லாம் காட்டலை. காட்டியிருந்தா வளர்ந்திருப்பாரு. விஜயகாந்தப் பாருங்க...குடிகாரன்னு ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு சொல்றாங்க. அவருக்கு ஓட்டு வந்து விழுகுது. இப்பிடித்தாங்க..கண்டுக்காம விட வேண்டியவங்கள...தேவையில்லாம எதிர்த்து வளர்த்து விடுறாங்க.

    உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்குப் போஸ்டர் அடிக்கக் கூட விடாம தடுத்தாங்களாம். அப்பத்தான் பாண்டு (நகைச்சுவை நடிகர்) ஸ்டிக்கர் ஐடியா குடுத்தாராம் எம்.ஜி.ஆருக்கு. ஸ்டிக்கர் அடிச்சு கண்ட எடத்துலயும் ஒட்டி வெச்சுட்டாங்க. எல்லார் கையிலயும் பொழங்குச்சாம். படம் ஓடுன ஓட்டம் சொல்ல வேண்டியதில்லை. இன்னைக்கு அதத்தான் அழகிய தமிழ் மகன்னு ரீமேக் பண்றாங்க.

    தயாநிதி விஷயத்துக்கு வருவோம். அதிமுக வருங்காலம் கருத்துக்கணிப்பு இனிச்சது. திமுக கருத்துக்கணிப்பு கசந்தது. அப்ப திமுகவுக்கு வேண்டியது ஒரு அடியாள் பத்திரிக்கை. அது நடக்கலைன்னு சொன்னதும்....வெட்டு குத்து. இப்ப எல்லாரும் தயாநிதி மாறனைப் பத்தித்தான் பேசுவாங்க. அழகிரி பத்தி பேச்சே இருக்காது. சிபிஐன்னு சொல்வாங்க. நம்மூர் சிபிஐ விசாரணை தெரியாதா....அட போங்க சார். அழகிரிதான் செஞ்சாருன்னு நம்ம கிட்ட ஆதாரமா இருக்கு. இருந்தாலும் இன்னமுமா விட்டு வெச்சிருப்பாங்க. blood is thicker than water. முந்தி தயாநிதியைப் பாராட்டுனவங்க இப்ப அவரத் துரோகின்னு சொல்றாங்க. திட்டுனவங்க அவரப் பாவம்னு சொல்றாங்க. கருணாநிதி சார்...you did it.

    ReplyDelete
  99. http://ilavanji.blogspot.com/2007/05/blog-post.html

    ஐயோ! இளவஞ்சி...அந்தாளு ரொம்பக் கெட்டவரு. எனக்கு அவரப் புடிக்கவே இல்லை. அந்த வகையில கதாசிரியரா நீங்க ஜெயிச்சிட்டீங்க.

    ஒரு உண்மை தெரியுமா? நாம யார அடிப்போம்னா...நம்மள விட வலிமை குறைஞ்சவனத்தான். ஆனா அத ஒத்துக்க மாட்டோம். அந்த அளவுக்கு அடுத்தவன ஏறி மிதிக்கிறது நமக்குள்ள ஊறிப் போயிருக்கு.

    நல்ல நடை. நல்ல எழுத்து. இதெல்லாம் தானா வர்ரதில்ல. ம்ம்ம்ம்ம்..பாராட்டுகள்.

    ReplyDelete
  100. http://muruganarul.blogspot.com/2007/05/043.html

    // வல்லிசிம்ஹன் zei...
    raghavan,

    enjoyed reading abt neeli.

    and nila mayilmithu jnalamvalam vantha MuruGan.

    NanRi. //

    வாங்க வல்லிசிம்ஹன். உங்க பின்னூட்டம் ஆங்கிலத்திலா. வெளிய இருந்து பாத்தீங்களா.

    நீலி கதையே சுவையானதுங்க. ஒங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். ஒருத்தனை மணந்து வாழ்ந்து...அவனால் வஞ்சிக்கப்பட்டு...உயிரையும் விட்டு.....ஆவியா வந்து அவனைப் பழி வாங்குனாளே..அப்பப்பா...அவன் கதறுனானே...இது பெண்ணில்லை பேய்னு....ஆலங்காட்டு வெள்ளாளர்களை அழுதே ஏமாத்துனாளே...அவ அவனைக் கொன்னதும்....தங்களாலதான் அவன் இறந்தான்னு...வெள்ளாளர்கள் எல்லாரும் தீக்குதிச்சதும்...முழுக்க முழுக்க உணர்ச்சி மிகுந்த கதைங்க.

    ReplyDelete
  101. http://imsai.blogspot.com/2007/05/blog-post_14.html

    மிகவும் பெரிய துறை. நம்மூர்க்காரர் இருந்தது மிகவும் மகிழ்ச்சி. அவர் நிறைய செய்தார். அவர் பதவி விலகுவது வருத்தமளிக்கிறது. ம்ம்....அஞ்சு வயசுல தம்பி...பத்து வயசுல பங்காளின்னு சும்மாவா சொன்னாங்க.

    ReplyDelete
  102. http://kannansongs.blogspot.com/2007/05/blog-post_14.html

    மிக அருமையான பாடல். அதிலும் குறிப்பாக விதி முடிந்ததென என்று ஏழிசை வேந்தர் பாடுகையில் ஆகா...என்ன குரல்..என்ன இசை..என்ன பக்தி. இந்தப் படத்தில் இந்தப் பாடலை விட "ஹரி ஹரி கோகுல ரமணா" என்ற பாடல் மிகவும் பிடிக்கும். அதில் நடுவில் இசையரசி

    ஞானமலர்க்கண்ணா
    ஆயர்குல மணி விளக்கே
    வானும் கடலும் வார்த்தெடுத்த பொன்னுருவே
    கானத்தில் உயிரினத்தைக் கட்டுவிக்கும் கண்ணா
    தானே உலகாகி தனக்குள்ளே தானடங்கி
    மானக் குலமதார் மஞ்சள் முகம் காத்து
    வாழ்விப்பாய் என்று உன் மலர்த்தாள் கரம் பற்றி
    நானும் தொழுவேன் நம்பி பரந்தாமா
    உன் நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே

    ReplyDelete
  103. http://ottakkuuththar.blogspot.com/2007/05/blog-post.html

    அருமையான பாடல்கள். உவமைக்குப் புகழேந்தி என்பார்கள். பாண்டி நாட்டார். பாண்டியன் மகளைச் சோழன் மணந்ததால் அந்தப் பெண்ணோடு சோணாடு புகுந்தார். சோணாட்டில் நல்ல தமிழ் கேட்கக் கிடைக்காது என்று புகழேந்தியை அனுப்பி வைத்தாராம் பாண்டியர். அடிக்கடி ஒட்டக்கூத்தரோடு பாண்டி நாடு பெரிது என்று சண்டை போட்டிருக்கிறார். கூத்தரும் புகழேந்தியும் எழுதிய அந்த அம்மானைப் பாடல்களும் மிக அருமை.

    இங்கே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடலை ஒற்றித்தான் "மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்" என்று வாலி எழுதினார்.

    ReplyDelete
  104. http://imsaiarasi.blogspot.com/2007/05/blog-post_15.html

    ம்ம்ம்...ஒரு முடிவோடதான் இருக்குறாப்புல தெரியுது. ஆணுக்குப் பெண்ணும்..பெண்ணுக்கு ஆணும்...வேணுந்தானே. காதலியர் கடைக்கண் காட்டி விட்டால்..மண்ணில் மாமலையும் ஓர் கடுகாம்னு ஆண்களுக்கும் உண்டும்மா...

    அது சரி....பாலம் கட்டி முடிச்சாச்சா?

    ReplyDelete
  105. http://chennaicutchery.blogspot.com/2007/05/blog-post_15.html

    இருக்கலாம். அந்த அளவுக்கா உள்காய்ச்சல் இருக்கு! அடக்கடவுளே...அப்படி இருக்கும்னா...அது ரெண்டு பேருக்குமே நல்லதில்லைன்னு நெனைக்கிறேன். ஆனா ஒன்னு...அதிமுக ஆட்சிக்காலத்துலயும் சன் டீவிதான் நம்பர்-1ஆ இருந்தது. விஜய் டீவியோட போட்டி போடுற விட்டுட்டா ஒழுங்கா இருக்கும். ம்ம்ம்...என்ன நடக்குதுன்னு பாக்கலாம்.

    ReplyDelete
  106. http://vettipaiyal.blogspot.com/2007/05/blog-post_16.html

    வாழ்க வளமுடன். நீடு வாழ்க. பீடு வாழ்க.

    ReplyDelete
  107. http://valaippadhivu.blogspot.com/2007/05/200.html

    அடடா! இவரா! இருக்கும் இருக்கும். உண்மையிலேயே இருந்தாலும் இருக்கும். நம்ப முடியாது. இப்பிடித்தான் யேசுநாதரு என்னுடைய இனியது கேட்கின் எல்லாம் படிக்கிறாராம்.

    நிற்க. 200 பதிவுகள் அமைந்தமைக்கு வாழ்த்துகள். நீடு வாழ்க. பீடு வாழ்க.

    ReplyDelete
  108. http://satrumun.blogspot.com/2007/05/blog-post_160.html

    மிகவும் நல்ல செய்தி. இந்த நல்ல செய்தி தொடர்ந்து நடக்க வேண்டும்.

    ReplyDelete
  109. http://elavasam.blogspot.com/2007/05/blog-post_15.html

    அடேங்கப்பா! நைனா....என்ன இது! இப்பிடிப் பெரிய விஷயமெல்லாம் பேசுறீங்க. நீங்க உண்மையிலேயே இலக்கியவாதிதானோ!

    ReplyDelete
  110. http://vettipaiyal.blogspot.com/2007/05/blog-post_16.html

    // வெட்டிப்பயல் zei...
    //G.Ragavan said...

    வாழ்க வளமுடன். நீடு வாழ்க. பீடு வாழ்க. //

    மிக்க நன்றி ஜி.ரா...

    (ஒரு சின்ன டெக்னிக்கல் டவுட்.. பீடுனா என்ன ஸ்பீடா?) ;) //

    பீடுநடைன்னு கேள்விப்பட்டதில்லையா? பீடுன்னா வேகமில்லை...கம்பீரம் என்று சொல்லலாம். சிறப்புடன்னு சொல்லலாம். பெருமைன்னும் சொல்லலாம். சொல்லப்படுகிற இடத்தப் பொருத்துப் பொருள் மாறும். டெக்னிகலா நீ ரொம்பப் பெரிய ஆளுன்னு பேசிக்கிறாங்க. நீ என்னடான்னா எங்கிட்ட கேக்குறயே!

    ReplyDelete
  111. http://radiospathy.blogspot.com/2007/05/5.html

    அருமையான பாடல்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பான பாடல்.

    பூவிலே மேடை நான் போடவா என்ற பாடலே அந்தப் படத்தின் சிறந்த பாடல் என்பேன். ஒரு ஆழமான அன்பின் வெளிப்பாடாக அமைந்த பாடலது. படத்தில் இடம் பெறாதது படத்திற்கே நட்டம். ஜெயச்சந்திரனின் உயிர்ப்பான பாவம் பாடலுக்கு மிகவும் பொருந்துகிறது. இரண்டு வரி பாடக் கொடுத்தாலும் தன்னுடைய இருப்பை அருமையாகவும் அழகாகவும் பதிவு செய்து விடுகிறார் இசையரசி.

    ஒரு மென்மையான பாடலை விரும்பிக் கேட்டிருக்கிறார் சந்திரவதனா. அருமையான தேர்வு. வாசனின் தேர்வும் அருமை.

    மாம்பூவே சிறு மைனாவே மச்சானின் பச்சைக்கிளி..தொத்திக் கொள்ள தோள் கொடுத்தான்...எனக்கது சுகமாக இருக்குது...ஆகா...அருமையான பாடல். சந்திரபோஸ் ஆரம்பகாலத்தில் இசையமைத்த பாடல். மிகவும் சுகமானது.

    காற்றினில் மிதக்கும் புகை போலே...ஒரு மெல்லிய காதல் பாடல் பொன்சின் விருப்பமாக. ஆகா....அருமையான தேர்வு.

    அடுத்து என்னுடைய விருப்பப் பாடல். தாலாட்டு. தாலாட்டுப் பாடல் என்றால் இசையரசிதான். பெரும்பாலான சிறப்பான தாலாட்டுப் பாடல்கள் இசையரசியின் குரல்தான். அந்த வகையில் மெல்லிசை மன்னர் இசையில் வந்த இந்தப் பாடல் மிகவும் அருமை. மண்ணில் வந்த நிலவே...என் மடியில் பூத்த மலரே..விழிகளில் கவிநயம்..விரல்களில் அபிநயம்..கண்ணே நீ காட்டு...விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு பாடல் நீ கேட்டு....ஆகா...ஆகா..கேளுங்க..கேளுங்க..கேட்டுக்கிட்டேயிருங்க...

    ReplyDelete
  112. http://ilavanji.blogspot.com/2007/05/postcards-from-scotchland.html

    ஒளி ஓவியர் இளவஞ்சி வாழ்க. ஒளிக்கொல்லர் இளவஞ்சி வாழ்க. ஓளியாஜலிஸ்ட் இளவஞ்சி வாழ்க. ஒளியாளி இளவஞ்சி வாழ்க. ஒளிப்பேராளி இளவஞ்சி வாழ்க.

    ReplyDelete
  113. http://ilavanji.blogspot.com/2007/05/641004.html

    ஐயப்பாடு ஏன்? நீங்கள் மூத்த வலைப்பதிவர்தான் என்பதை மறந்தீரா.....ஒங்க தெறமைக்கும் தண்டிக்கும்....இந்தக் கைல முந்நூறு கொமரிப் புள்ளைக ஊஞ்சல் கட்டி ஆடலாம். அந்தக் கைல முந்நூறு கொமரிங்க ஊஞ்சலாடலாம். அப்படி இருக்கைல....


    சரி...விசயத்துக்கு வருவோம். இந்தக் கிரிக்கெட்டு இருக்கே..கிரிக்கெட்டு....அதுதாங்க சின்ன வயசுல இருந்தே புரிய மாட்டேங்குது. நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சு பாத்தேன். ம்ஹூம்.....இத்தனைக்கும் வீட்ல என்னையத் தவிர எல்லாருக்கும் கிரிக்கெட் உசுரு. ஏதோ நல்லா வெளையாட முயற்சி பண்ணி தோல்வி அடஞ்சிருக்கீங்கன்னு புரியுது. வருத்தப்படாதீங்க. எது நடக்கனுமோ அது நல்லபடியாகவே நடந்தது.

    ReplyDelete
  114. http://kouthami.blogspot.com/2007/05/blog-post_2926.html

    நல்ல பதிவு. மூடநம்பிக்கையில் மூழ்கிய மூடர்களுக்குப் புரிந்தால் சரி.

    ReplyDelete
  115. http://poonspakkangkal.blogspot.com/2007/05/blog-post_17.html

    சென்று வா மகளே
    சென்று வா
    அறிவை வென்று வா மகளே
    வென்று வா
    பதிவுலகம் உன்னை அழைக்கின்றது
    ஏதும் பதியாதவள் என்று நினைக்கின்றது
    தமிழா வாசல் அழைக்கின்றது
    தமிழிருக்கும் வரைக்கும் கலக்கமில்லை
    எந்த தளத்திலும் உனக்கு நடுக்கமில்லை
    சென்று வா மகளே
    சென்று வா
    அறிவை வென்று வா மகளே
    வென்று வா

    ReplyDelete
  116. http://blog.arutperungo.com/2007/05/blog-post_17.html

    காதல் வந்ததால் பைத்தியம் வந்ததா?
    பைத்தியம் வந்ததால் காதல் வந்ததா?
    ஒன்னோட ஒன்னு ஒட்டிக்கிட்டே வந்துருது இல்ல....வாழ்நாள் முழுதும் பைத்தியமாகவே இருக்க வாழ்த்துகிறேன். :)

    பர்சுக்குள் பதுக்கி வைத்த வானவில் நல்லாயிருக்கு. மௌனவிரத தொலைபேசி நல்லாயிருக்கு. மொத்தத்துல பொலம்பல் நல்லாவே இருக்கு.

    ReplyDelete
  117. http://chennaicutchery.blogspot.com/2007/05/blog-post_8005.html

    தேவு...இங்க ஆன்சைட்டுன்னா பெரிய பெரிய ஆணி சைட்டய்யா....ஒவ்வொன்னா புடுங்கி முடிக்கிறதுக்குள்ள கையல்லாம் காப்பு காச்சுறும். அப்புறமெங்க country of elephants...country of snakesனு சொல்றது....பாத்துப் பதமா இருந்துக்கச் சொல்லுங்க சித்தப்புவ.

    ReplyDelete
  118. http://johan-paris.blogspot.com/2007/05/blog-post.html

    தலைப்பைப் பாத்துட்டு என்னவோ ஏதோன்னு ஓடி வந்தேன்...வந்து பாத்து விழுந்து விழுந்து சிரிச்சேன் :-))))))) நாட்டுலதான் இப்பிடின்னா காட்டுல அத விடவும்....

    ReplyDelete
  119. http://thulasidhalam.blogspot.com/2007/05/61.html

    16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை தனியா வீட்டுல விடக்கூடாது...நல்ல சட்டமா இருக்கே. ஆனா இதை இந்தியாவுல கொண்டு வர முடியாது. கொண்டு வந்தாலும் எந்த வீட்டுல அப்படி விட்டுட்டுப் போயிருக்காங்கன்னு பாக்குறதுக்குள்ளயே போலீஸ் கீலீஸாயிரும். ஆனா உண்மையிலேயே நல்ல சட்டம். நான் இதை ஆதரிக்கிறேன்.

    என்னது..இதுக்குப் பேரு தேர்தலா? தேறாததல்லுன்னு பேர மாத்தி வெச்சிரலாம். ஒண்டிக்கு ஒண்டி வர்ரியான்னு கூட கேக்க மாட்டாங்களா? சல்லாத்துணி போட்டுக்கிட்டு ஆடுனாங்க...ஒன்னுக்கு மூனு பொண்டாட்டி..குடிகாரன்..கச்சிமாறி....இதெல்லாம் இல்லையா...என்னவோ போங்க...எப்படித்தான் தேர்தல் கொண்டாடுறாங்களோ! தேர்தல் வன்முறையாவது உண்டா? பூத்தப் பிடிக்கிறது..கள்ள ஓட்டு போடுறது..இந்த மாதிரி.

    ReplyDelete
  120. http://govikannan.blogspot.com/2007/05/blog-post_18.html

    திருக்கோயில்களில் இங்கு தமிழிலும் அர்ச்சனை நடத்தப்படும் என்ற பலகை என்று தூக்கி எறியப்பட்டு இங்கு வடமொழியிலும் அர்ச்சனை நடத்தப்படும் என்று பலகை வைக்கப்படுகிறதோ...அன்றுதான் வரலாற்றில் நன்னாள்.

    விஷமியோ கிருமியோ...அவருக்குத் தமிழில் பாடித் தொழ விருப்பம்...அதை எப்படி தடுக்க வேண்டும். சரி...அந்த விஷமியை விட்டு விடலாம்...நான் போய்ப் பாட முடியுமா? அந்தச் சபையில். நானும் விஷமியோ? என்றைக்குத் திருக்கோயில்களில் சாதிப்பாகுபாடு இல்லாமல் சமயப்பணி ஆற்ற முடிகிறதோ...அப்பொழுதுதான் உண்மையான சமதர்மம் பிறக்கிறது. இதைச் செய்ய வேண்டிய பொருப்பு எல்லாருக்கும் உண்டு. மற்ற ஊரில் அப்படி இப்பிடி இருக்கலாம். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என்னுடைய ஊர் இப்படித்தான் இருக்க வேண்டும்.

    இதற்கு ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றால்...தமிழர்கள் என்று தம்மை நம்புகிறவர்கள் அந்தக் கோயிலைப் புறக்கணிக்க வேண்டும். கற்கோயில் இறைவன் உளக்கோயிலிலும் இருக்கிறான். ஆகையால் நமக்கு நட்டமில்லை. இதுதான் என்னுடைய கருத்து. கும்ம விரும்புகிறவர்கள் கும்மிக்கொள்ளலாம்.

    ReplyDelete
  121. http://vivasaayi.blogspot.com/2007/05/blog-post.html

    இதெல்லாம் என்ன கேள்விகள். இதுக்கெல்லாம் விடை தெரியலைன்னா....வலைப்பதிவுகள் மேல கோவிச்சுக்கிருவீங்களா...கேள்வின்னா எப்படி இருக்கனும் தெரியுமா? நல்லா விண்ணுன்னு....ஒரு கணக்கா...கில்பான்சா இருக்கனும். அத விட்டுட்டு....நூத்துல எழுவத்தெட்டே முக்கால் போச்சுன்னா மிச்சத்துல கால்வாசி எவ்வளவுன்னு கேட்டா? என்னவோ போங்க இளா...நமக்கும் பொதுஅறிவுக்கும் அவ்வளவு தூரம். :-(

    ReplyDelete
  122. http://muruganarul.blogspot.com/2007/05/blog-post.html

    இந்தப் பாடலுக்கு இசை குன்னக்குடி வைத்தியநாதன் என்று நினைக்கிறேன். மிகவும் அருமையானதொரு பாடலை நினைவுபடுத்தியிருக்கின்றீர்கள்.

    அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி அவர் மேலாய் என்று அருணகிரி சொன்னதை நினைவு படுத்தும் பாடல். ஏழிசை வேந்தரின் குரலில் மிகவும் இனிமையான பாடல்.

    ReplyDelete
  123. http://satrumun.blogspot.com/2007/05/blog-post_18.html

    காலில் விழும் கலாச்சாரம் மிகத்தவறானது. அது ஜெயாக இருந்தால் என்ன மாயாவதியாக இருந்தால் என்ன...மாயாவதி செய்வதால் மட்டும் தவறு சரியாகாது. காலில் விழாதவர்கள் என்ன நினைத்து விழாமல் இருந்தார்களோ..விழாமை நன்றே. மற்றவர்களும் விழக்கூடாது.

    ReplyDelete
  124. http://satrumun.blogspot.com/2007/05/blog-post_1702.html

    பேசாம படத்தையே தள்ளி வெச்சிறலாம். பின்னே....ஏற்கனவே ஷங்கரு படத்த எடுக்குறேன் எடுக்குறேன்னு வருசக் கணக்குல வீணடிக்கிறாரு. ரொம்பக் கொடுமையா இருக்குங்க இவங்க சொல்ற நாயம். ஒன்றர வருசம் படமெடுத்தாத்தான் படம் சிறப்பா அமையுமா? என்ன கொடுமையோடா சாமி...

    ReplyDelete
  125. http://papaasangam.blogspot.com/2007/04/blog-post_4109.html

    எனக்கு ஒரு ஐயப்பாடுங்க..அதென்ன பயமறியா? அப்ப கரப்பான்பூச்சி, எலி, கொசு இதுக்கெல்லாம் பயப்படவே மாட்டீங்களா? ஆகா..வீராங்கனைகள் வாழ்க. வாழ்க.

    கிண்டல் அப்பார்ட்டு. வாழ்க வளமுடன். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தச் சொன்னாரு பாரதி. அந்தாளு நெனச்ச புதுமைப் பெண்களா வாழ்க.

    ReplyDelete
  126. http://cvrintamil.blogspot.com/2007/05/3.html

    அடடே! அருமையான முயற்சி. பள்ளிகொண்ட பேரழகரின் இந்த முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துகள். அடுத்தது ஜியா? வாப்பா ஜி. காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  127. http://cvrintamil.blogspot.com/2007/05/3.html

    அப்புறம் இன்னொரு விஷயம்...நம்ம இம்சையரசியை அடுத்து உள்ள இழுத்து விடுங்க. அருமையா கதை எழுதுவாங்க.

    ReplyDelete
  128. http://ssankar.blogspot.com/2007/05/1.html

    அது யாழிதான். யாழி புல்லும் திங்கும்னு நெனைக்கிறேன். தெரியலை. பெரும்பாலும் அசைவ விலங்கா இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

    இதுதான் கோயிலுக்குள்ள நுழையிற இடம். ரெண்டு பக்கமும் கடைங்க. அப்புறம் ஒருபக்கம் பிள்ளையாரு. மறுபக்கம் முருகரு. அப்புறம் படிக கீழ எறங்கும். அப்புறமும் ரெண்டு பக்கமும் கடைக. அப்புறம் உள்ள போனா வலப்பக்கம் தெப்பக்குளம்.

    இந்தச் சங்கரங்கோயில்ல கெடைக்கிற புத்துமண்ணு எங்கிட்ட இருக்கு. அதத்தான் கொழச்சு நெத்தியில தெனம் வெச்சுக்கிறது. வெரல் வெரலா விப்பாங்க. அதுல நெறைய வாங்கி வெச்சிருக்கேன்.

    ReplyDelete
  129. http://govikannan.blogspot.com/2007/05/blog-post_18.html

    // ஸ்ரீசரண் zei...
    //யாரோ ஒரு வம்பரை அங்கே அனுமதிக்கவில்லை என்பதற்காக தமிழையே ஒதுக்கிவிட்டார்கள் என்பது வெறும் வெறுப்பினால் வரும் பொய்.//

    //சிதம்பரத்தின் பிரசினை சில விஷமிகள் வேலை //

    சரி ஜடாயு இந்த பதிவில் பின்னூட்டமிடும் பலருக்கு இருக்கும் ஒரே ஆதங்கம் சிதம்பரத்தில் தமிழில் பாட வேண்டும் என்பது தான்(வேறு எந்த விஷமத்தனமும் இல்லை)

    நீங்கள் நான் மற்றும் பின்னூட்டமிடுபவர்களில் சிலரும் சேர்ந்து சிதம்பரம் சென்று திருமறைகளை பாட முனைவோம்.
    இன்னுமொரு விசயம் அங்கு போகும் போது நீங்கள் பார்ப்பனர் என்ற அடையாளம் வெளியில் தெரியாமல் வர வேண்டும். //

    இந்தத் திட்டம் நன்றாக இருக்கிறது. ஆன்மீகத் தமிழன்பர்கள் சேர்ந்து இந்த முயற்சி எடுக்க வேண்டும். எந்தச் சாதிய அடையாளமும் இல்லாமல் எல்லாரும் சென்று தேவாரம் ஓத வேண்டும். இந்தத் திட்டத்திற்கு என்னுடைய ஆதரவு உண்டு.

    ReplyDelete
  130. http://satrumun.blogspot.com/2007/05/blog-post_18.html

    // சிவா zei...
    அநேகமாக எல்லோருமே தமிழகத்தையும் வட மாநிலங்களையும் ஒப்பிட்டுகிறீர்கள். வடக்கே வயதில் மூததவரின் காலைத் தொட்டுக் கும்பிடுவது வழக்கமாகும் (இந்தி சினிமா பார்ப்பவருக்கும் வட இந்தியாவில் வசிப்பருக்கும் இது நன்கு தெரியும்) அதனால் தான் இது சர்ச்சை ஆகிறது. //

    சிவா, வடக்கில் என்பதால் சுயமரியாதை இல்லாமல் வாழலாமா? பிஜேபி மாதிரி கட்சிகளில் இது போன்ற நிலை காணக்கிடைத்தால்...அதிசயப்பட வேண்டாம். அப்படியில்லாமல் அம்பேத்காரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் மாயாவதி இதைச் செய்திருப்பது சரியென்று ஒப்புக்கொள்ள முடியவில்லை. பதவி என்று வந்த பிறகு அடுத்தவர் நம் காலில் விழுவதை ரசிப்பது என்பதும் கூட வந்து விடும் போல. மிகவும் வயதான காலத்திலும் பெரியார் யாரையும் தன்னுடைய காலில் விழவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ம்ம்ம்...ஒன்றும் சொல்வதற்கில்லை.

    ReplyDelete
  131. http://ssankar.blogspot.com/2007/05/2.html

    சிவகணங்களின் தவக்கோலம் மிக அருமை. கண்டிப்பாக இவர்களுக்குத் தரிசனம் கிடைக்கும். :)

    திருவில்லிபுத்தூர் சென்றிருக்கிறேன். ஆனால் இந்தக் கோயிலிற்குச் சென்றதில்லை. ஆண்டாள் திருக்கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். பக்கத்தில் இருக்கும் திருவண்ணாமலைக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இந்தத் திருவண்ணாமலை வைணவத் தலம்.

    ReplyDelete
  132. http://elavasam.blogspot.com/2007/05/blog-post_15.html

    // இலவசக்கொத்தனார் zei...
    ஜிராண்ணா,

    நானெல்லாம் இளக்கியவியாதியா? என்ன இது அபாண்டமான குற்றச்சாட்டு? எதனா தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சுக்கோ தல. //

    அதெப்படி மன்னிக்கிறது...நவீன இலக்கியத்தின் பாட்டனார் என்றழைக்கட்டும் அடிஸ்கோ பெஸ்லா என்ன சொல்கிறார்? இலவசத்தின் மூலக்கூறுகளின் உற்பத்தி நிலையம் என்பது பாடாத வாயும் மூடாத மூக்கும் காட்டும் வழி என்கிறார். அந்த வகையில் பின்நவீனத்துவத்தின் தனிப்பெருங்கலவையை உருவாக்கிச் சிப்பங்களாக்கும் உங்கள் முயற்சியின் பலனால் கிடைத்த பட்டத்தை நீங்கள் விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  133. http://elavasam.blogspot.com/2007/05/blog-post_15.html

    // வெட்டிப்பயல் zei...
    எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சி போச்சி... இந்த சஞ்சய் சுப்பிரமணியம் சஞ்ஜய் ராமசாமிக்கு ஆப்போசிட்...

    இவருக்கு எந்த விஷயமும் பதினைஞ்சி நிமிஷத்துக்கு அப்பறம் தான் ஞாபகம் வரும். ஒரு வரிய பதினைஞ்சி நிமிஷத்துக்கு திரும்ப திரும்ப பாடுவாரு. அப்ப தான் அடுத்த வரி ஞாபகம் வரும்...

    இதுக்கு தமிழ்ல Long Term Memory lossnu பேரு //

    ஹா ஹா ஹா...வெட்டி ஒனக்கு இன்னொரு சஞ்சய் ராமசாமியைப் பத்திச் சொல்றேன். செவாசி தெரியுமா செவாசி...அதாவது சிவகாசி...செவாசிக்காரங்க அப்படித்தான் கூப்புடுவாங்க. அந்த செவாசிக்கு நாடாளுமன்ற உறுப்பினரா இருந்திருக்காரு. இவரு நடிகை திருதேவி...அட ஸ்ரீதேவிப்பா...அவங்களோட மச்சினரு. ஸ்ரீதேவியோட சொந்த ஊரு செவாசி பக்கத்துல உள்ள மீனம்பட்டி.

    ReplyDelete
  134. http://naachiyaar.blogspot.com/2007/05/blog-post_16.html

    இது எந்த ஊரு? அதச் சொல்லவே இல்லையே. ரொம்ப அழகான பட்டிக்காடாக இருக்கிறது. மிகவும் அழகாக. அருமை.

    ReplyDelete
  135. http://ssankar.blogspot.com/2007/05/2.html

    // ச.சங்கர் zei...
    ராகவன்,
    அடுத்த முறை கண்டிப்பாக செல்லுங்கள்.இதுவும் நல்ல திவ்யமான கோவில்..அழகாக இருக்கும்..இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள திருவண்ணாமலை(வைணவத்தலம்)படங்களை அடுத்த பதிவில் தந்துள்ளேன் :) //

    அடுத்த பதிவில் தருகின்றீர்களா? சரி. காத்திருக்கிறேன்.

    திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதி பற்றி இன்னொரு தகவல். நாயக்கரின் மகள் என்ற படத்தில் இந்தக் கோயில் நிறைய காட்டப்படும். அந்தப் படம் ஜெயச்சித்ராவின் 100வது படம். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியது.

    ReplyDelete
  136. http://ullathilullathellam.blogspot.com/2007/05/blog-post.html

    வாங்க ஜேம்ஸ் வாங்க. பொன்னியின் செல்வனைப் படித்தவர்களால் அதிலிருந்து வெளியே வரவே முடியாது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. முதன்முறையாக இந்த நாவலைப் படித்தது பத்தாம் வகுப்பில். அதற்குப் பிறகு இந்தக் கதையைப் பலமுறை படித்து விட்டேன். இன்னும் எனக்குப் பிடித்த நாவல்களின் இது ஒன்றாகவே இருக்கிறது. வந்தியத்தேவனையும் குந்தவையையும் நமது சொந்தக்காரர்களாகவே மாற்றி விடுவார் கல்கி.

    ReplyDelete
  137. http://ssankar.blogspot.com/2007/05/3.html

    இந்தத் திருவண்ணாமலைக்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். சிறுவயதில் ஒருமுறை. ஏழாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை. சிறுவயது நினைவு இல்லை. ஆனால் இரண்டாம் முறை சென்ற நினைவு இருக்கிறது. சரியாக மாலை நேரம். கோயிலில் கூட்டமே இல்லை. எங்கள் குடும்பம் மட்டுந்தான். மிகவும் பொறுமையாக வழிபட்டு வர முடிந்தது.

    ReplyDelete
  138. http://nirmalaa.blogspot.com/2007/05/blog-post.html

    கொல்கொத்தா...ஒரு ஆச்சர்ய நகரம்...ஆமாம். அங்கு செல்கின்றவர்களுக்கு அது கண்டிப்பாக புரியும். குறைந்தது ஒரு வாரமாவது தங்கியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அங்கு பொதிந்திருக்கும் வியப்புகள் புரியும். சுவாசிக்கச் சுவாசிக்க நேசிக்கத் தொடங்கி விடுவீர்கள். உங்களுடைய அந்த நேசிப்பு புரிகிறது.

    எனக்குக் காளிகாட்டை விட தொக்கினேஷ்வர் பிடிக்கும். காளிகாட் நம்மூர் கோவில்களைப் போல காசுவியாபாரிகள் நிறைந்திருக்கிறது.

    ReplyDelete
  139. http://vettipaiyal.blogspot.com/2007/05/blog-post_19.html

    வெட்டி, நல்ல பதிவு. இதையேதான் நான் இந்தக் கீழக்குறிப்பிட்ட பதிவுல சொன்னேன். நீ வேற மாதிரி சொல்லீருக்க. ஆனா சரியாத்தான் சொல்லீருக்க.

    http://gragavan.blogspot.com/2007/01/2007.html

    ReplyDelete
  140. http://elavasam.blogspot.com/2007/05/blog-post_15.html

    // இலவசக்கொத்தனார் zei...
    ஆனா இளக்கியவியாதி என்பது பட்டமா தல? //

    இது தெரியாதா? அது அவரவர்க்குத் தம்-பட்டம். இப்போதைக்கு உம்-பட்டம். :)

    ReplyDelete
  141. http://raamcm.blogspot.com/2007/05/blog-post_17.html

    ராமின் இனிய வலைப்பூ மக்களே..இதோ மீண்டும் ராயலராஜா உங்களுக்காக ஒரு பட்டிக்காட்டுப் பாசத்தை மண்வாசனையோடு உங்கள் மூக்குக்குக் காட்ட வருகிறான். (கூ கூ கூ குயில் கூவுகிறது)

    எழுத்தப்பட்ட புத்தகங்கள் எல்லாமும் படிக்காமல் இருக்கையில் எழுதப்படாத புத்தகமா படிக்கப்படப் போகிறது. அப்படி எழுதாத புத்தகமாய் இருக்கும் ஒரு கிராமத்துப் பெண்ணின் உள்ளம் எப்படி எல்லாராலும் படிக்கப்படுகிறது என்பதே கிராமத்திலிருந்து ஒரு காதல் கதை

    (சில்லுக்கருப்பட்டி..நீ அச்சுவெல்லக்கட்டி....சுஜாதாவும் ஜெயச்சந்திரனும் ஏ.ஆர்.இசையில் பாடுகிறார்கள்)

    கஞ்சிக் கலயத்திற்கும்...அதில் ஊற்றும் கஞ்சிக்கும் உறவு குடிக்கப்படும் வரைதான் என்றாலும்...விட்டுப் போகாமல் தொட்டுக்கொண்டிருக்கும் காய்ந்த கஞ்சிவடுதான் இந்தக் கதையின் உயிர்நாடி. (புல்லாங்குழல் ஊதுகிறது) வாருங்கள். கஞ்சி குடிப்போம்.

    :)

    சரி...என்னுடைய கருத்துக்கு வருவோம். நல்லா எழுதீருக்க. குறிப்பா அந்த முடிவு...கடைசியா நாயகி சொல்றது. சூப்பரு.

    ReplyDelete
  142. http://ssankar.blogspot.com/2007/05/4.html

    திருப்பரங்குன்றம் ஒரு குடவரைக்கோயில். மலையைக் குடைந்து கட்டியது. ஆகையால் கோயிலுக்குள் செல்லச் செல்ல ஒரு குளிர்ச்சி தென்படும். இந்தக் காரணத்தினால்தான் உங்களால் முகப்பு தவிர்த்து வேறெந்த புகைப்படமும் கொடுக்க முடியவில்லை.

    ReplyDelete
  143. http://ssankar.blogspot.com/2007/05/4.html

    திருப்பரங்குன்றம் ஒரு குடவரைக்கோயில். மலையைக் குடைந்து கட்டியது. ஆகையால் கோயிலுக்குள் செல்லச் செல்ல ஒரு குளிர்ச்சி தென்படும். இந்தக் காரணத்தினால்தான் உங்களால் முகப்பு தவிர்த்து வேறெந்த புகைப்படமும் கொடுக்க முடியவில்லை.

    ReplyDelete
  144. http://nirmalaa.blogspot.com/2007/05/blog-post.html

    // Nirmala zei...
    ஆமாம் ராகவன்... எத்தனை பார்த்தாலும் சலிக்கறதேயில்லை! கடைசியா அங்கே ஒருதரம் போகனும், இங்கே போகனும்னு லிஸ்ட் நீண்டுட்டேயிருக்கு. //

    உண்மைதான். அப்படி இப்பிடீன்னு கடந்த நாலு வருசத்துல நான் ஏழு வாட்டி போய்ட்டு வந்துட்டேன். :)

    // //எனக்குக் காளிகாட்டை விட தொக்கினேஷ்வர் பிடிக்கும்.
    ------------------
    உள்ளூர்காரங்களே இப்படி சொல்றதைக் கேட்டிருக்கேன். ஆனாலும் எனக்கு காளிகாட் தான். 'தொக்கினேஷ்வர்'... டிபிகல் பெங்காலி உச்சரிப்பு...! //

    அப்படியா..இருக்கலாம். அப்படியானால் மற்றவர்கள் எப்படி உச்சரிப்பார்கள்? எனக்கு தொக்கினேஷ்வர் என்றே அறிமுகம் செய்யப்பட்டது..நானும் அப்படியே சொல்லிக் கொண்டிருக்கிறேன். தொக்கினேஷ்வர் பொச்சொந்தோ கோரி. :)

    ReplyDelete
  145. http://kouthami.blogspot.com/2007/05/blog-post_8858.html

    கருப்பிடிக்குச் சென்று வந்த சுற்றுலா அருமை...ஆனா எங்களையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டீகளேய்யா!

    ReplyDelete
  146. http://kouthami.blogspot.com/2007/05/blog-post_8858.html

    என்னது மை பிரண்டு ட்யூபுல காத்தப் புடுங்கி விட்டுட்டாங்களா...அடடே! நம்ம பதிவுக்கு வந்து மொதப் பின்னூட்டம் போடுறவங்கப்பா...பாத்து...பாத்து...

    ReplyDelete
  147. http://kouthami.blogspot.com/2007/05/blog-post_8858.html

    // Anonymous zei...
    நீங்க பதிவ படிக்க என்னாதான் செய்சாலும் பதிவ படிக்க மாட்டோம்

    கும்மி மட்டுமே எங்கள் குறி //

    அப்படிச் சொல்லுங்க. நம்ம தெருவள்ளுவர் என்ன சொல்லீருக்காரு...கும்மியைக் கும்பியாகக் காண்பர்..கும்பியைக் கும்மியாகக் காணாதவர்...

    ReplyDelete
  148. http://govikannan.blogspot.com/2007/04/2.html

    கோவி, ஏற்கனவே சொன்னதுதான். உண்மையான ஆத்திகனும் உண்மையான நாத்திகனும் சாதுவானவர்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைவு. கடவுளைக் கும்பிடுகிறவர்கள் எல்லாம் ஆத்திகர்களும் இல்ல. கடவுளைக் கும்பிடாதவர்கள் எல்லாம் நாத்திகர்களும் அல்ல.

    ReplyDelete
  149. http://govikannan.blogspot.com/2007/05/blog-post_20.html

    :) கோவி, நீங்கள் குறிப்பிட்டுள்ள பல வரலாறுகளும் தத்துவங்களும் அறிந்தவன் அல்லன் நான். ஆனால் இறைநம்பிக்கை உடையவன். அதே நேரத்தில் சமூகநீதியை மறுக்காதவன். தவறு என்று தெரிந்தால் அதைச் சொல்லவும் தயங்க வேண்டியதில்லை. என் நம்பிக்கை சார்ந்துள்ள சமயம் என்பதால் எல்லாவற்றையும் ஆதரித்துச் சப்பைக் கட்டு கட்டவேண்டியதில்லை.

    ReplyDelete
  150. http://ssankar.blogspot.com/2007/05/5.html

    பழமுதிர்ச்சோலை....படத்தில் நீங்கள் இட்டிருக்கும் கோபுரம் கட்டுவதில் பெரிய சண்டை நடந்தது. அழகர் கோயிலார்..அந்தக் கோபுரத்தைக் கட்டக்கூடாது என்று வழக்குத் தொடர்ந்து விட்டார்கள். பிறகு ஒருவழியாக வழக்கு பழமுதிர்ச்சோலைக்குச் சாதகமாக வந்தது.

    நூபுரகங்கை என்று இன்று பெயர். ஆனால் சிலப்பதிகாரக் காலத்தில் அந்த ஆற்றிற்குப் பெயர் சிலம்பாறு. அப்படித்தான் சிலப்பதிகாரம் அழைக்கிறது.

    ReplyDelete
  151. http://ssankar.blogspot.com/2007/05/6.html

    என்ன சங்கர்...சோதனைப் பின்னூட்டமெல்லாம் பலமா இருக்கே. ;)

    இந்த அழகர் கெளம்பி மீனாட்சி திருக்கல்யாணத்தைப் பார்க்க வர்ரது திருமலை நாயக்கர் காலத்துல இருந்து நடக்குதுன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். சைவ-வைணவச் சண்டையைக் குறைக்க அவர் அப்படிச் செய்தார் என்று கேள்வி. இருந்தாலும் இத்தனை பேர் கூடும் அழகிய திருவிழா சித்திரைத் திருவிழா.

    அழகர்கோயிலில் இரண்டு சிறப்புகள் உண்டு. ஒன்று நீர். அங்கு கிடைக்கும் நீரின் சுவை மிகச் சிறப்பு. அத்தோடு பிரசாதமாக ரவைத்தோசை போடுவார்கள். மெல்லிசாக இல்லாமல் மொந்தையாக மொத்தையாக இருக்கும். அதிலிருக்கும் எண்ணெய்யின் அளவு அச்சமூட்டினாலும் ஒருமுறை முயற்சிக்கலாம்.

    அத்தோடு கீழிருந்து பழமுதிர்ச்சோலைக்கும் சிலம்பாற்றுக்கும் வாகனத்தில் செல்லாமல் நடந்து செல்வது நல்ல அனுபவமாக இருக்கும். வழியில் முந்திரிப் பழங்களெல்லாம் விற்கக் கிடைக்கும்.

    ReplyDelete
  152. http://naalainamathae.blogspot.com/2007/05/blog-post.html

    மிகக் கொடூரம்..மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயல். நீட்டிய உறுப்பை வெட்டியிருந்தாலும் தப்பில்லை.

    ReplyDelete
  153. http://kuzhali.blogspot.com/2007/05/blog-post_21.html

    நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன். இதை நானும் பதிவுகளில் சொன்னேன். சிபிஐ விசாரணை நடக்கப் போகிறதே என்றுதான் பதில் கிடைத்தது. அப்பாடி நீதி பிழைத்து விட்டதுன்னு என்னை நானே அமைதிபடுத்திக் கொள்ளவேண்டியதாயிற்று.

    ReplyDelete
  154. http://vivasaayi.blogspot.com/2007/05/blog-post_20.html

    :) என்னய்யா..தெரிஞ்சு கேக்கீரா...தெரியாமக் கேக்கீரா....தெரியாமக் கேக்கீருன்னு நெனச்சே சொல்றேன்.

    திராவிடர்கள் என்பவர்கள் பழைய தென்னிந்தியர்கள். வங்காளிகள் கூட அந்த வகையில சொந்தக்காரங்கதான். ஏன்னா அவங்க மங்கோலோ-திராவிடர்களாம்.

    இன்றைய நிலையில் திராவிடர்கள் என்பவர்கள் ஐந்து மாநிலத்துக்காரர்கள் என்று சொல்லலாம். விரும்பியோ விரும்பாமலோ அதை ஒருவிதத்தில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதைப் பற்றியெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பது போலத் தெரியவில்லை.

    தெலுங்கு விஜயகாந்தும், மலையாள எம்.ஜி.ஆரும் திராவிடர்கள். ஆனால் பிடிக்கவில்லையென்றால் தெலுங்கன் மலையாளி என்று திட்டலாம். :) இது பொதுவாக அரசியல் சார்புடையவர்கள் சொல்வது. ஆகையால் இந்தக் கிண்டல்களைக் கண்டுகொள்ளத் தேவையில்லை.

    என்னைக் கேட்டால் இன்றைக்குத் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லாரும் தமிழர்கள்தான். ஆனால் அதைப் பெருமையாக நினைக்கவில்லையென்றால் தமிழர்கள் இல்லை. அந்த வகையில் விஜயகாந்தும், எம்.ஜி.ஆரும் தமிழர்கள்தான். திராவிடர்கள்தான். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால்....இரத்தக்கலப்பு என்பது எக்கச்சக்கமாக நடந்து விட்டது. ஆகையால் அப்படியே கோடு போட்டுப் பிரிப்பது எளிதாகாது. முன்பே சொன்னது போல தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி மக்கள் என்று பொதுவில் சொல்லிக் கொள்ளலாம்.

    ReplyDelete
  155. http://ennulagam.blogspot.com/2007/05/ii-61.html

    அடக்கொடுமையே...இப்பிடியும் ஒரு அப்பாவியா...பாவம். அஞ்சு வயசுல அண்ணந்தம்பி..அப்புறமா பங்காளிம்பாங்க...அப்படி இருக்குறப்ப...அவர நம்பி..இவரு...அதுவும் பண விசயத்துல...அடடா...ம்ம்ம்ம்...மாலைப் போட்டு மஞ்சத்தண்ணி தெளிச்சாச்சு. கெடாவும் தலைய ஆட்டீருச்சு....வெட்டுனாங்களா இல்லையா?

    ReplyDelete
  156. http://chennaicutchery.blogspot.com/2007/05/blog-post_21.html

    சந்திரமுகி கண்டிப்பாக ரஜினி படம் அல்ல. அது ஜோதிகா படம். நன்றாக ஓடும் என்று தெரிந்த ஃபார்முலாவில் ரஜினி ஃபார்முலாவைத் தெளித்து வெற்றி கொண்ட படம். சந்திரமுகியின் வெற்றிக்கு ஜோதிகா பெரிய காரணம். ரஜினிக்குப் பதிலாக அதில் விஜய், அஜீத் என்று ஃபார்முலா கதாநாயகர்கள் யாரைப் போட்டிருந்தாலும் ஓடியிருக்கும்.

    ஆயிரம் ஜென்மங்கள் பலவகைகளில் சந்திரமுகியை விட சிறந்த படம். இயக்கம், திரைக்கதை, இசை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

    இதில் இன்னொரு தகவல் சொல்லவா...ஆயிரம் ஜென்மங்கள், சந்திரமுகி..இரண்டுமே மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தவை. யக்ஷகானம் என்ற படம் ஆயிரம் ஜென்மங்களானது. மணிசித்ரதாழு சந்திரமுகியானது. ஆனால் இரண்டுமே பெரிய வெற்றிப்படங்கள்.

    ReplyDelete
  157. http://madhavipanthal.blogspot.com/2007/05/5.html

    1. திருக்குற்றாலமாகத்தான் இருக்க வேண்டும். குற்றாலம் முதலில் வைணவத்தலமாக இருந்ததாகவும் அங்கு அகத்தியரை உள்ளே விட மறுத்ததாகவும்..அவர் வைணவச் சின்னங்கள் அணிந்து சென்று குறுகு குறுகு குற்றாலா என்று திருமாலைக் குறுக்கி லிங்கமாக்கி விட்டார் என்றும் ஒரு கதை உண்டு.

    2. திருக்கடையூர். ஞமலியும் எருமையும் மாண்டு மீண்ட இடமல்லவா.

    3. எனக்குத் தெரிந்து பல சிவன் கோயில்களில் அங்கஞ்சுற்றுவர். இந்த ஒரு குறிப்பிட்ட கோயிலில் மற்றுமன்று. ஒருவேளை திருவாதவூராக இருக்கலாம். மாணிக்கவாசகர் பிறந்தவூரல்லவா.

    4. திருவெண்ணெய்நல்லூர் - வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்....மறக்குமா...பித்தா பிறைசூடிப் பெருமானே அருளாளா!

    5. தில்லை - சைவத்தின் எல்லையாக இருந்த ஊர். இப்பொழுது தொல்லையாக இருக்கிறது. சிதம்பரம்னு சொல்லீருக்கீங்களே.

    7. தெரியவில்லை

    8. திருவையாறாக இருக்க வாய்ப்புள்ளது. மதுரைக்கெல்லாம் தியாகராஜர் போனாத கேள்விப்பட்டதில்லை. கோவூர்...கும்பகோணத்திற்கு அருகிலா உள்ளது?

    9. உத்தரலிங்கம். உத்தர திக்கிலிருந்து வந்ததால்

    10. பெருமாளைச் சேவித்துக் கொண்டிருக்கும் ஈசனைச் சைவம் சொல்லித்தரவில்லை. ஆகையாலும் விடை தெரியாது. :)

    ReplyDelete
  158. http://vettipaiyal.blogspot.com/2007/05/blog-post_22.html

    நல்ல தகவல்கள். இது மின்னஞ்சலில் எனக்கும் கிடைத்தது. டாக்டர் தேவி ஷெட்டி தமிழகத்திற்கு நல்லதும் செய்திருக்கிறார். அதைப் பற்றி இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன்.

    http://gragavan.blogspot.com/2006/07/blog-post_21.html

    ReplyDelete
  159. http://vettipaiyal.blogspot.com/2007/05/blog-post_19.html

    // வெட்டிப்பயல் said...
    மன்னிக்க வேண்டுகிறேன்...
    இந்த பதிவில் குறிப்பிட்டதை போல் தில்லையில் அந்த குறிப்பிட்ட இடத்தில் தமிழில் பாடுவது மட்டும் தடையல்ல... அந்த மேடையில் தீட்சகர்களை தவிர மற்றவர்கள் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கே நாம் சென்று சமஸ்கிரதத்திலும் பாட அனுமதியில்லையாம். அதனால் அது மொழி சம்பந்தப்பட்டது அல்லவென்று அறிகிறேன்...//

    வெட்டி, இந்தப் பிரச்சனையை இப்படிப் பார்ப்பது சரியாகுமா என்று எனக்குத் தெரியவில்லை. அந்த மேடையில் இங்கிலீசில் பாடக்கூடாது, பிரெஞ்சில் பாடக்கூடாது, தெலுங்கில் பாடக்கூடாது என்று அடுக்கிக் கொண்டே போகலாமே. பிரச்சனை அதுவல்ல. தமிழகத்தில்...தமிழின் மையமான சைவ சமயம் துலங்கிய ஒரு திருக்கோயிலில் தீட்சிதர்கள் மட்டும் அந்த மேடையில் பாடலாம் என்றால் எப்படி? இந்த நிலை மாற வேண்டும். பாடச்செல்லும் நபர் பாபா பிளாக் ஷீப்பா பாடப் போகிறார்? நீ முன்பே சொன்னது போல திருக்கோயில்களிலும் வேண்டும் இடவொதுக்கீடு. அது தொடங்கினால்....அந்த மேடையில் நாமும் சென்று தேவாரம் பாடலாம். இதுதான் என்னுடைய கருத்து.

    ReplyDelete
  160. http://pithatralgal.blogspot.com/2007/05/221-001.html

    இதுவும் எனக்கு மிகவும் பிடித்த பாடல். புலமைப்பித்தன் நல்ல கவிஞர். என்னவோ அவர் நேரம்....நிறைய நல்ல பாடல்கள் இயற்றியிருக்கிறார். எடுத்துக்காட்டாக ரெண்டு சொல்கிறேன்.

    1. உச்சி வகுந்தெடுத்து
    2. தென்பாண்டிச் சீமையிலே

    ReplyDelete
  161. http://aaththigam.blogspot.com/2007/05/20.html

    நல்லதொரு திருப்புகழை நல்லதொரு விளக்கத்தொடு நல்லதொரு நாளில் தந்திட்ட வி.எஸ்.கேக்கு நன்றி பல. முருகனருள் முன்னிற்கட்டும்.

    இந்தப் பாடலை கே.பி.சுந்தராம்பாள் பாடிக் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்பொழுது அந்த கேசட் என்னிடம் இல்லை. அவர் குரலில் பாடக் கேட்பது பேரின்பம்.

    ஒரு சிறிய திருத்தம். தென்னவன் என்று எமனைக் குறிப்பிடாதீர்கள். தென்டிசை அதிபதி என்று குறிப்பிடல் உண்டுதான். ஆயிலும் மன்னவன் தென்னவன், தென்னவன் தீதிலன் என்று இலக்கியங்களில் படித்த எனக்கு தென்னவன் என்ற சொல் பாண்டியரைச் சொல்வது. ஆகையால் மாற்றிவிடுங்கள். அல்லது இனிமேல் பயன்படுத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  162. http://aaththigam.blogspot.com/2007/05/20.html

    ஏமவெற்புயர்ந்த மயில்வீரா என்ற இடம்தான் எனக்குச் சரியாகப் புரியவில்லை. ஏமம் என்றால் வடமொழியில் பொன்னா? ஹேமநாதன் என்றால் பொற்றலைவனா? அப்படியானால் ஏமவெற்புயர்ந்த என்பதற்குப் பொன்மலைபோல் உயர்ந்து ஒளிவீசும் மயில்வீரா என்று பொருள் கொள்ளலாமா?

    ReplyDelete
  163. http://satrumun.blogspot.com/2007/05/blog-post_3901.html

    என்னங்க இது....ஆண் சேர்க்கையில்லாமல் இனவிருத்தி சரி...பெண் சேர்க்கையில்லாமல் இனவிருத்தி கெடையாதா? அப்ப ஆம்பிளைங்க வீண்தானா?

    ReplyDelete
  164. http://vettipaiyal.blogspot.com/2007/05/blog-post_19.html

    // பச்சை தமிழன் said...
    ராகவன்

    நீங்களோ அல்லது வேறு எந்த சாதியை சேர்ந்த யாராக இருந்தாலும் தமிழின் மையமான சைவ சமயம் துலங்கிய பழனி கோயில் கருவறையுள் நுழைந்து சஷ்டி கவசம் பாட முடியுமா என்று சொல்லுங்கள். கோயிலில் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது சரி. ஆனால் பரம்பரை பரம்பரையாக சில குடும்பங்கள் மட்டுமே பூசை செய்யும் உரிமை பெற்ற பழனி, சிதம்பரம் போன்ற கோயில்களுக்கு அந்த விதி பொருந்துமா? //

    நண்பரே. பழநியோ சிதம்பரமோ..அவை பொதுக்கோயில்களாகி விட்டன. அவை இந்து சமய அறநிலையத்துறைகளால் பராமரிக்கப்படுகின்றன. யாராவது ஒரு முக்கில் தன்னுடைய ஒரு கோயில் கட்டினால் அங்கு போய் எல்லாருக்கும் பங்கு கொடு என்று சொல்ல முடியாது. சொல்ல வருவது என்னவென்றால் சாதி வேறுபாடுகள் ஒழிந்து எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். திருச்செந்ந்தூர் கோயிலுக்குச் சென்று பாருங்கள்...காசு...காசு..காசு...அப்பப்பா! அவர்களுக்குள் போட்டுக்கொள்ளும் சண்டை. கோயிலுக்குப் போகும் ஆசையே போய் விடும். இந்த நிலையும் மாற வேண்டும். இங்கு இடவொதுக்கீடு இல்லை என்றால்...அப்படிச் சொல்கின்றவர்களுக்கு வேறு எங்கும் இடவொதுக்கீடு கொடுக்க முடியுமா?

    // திருவரங்கம் போன்ற பரம்பரை உரிமை இல்லாத கோயில்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கலாம். பழனிக்கும், சிதம்பரத்துக்கும் கொடுப்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வந்த பாரம்பரியத்தை சிதைப்பதாகும். //

    இல்லை. நிச்சயமாக இல்லை. மாறுதல்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்துகொண்டிருந்திருக்கின்றன. நடக்கும். அவைகளை ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறது வரலாறு. பழநியைப் பற்றிச் சொன்னீர்கள். புலிப்பாணிச் சித்தர்கள் வசம் மட்டும் இருந்த கோயிலின் நிலை இன்று அப்படியில்லை. கோர்ட்டு கேஸ் இருந்தது. இப்பொழுது பாதி உரிமைதான் அவர்களுக்கு.

    சைவ வைணவச் சண்டையைப் போக்க மதுரைச் சித்திரைத் திருவிழாவை உண்டாக்கவில்லையா திருமலை நாயக்கர். அப்போழுது மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனவே. துலுக்க நாச்சியாரும் மாற்றந்தானே. இது போல நிறைய மாற்றங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

    இன்னும் சொல்கிறேன். திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம், குறுந்தொகை...என்று பல பழைய நூல்களில் முருகன் கோயில்களில் எப்படிக் கும்பிட்டார்கள் என்று இருக்கிறது. அட...ஆற்றுப்படை வீடுகளிலும் மற்ற முருகன் கோயில்களிலும். அதுதான் பழைய முறை. அப்படிப் பண்பாட்டைச் சீர்குலைக்காமல் வெறியாடி வெள்ளாடு அறுத்து நெல்லும் மலரும் தூவி வழிபட்டு அங்கேயே சமைத்து உண்போமா? இன்றைக்கு அப்படியா இருக்கிறது நிலை? மாறியிருக்கிறது அல்லவா. மாற்றம் என்பது மனிததத்துவம். அது தேவைப்படும் பொழுது மாறவில்லை என்றால் நாறத்தான் வேண்டும்.

    சமூகநீதியை விடப் பாரம்பரியம் பெரிதல்ல என்பதே என் கருத்து.

    ReplyDelete
  165. http://vettipaiyal.blogspot.com/2007/05/blog-post_19.html

    // தமிழ் வழிபாட்டு மொழியாவதில் என்ன சிக்கல் என்றால் தமிழன் ஆந்திராவிலுள்ல திருப்பதி காலஹஸ்தி கோயிலுக்கு போகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கே தெலுங்கில் மந்திரம் பாடினால் இவனுக்கு புரியாது. ஐயப்பன் கோயிலில் மலையாளத்தில் பாடினால் இவனுக்கு புரியாது. ராமேஸ்வரத்தில் தமிழில் பாடினால் வடநாட்டானுக்கு புரியாது.மேலும் அக்னி, நவகிரகங்கள், எமதர்மன், இந்திரன் முதலிய பலதேவதைகளுக்கு தமிழில் வழிபாட்டு மந்திரங்கள் இல்லை. //

    நண்பரே, இப்பொழுது மட்டும் எதும் புரிகிறதா என்ன? உள்ளே போய் அவர்கள் சொல்வது அப்படியே காதில் விழுந்து புரிந்து விடுகிறதா என்ன? அப்படியானால் புரிந்து கொள்ள வடமொழியைக் கற்க வேண்டுமாக்கும்.

    எமனுக்கு, இந்திரனுக்கு மட்டுமல்ல ஏதீனா, வீனஸ் ஆகியோருக்கும் தமிழில் மந்திரமில்லை. இல்லாததை விட்டுத்தள்ளுவோம். இருக்குறதப் பாப்போமய்யா...எனக்குத் தெரிஞ்சு எந்தக் கோயில்லயும் எமதருமனன் சந்நிதியும் இந்திரன் திருவறையும் இருக்குற மாதிரியும் வழிபடுற மாதிரியும் தெரியலை. நடக்க வேண்டியதைப் பார்க்கலாங்க.

    ReplyDelete
  166. http://chennaicutchery.blogspot.com/2007/05/blog-post_23.html

    தேவு, சூப்பரப்பு...

    அந்த ஷிட் யூ பூ....அட..அங்கங்க நகைச்சுவைய அள்ளித் தெளிச்சிருக்கீறய்யா..பிரமாதம். பிரமாதம்.

    ReplyDelete
  167. http://muruganarul.blogspot.com/2007/05/blog-post_21.html

    குழந்தை முருகன் என்றால் அழகல்லவா..தமிழல்லவா...அதனால்தான் சொற்கள் பொற்சொல்லாக விழுந்திருக்கின்றன.

    அஞ்சல் என்று சொல்வது செஞ்சொல். அதாவது அடைக்கலம் என்று படைக்கலமாக வருவது முருகன் அருள். அப்படிச் சொல்வது செம்மைப் பண்பல்லவா. அந்தச் செஞ்சொல் சொல்லும் கஞ்சமலர்த்தாள். அருமை. அருமை. மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  168. http://sinnakuddy1.blogspot.com/2007/04/blog-post_06.html

    அடேங்கப்பா மலைப்பா இருக்கப்பா..இதுல எது உண்மையோ...அதக் கண்டுபிடிச்சு தெளிவா சொல்லீட்டா நல்லாயிருக்கும்.

    ReplyDelete
  169. http://koodal1.blogspot.com/2007/05/blog-post_24.html

    குருவாயூரில் நடந்த இந்த தீட்டுக்கழிப்பு...கொடூரத்தின் உச்சகட்டம் என்றே நான் சொல்வேன். இறைவன் அனைவருக்கும் பொதுவானவர். அப்படி இருக்கையில் வேற்று மதத்தவராக இருந்தாலும் வந்தவரை வரவேற்பதே மனிதப்பண்பு. அதைக்கூட மறந்த குருவாயூர் தேவஸ்தான நிர்வாகிகள் மூடர்கள்.

    ReplyDelete
  170. http://kannansongs.blogspot.com/2007/05/50.html

    மிகவும் அழகான பாடல். இசையரசியின் குரலின் இனிமையும் குளுமையும் குழைவு..கவியரசரின் தமிழும்..மெல்லிசை மன்னரின் பொருத்தமான இசையமைப்பும் இந்தப் பாட்டை மிகவும் சிறப்பிக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. கிருஷ்ணகானத்தில் எல்லாப் பாடல்களுமே பிடிக்கும் என்றாலும், புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, குருவாயூருக்கு வாருங்கள், கோபியரே கோபியரே ஆகிய மூன்று பாடல்கள் மிகமிகப் பிடிக்கும்.

    இன்னொரு தகவல். கிருஷ்ணகானம் பாகம்-2ம் இருக்கிறது. இதற்கும் மெல்லிசை மன்னரே இசை. இதில் தேவதாருவே காமதேனுவே என்ற பாடல் நன்றாக இருக்கும். இந்த இசைத்தொகுப்பில் மெல்லிசை மன்னர் இசையில் இளையராஜா ஒரு பாடல் பாடியிருக்கிறார். அந்தப் பாடல் என்னிடம் இல்லை. கிடைத்தால் அதையும் போடவும்.

    ReplyDelete
  171. http://chinnakathai.blogspot.com/2007/05/blog-post_24.html

    இது மிகவும் சிக்கலான வழக்கு. நல்லது கெட்டது இரண்டையும் பார்த்து முடிவெடுப்பதுதான் சரி. எனக்கு இருவர் செய்ததும் தவறாகப் படுகிறது.

    ReplyDelete
  172. http://govikannan.blogspot.com/2007/05/blog-post_1385.html

    இந்த ஒப்பீட்டை வெறும் நகைச்சுவை உணர்வோடே எடுத்துக் கொள்கிறேன். :) ஏனென்றால் இதற்கெல்லாம் முருகன் ஆத்திரப்படமாட்டார். ஆனால் இப்படி ஒப்பிடுவதைப் பெரியார் விரும்ப மாட்டார். ஆகையால் சீரியசாக இதை அணுகவில்லை. மற்றபடி பதிவில் சொல்லியிருக்கும் ஒப்பீட்டை ரசித்தேன். ஆனாலும் இப்படிப்பட்ட ஒப்பீடுகள் பெரியாரையும் புத்தராக்கி விடும். முருகன் வள்ளி தெய்வயானை மாதிரி பெரியாரையும் பார்க்கத் தொடங்கினால்...அவர் சொன்னது அரோகரா!

    ReplyDelete
  173. http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_23.html

    உண்மைத்தமிழன், இந்தப் பதிவை நேத்தே படிச்சிட்டேன். ஆனா ராத்திரி ரொம்ப நேரமாச்சு. தூக்கம் பயங்கரமா வந்ததால இன்னைக்கு சாந்தரம் வந்து பின்னூட்டம் போடலாம்னு....இப்ப வந்து போடுறேன்.

    மருதமலைக்கு நானும் போயிருக்கேன். நல்ல அமைதியான இடம். கூட்டமில்லாத நாள்ல போகனும். அங்க போனா இறங்குற வழியில எலந்தவட கிடைக்கும். அடடா! அடடடா!

    அத்தோட முருகன் திருக்கோலக்காட்சி. காணக் கண்ணிரண்டு போதாமல் தன்னிரண்டு கைதூக்கித் தொழுவோமே! அடடா! வெற்றிவேல்...வீரவேல்.

    ReplyDelete
  174. http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_23.html

    // Anonymous said...
    இப்ப ஜி.ரா வருவாரு பாருங்க.

    வந்து நன்றி சொல்லிட்டு, அப்புறமா
    மருத மலைக்கு போயிட்டு இலந்த வடை சாப்பிட்டு, போட்டோ புடுச்சு
    போடாததுக்கு கோவிச்சுக்குவாரு. //

    ஆகா அனானி....அதத்தனாய்யா பின்னூட்டத்துல போட்டிருக்கேன். :) இப்பிடி நம்மளத் தெரிஞ்சி வெச்சிருக்கீங்களே. நன்றி. நன்றி.

    // நாமக்கல் சிபி said...
    ஐயா! யாருங்கய்யா நீங்க!
    ஜீராவைப் பத்தி அப்படியே புட்டு புட்டு வெச்சிருக்கீங்க!

    :)

    கந்தன் இருக்குமிடம் தேடி மயிலார் தானாக வருவார்!

    ஜவ்வாது விபூதியின் வாசனை அவரைத் தானே இழுத்து வரும்!

    மு.மு. //

    இழுத்தது. வந்துட்டேன். வந்துட்டேன். நீங்க நம்ம முருகனருள் கூட்டமில்லையா. அதான் சரியாச் சொல்லீட்டீங்க. :)

    // உங்க ஜி.ஆரை இன்னும் காணலியே.. எப்ப வருவாரு? கட்டியம் சொல்றவுக வந்து சொல்லிட்டீக.. உண்மைத்தமிழன் காத்துக்கிட்டிருக்கான்னு அவர்கிட்ட சொல்லுங்க.. //

    உண்மைத்தமிழரே வந்துட்டம்ல... :)

    ReplyDelete
  175. http://ilavanji.blogspot.com/2007/05/blog-post_23.html

    இளவஞ்சி, இங்க நெதர்லாந்துக்கு வந்ததும் இந்தச் செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். அந்தக் குழந்தை எங்கே போயிருக்கும்? கண்டிப்பாக யாராவது கடத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஐயா..திரும்பக் கொண்டாந்து விட்டுருங்கய்யா...

    நம்மூர் கதையே வயித்தெரிச்சலாச்சே. அடச்சீன்னு அலுத்துப் போச்சு.

    ReplyDelete
  176. http://radiospathy.blogspot.com/2007/05/6.html

    மீண்டுமொரு நல்ல தொகுப்பு. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இன்னிசையில் தொடங்கி...அப்படியே மெல்லிசை மன்னருக்குத் தாவி...சிப்பியிருக்குது முத்துமிருக்கு...அந்தப் பாடலில் தமிழுமிருக்குது இசையுமிருக்குது.

    மெட்டி ஒலி காற்றோடு....இந்தப் பாடலில் இளையராஜாவின் குரலும்...எஸ்.ஜானகியின் குரலும் இணைந்து...மெத்தென்று ஒலிக்கும் அருமையான பாடல்...அதிலும் ஜானகி..துருதூதுத்தூதூ என்று பாடுகையில்..அடடா!

    மற்ற இரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள்.

    ReplyDelete
  177. http://radiospathy.blogspot.com/2007/05/2.html

    இரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள்.

    சிந்துநதியின்மிசை நிலவினிலே..இந்தப் பாடலுக்கு இதை விடச் சிறப்பாக யாரும் இசையமைக்க முடியுமா என்பதே ஐயமாக இருக்கிறது. அத்தகைய இசை. நடுவில் தெலுங்கு வரிகளும் கோர்த்து..மனசிதி நீக்கோசம்...மெல்லிசை மன்னருக்கு மட்டுமே முடிந்தது.

    மதனமாளிகை....அடடா! என்னவொரு காதற்பாடல். இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பு இருக்கு. முதலில் சிவாஜி நாடக மேடையில் பாடுவார். மதனமாளிகையில் மந்திரமாலைகளாம் என்று இழுத்து கூத்துத்தனமாக பாடுவார்...உடனே அப்படியே கதாநாயகி கனவுக்குப் போய் விடுவார். அன்பே அன்பே அன்பே என்று மெட்டு மெல்லிசையாகி...இன்னிசையாகும். நல்ல பாடல். மிக நல்ல பாடல்.

    ReplyDelete
  178. http://myspb.blogspot.com/2007/05/blog-post_23.html

    வந்துட்டேன். :) இந்தப் பாட்ட நீங்க எங்கிட்ட கேட்டுருந்தீங்க. இந்தியாவுல இருக்கு. இங்க கொண்டு வரலை. ஆனாலும் ஒங்க புண்ணியத்துல இப்பக் கேக்கப் போறேன். நன்றி நன்றி. இது மாதிரி இன்னும் பல பாட்டுக இருக்கு. அதையும் குடுத்தீங்கன்னா...சந்தோசப் படுவேன். ஒரு டிவிடி எங்கிட்ட இருக்கு. அதுல எதுவும் இந்த மாதிரி இருந்துச்சுன்னா ஒங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். :) நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  179. http://raamcm.blogspot.com/2007/05/blog-post_17.html

    // வெட்டிப்பயல் said...
    //சுஜாதாவும் ஜெயச்சந்திரனும் ஏ.ஆர்.இசையில் பாடுகிறார்கள்//

    சுஜாதா எப்பொழுதிலிருந்து பாட்டு பாட ஆரம்பித்தார்??? //

    வேட்டி...சீச்சீ..வெட்டி, நீ சொல்றது ஜுஜாதா. அவள் ஒரு தொடர்கதைல நடிச்சாங்கள்ள. அவங்க. நான் சொல்றது சுஜாதையாக்கும். காயத்ரி என்ற படத்தில் "காலைப்பனியில் ஆடும் மலர்கள்" அப்படீன்னு மொதமொதல்ல பாடுனாங்க. அப்புறமா மை டியர் குட்டிச்சாத்தான்ல வாணி ஜெயராமோடச் சேந்து "செல்லக் குழந்தைகளே துள்ளும் வசந்தங்களே" அப்படீன்னு பாடுனாங்க. அப்புறம் காணாமப் போயி திரும்ப ஏ.ஆர்.ரகுமான் இசையில நெறைய பாடியிருக்காங்க. புரிஞ்சதா?

    ReplyDelete
  180. http://naachiyaar.blogspot.com/2007/05/3_21.html

    ஐரோப்பாவுல மக்கள் சீஸ் இல்லைன்னு சொல்லீட்டா...துக்கம் தாங்காம உயிர விட்டுருவாங்கன்னு நெனைக்கிறேன். அவ்வளவு சீசு. நெதர்லாந்துல சீசூர்-னு ஒரு ஊரே சீஸ் தயாரிக்குதாம். அது வடநெதர்லாந்துல இருக்காம். அந்தூருக்கு நானே சீசூர்னு பேரு வெச்சிட்டேன். தெருத்தெருவா சீசப் போட்டு கூறுகட்டி விக்குறாங்களாம். உருண்டையா...வெள்ளையா, மஞ்சளா, அதுல அதையும் இதையும் கலந்தும்...அடேங்கப்பா!

    ReplyDelete
  181. http://kannansongs.blogspot.com/2007/05/50.html

    இன்னொரு வெவரம். ரெண்டு பாட்டு குடுத்திருக்கியே..அந்த ரெண்டும் ஒன்னுதான். ரெண்டுமே மெல்லிசை மன்னர் இசையில இசையரசி பாடுனதுதான். நான் ரெண்டையும் கேட்டுப்பாத்துட்டேன். உறுதியாச் சொல்றேன்.

    ReplyDelete
  182. http://theyn.blogspot.com/2007/05/blog-post.html

    மத்தபாட்டெல்லாம் சரி. கானாபிரபா வலைப்பூவுல கேட்டுக்கிட்டேயிருக்கேன். ஆனா குழலூதும் கண்ணனுக்கு மெட்டு விஸ்வநாதன். இசைக்கோர்ப்புதான் இளையராஜா. அப்படியிருக்க அந்த மெட்டை இவர் எப்படிப் பயன்படுத்தலாம். ஒருவேளை அவருக்குப் போன் சொல்லீருப்பாரோ!

    ReplyDelete
  183. http://myspb.blogspot.com/2007/05/blog-post_25.html

    மிகவும் நல்ல பாடல் ரவி. வசந்தராகம். எஸ்.ஏ.சந்திரசேகர் படம். இந்தப் படத்திற்கு இசை மெல்லிசை மன்னர். அதையும் சொல்லியிருக்கலாமே. இந்தப் படத்தில் கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே என்ற எஸ்.ஜானகியின் பாடலும் அருமை.

    ReplyDelete
  184. http://myspb.blogspot.com/2007/05/blog-post_23.html

    // நிச்சயம் தாங்கள் விரும்பும் பாடல்கள் போடுவேன். தங்களீடம் இருக்கும் பாடல்கள் தரலாமே எங்கிட்ட இருக்கிறது தங்களூக்கு தருகிறேன் //

    அதுக்குத்தான் ஒங்க மெயில் ஐடி குடுங்கங்குறேன். நீங்க குடுத்த ஐடிக்கு எந்த மெயிலும் போக மாட்டேங்குது.

    ReplyDelete
  185. http://radiospathy.blogspot.com/2007/05/cheeni-kum.html

    ப்ரபா, பாடல்களைக் கேட்டேன். நல்லாவே ரீமிக்ஸீருக்காரு. ஆனா பாருங்க...குழலூதும் கண்ணனுக்கு மெட்டு விஸ்வநாதன். அதை இவர் பயன்படுத்தியிருப்பது சரியல்ல என்றுதான் தோன்றுகிறது. மற்ற பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. குறிப்பாக ஷ்ரேயா கோஷலின் குரல் மிக அருமை. நல்ல பாவத்தோடு பாடுகிறார்.

    ReplyDelete
  186. http://moderngirl83.blogspot.com/2005/05/blog-post_21.html

    // Anonymous said...
    ஃ//எனக்கென்னவொ குழலியின் பதிவில் எள்ளல் செய்வதைவிடவும், சிந்திக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதாய்ப் படுகிறது.//

    உங்கள் நகைச்சுவை உணர்ச்சிக்கு அளவேயில்லையா! :-)))))))))

    10:12 PM ஃ

    நடுநிலை திலகம் ராகவன் இதில் என்ன நகைச்சுவை என்று விளக்குவாரா? //

    நண்பரே...மொதல்ல என்னை நடுநிலைத் திலகம்னு சொல்லாதீங்க. அது என்னால முடியாதது. நடுநிலைமைங்குறதே ஒரு மாயையோன்னு தோணுது.

    எப்படா இப்பிடி ஒரு பின்னூட்டம் போட்டோம்னு யோசிக்க வெச்சுட்டீங்க. அப்புறம் பாத்தா 2005ல போட்டது. ஆனா அப்ப ஏன் அப்படிப் போட்டேன்னு நெனைவில்லை. அப்ப அவரு ஏதாவது பதிவு போட்டு..அது பிடிக்காம நான் சொல்லீருக்கலாம். ஆனா எந்தப் பதிவைப் படிச்சிட்டு சொன்னேன்னு நினைவில்லையே.

    ReplyDelete
  187. http://manikoondu.blogspot.com/2007/05/blog-post_25.html

    படிக்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் நிறைய தொடர வேண்டும்.

    ReplyDelete
  188. http://ennulagam.blogspot.com/2007/05/blog-post_26.html

    ஜோசப் சார்...பேத்துறதுக்கு முதிர்ச்சி தேவையில்லை..இருக்குறவன்..இல்லாதவன்...முதிர்ந்துக்கிட்டேயிருக்குறவன் எல்லாரும் பேத்தலாம். அதுதான் இப்போதைய தமிழக அரசியல். உண்மையச் சொன்னா வெறுத்துப் போச்சு சார்.

    ReplyDelete
  189. http://thoduvanamnamullathil.blogspot.com/2007/05/2.html

    இரண்டு படங்கள். ஒரு நாள். ஒரு பதிவு. இதுவரை 12 பின்னூட்டங்கள். :)

    முங்காரு மளே...கோடைமழைன்னு சொல்லலாமா? தெரியலையே...பருவம் முந்திய மழை...அட...அதான கோடைமழை. மிகவும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் படம். பெங்களூரில் இருந்திருந்தால் பார்த்திருப்பேன். இண்டர்நெட்டில் இருக்கும் என்று நினைக்கிறேன். பார்க்க வேண்டும்.

    பாடல்....சோனு நிகாம் பாடியிருக்கிறார். உணர்ச்சிகளைக் கொட்டிய அளவிற்கு உச்சரிப்பில் கவனமில்லை. ஆனால் உதித் நாராயணன் அளவுக்கு மோசமில்லை.

    தமிழில் காதல் கோட்டை படத்தின் டைட்டில் பாடல் காதலே நிம்மதி என்ற பாடலைப் போல இருக்கிறது இந்தப் பாடல்.

    ReplyDelete
  190. http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_23.html

    அது இந்திய நேரத்துல நைட்டுலதான் பதிவு பாக்க முடியுது. அப்ப இந்தியப் பதிவுகள் பிந்தி அமெரிக்கப் பதிவுக முந்தி வந்துருது. ஆகையால எல்லாப் பதிவுகளையும் நேரத்துக்குப் பார்க்க முடியலை. அதான் தாமதம்.

    முருகனுக்குப் பி.ஆர்.ஓ? நானா? ரொம்ப சந்தோசங்க...முருகனுக்குரியவன்னு சொல்லிக்கிறதுல மகிழ்ச்சிதாங்க. மறுப்பில்லை. :)

    ReplyDelete
  191. http://theyn.blogspot.com/2007/05/blog-post_23.html

    என்னங்க இது...இப்பிடிக் கலக்குறீங்க...வாழ்த்துகள். வாழ்த்துகள். வாழ்த்துகள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்.

    அடுத்து எப்ப திரைப்படங்கள்ள ஒங்க பாடலைக் கேக்கலாம்? நீங்களும் சின்மயியும் சேந்து கன்னத்தில் முத்தமிட்டால் மாதிரி ஒரு பாட்டுப் பாடலாம். ஹி ஹி...உண்மையாவே பாடலாம். (ஜெயச்சந்திரன் கோவிச்சுக்கப் போறாரு). :)

    நல்ல முயற்சி,என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுகள்.

    ReplyDelete
  192. http://manikoondu.blogspot.com/2007/05/blog-post_24.html

    ஆகா! கவியரசர்னா அது அவர்தாம். அவர் மட்டுந்தாம். பல பழைய சங்கக் கவிதையெல்லாம் வியந்திருக்கேன். ஆனா நாம பொறந்த அதே நூற்றாண்டுல வாழ்ந்த ஒரு கவிஞர்...அதுவும் திரையிசையிலையும் இலக்கியம் செய்த சொற்சிற்பி அவர்.

    எத்தனை பாட்டுகள். நீங்களே நெறைய சொல்ல நினைச்சுக் கொஞ்சமாத்தான் சொல்ல முடிஞ்சதுன்னு நெனைக்கிறேன்.

    எறும்புத்தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா....சட்டி சுட்டதடா

    காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி? இந்த ஒரு வரியிலேயே பாட்டு முடிஞ்சு போச்சு. பாட்டு முழுக்க சொல்ல வேண்டிய அத்தனையையும் சொல்லி முடிச்சாச்சு.

    கல்லைக் கண்டால் கனியைக் கண்டாள்
    கல்லும் இன்று மெல்ல மெல்ல கனியக் கண்டாள்..
    கண்ணா என்றாள் முருகன் வந்தான்
    முருகா என்றாள் கண்ணன் வந்தான்
    அங்கும் இங்கும் பாதை உண்டு
    இன்று நீ எந்தப் பக்கம்

    ஒரு படத்துக்கே இப்படிச் சொல்ல முடியுதே. ஒவ்வொரு படத்துக்கும் எவ்வளவு சொல்லலாம்.

    கவியரசருடைய நெருங்கிய நண்பர் மெல்லிசை மன்னர். இவரின் எழுத்தும் அவரின் இசையும் இணைந்து இத்தனை மாயங்களைச் செய்திருக்கின்றன.

    ReplyDelete
  193. http://cvrintamil.blogspot.com/2007/05/blog-post_24.html

    நல்லாயிருக்கு. அந்தப் பாறைல ஒத்தைல குத்தவெச்சிருக்குறது நீங்களா?

    ReplyDelete
  194. http://isaiyinmadiyil.blogspot.com/2007/05/blog-post_20.html

    வணக்கம் யாழ் சுதாகர். உங்களுடைய தொகுப்புகளைக் கேட்டுக் களித்து மகிழ்ச்சியடைகிறேன். மிக்க நன்றி. சிறப்பாகச் செய்து வருகின்றீர்கள். என்னுடைய வாழ்த்துகள்.

    இந்தத் தணிகை வாழும் முருகா என்ற பாடல் மிக அருமையான பக்திப்பாடல். கேட்டுப் பெருமகிழ்ச்சி அடைந்தேன். இதற்கு இசையமைத்தது யார்? இது திரைப்படப் பாடலா? இல்லை ஆன்மீகப் பாடல் தொகுப்பில் வந்ததா? இதை முதலில் பாடியதே பாலுதானா? இல்லை சீர்காழி போன்றவர்கள் பாடி..பிறகு பாலு பாடினாரா? இந்தத் தகவல்களைத் தரமுடியுமா? அத்தோடு இந்தப் பாடலை எனக்கு gragavan@gmail.comக்கு அனுப்பி வைக்க முடியுமா.

    பொதுவில் முருகன் பாடல்கள் என்றால் டி.எம்.எஸ், சீர்காழி, கே.பி.சுந்தராம்பாள், சூலமங்கலம், பித்துக்குளி, பெங்களூர் ரமணியம்மாள், பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி, ஆகியோரின் குரல்களிலேயே கேட்டிருக்கிறோம். வேறு சில பாடகர்களும் மகாநதி ஷோபனா போன்றவர்களும் பாடியும் கேட்டிருக்கிறோம். ஆனால் பாலு? இந்தப் பாட்டு ஒன்றுதான் என நினைக்கிறேன். இவர் பாடிய வேறெந்த முருகன் பாடலும் எனக்கு நினைவிற்கு வரவில்லை.

    ReplyDelete
  195. http://isaiyinmadiyil.blogspot.com/2006/08/part-2.html

    http://www.msvtimes.com

    மெல்லிசை மன்னரைப் பற்றிய தளம். இதையும் சொல்லுங்கள். மக்கள் தெரிந்து கொள்ளட்டும்.

    ReplyDelete
  196. http://naachiyaar.blogspot.com/2007/05/blog-post_26.html

    தோசையைப் பற்றிச் சொல்லிப் பசியைக் கிளப்பீட்டீங்களே..... :) எனக்கு தோசைன்னா அவ்ளோ பிடிக்கும். நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான்.

    நம்முடைய குழந்தைகள் நாளைக்கு என்ன சொல்வார்கள் தெரியுமா? எங்க அம்மா, அப்பா, மாமா, சித்தி..பாட்டி..இவங்கள்ளாம் அப்ப சாக்லேட் ஐஸ்கிரீம் வாங்கித் தருவாங்க. அவ்ளோ நல்லாயிருக்கும். இப்பல்லாம் இவ்ளோ ஐஸ்கிரீம் சாக்லேட் இருக்கு. எவ்ளோ வேணும்னாலும் வாங்கலாம். திங்கலாம். ஆனா அந்த சுவை வர மாட்டேங்குதே. அவங்க வாங்கித்தரும் போதே அன்பையும் கலந்து கொடுத்தாங்களோ! :)

    ReplyDelete
  197. http://kalamm.blogspot.com/2007/05/blog-post_2579.html

    என்னது..கணவன் மனைவியா வாழ்ந்து குழந்தை பெத்துக்கிட்டு மனைவி கணவனா ஆயிட்டாங்களா? ம்ம்ம்...வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  198. http://naachiyaar.blogspot.com/2007/05/blog-post_26.html

    // வல்லிசிம்ஹன் said...
    ராகவன் உங்க ஊரு பக்கம்தானே. இங்கே ஒரு நடை வரலாமே.

    நல்ல சாப்பாடு சாப்பிட்டாப்பிலேயும் இருக்கும்.
    எங்களையும் பார்த்துட்டுப் போகலாம். இங்கே நல்ல கோவில் கூட இருக்கு.//

    ஆகா. கண்டிப்பா வந்துருவோம். ஒங்கூருக்கும் வரனும்னு திட்டம் இருக்கு. ஒரு மாசம் போகட்டும். திட்டம் போட்டுட்டே வந்துருவோம். gragavan@gmail.comக்கு ஒரு மெயில் தட்டி விடுங்களேன்.

    // அமெரிக்காப்
    பேரன் சொல்லுவான் பாட்டி செய்யற மாதிரி உ.கிழங்கு உனக்கு செய்ய வரலைனு.(avan ammaa kitta) //

    பாத்தீங்களா...அதே மாதிரி ஒங்க பசங்க ஒங்க கிட்ட சொல்லீருப்பாங்க. :)

    ReplyDelete
  199. http://kannansongs.blogspot.com/2007/05/blog-post_26.html

    மிகவும் அருமையான பாடல். திருமலை தென்குமரி. மறக்க முடியாத படம். பலமுறை பார்த்துள்ளேன். ஆனாலும் நன்றாக இருக்கும். பல குடும்பங்கள் ஒன்றாகக் கூடித் திருத்தலச் சுற்றுலா செல்லும் கதை. திருமலையில் தொடங்கி திருப்பரங்குன்றம் மைசூர் மதுரை குருவாயூர் கன்யாகுமரி என்று பல ஊர்களுக்குச் செல்லும் கதைதான் படம். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு அருமையான பாட்டு. திருப்பதிக்குத்தான் இந்தப் பாட்டு. சீர்காழி கோவிந்தராஜனின் கணீர்க்குரலில் அருமையான பாடல். கேட்க மட்டுமல்ல பார்க்கவும் அருமையான பாடல். எல்லாரும் வரிசையாக வருவார்கள். சுருளியும் மனோரமாவும் வெகுளிகள். குறுக்கும் நெடுக்கும் வருவார்கள். நல்லதொரு பாடல்.

    ReplyDelete
  200. http://thoduvanamnamullathil.blogspot.com/2007/05/2.html

    // வாங்க ராகவன்..
    ////////முங்காரு மளே...கோடைமழைன்னு சொல்லலாமா? ///////.. அப்போ PreMonsoon Showers == Summer showers ..அப்பிடியா? ? ? //

    அப்படியல்ல. கோடையில் வரும் மழை என்பது பருவமழையல்ல. அதற்கு முன்னாடியே வந்து லேசா ஊத்தீட்டுப் போயிரும். அது தொடராது. அதே பொருளைத்தான் முங்காரு மளேயும் தருகிறது. பருவத்தில் வரும் மழைதான் தொடரும். பருவத்திற்கு முந்தியோ பிந்தியோ வந்தால் அது தொடராது. அப்படியே வரிக்கு வரி மொழிமாற்றம் செய்தால் அசிங்கமாக இருக்கும். என்ன சொல்ல வருகின்றார்கள் என்று புரிந்து கொண்டு அதை நமது மொழியில் கொண்டு வருதல் எளிது.

    //////////////உணர்ச்சிகளைக் கொட்டிய அளவிற்கு உச்சரிப்பில் கவனமில்லை///////////////
    Mohd.Rafi க்கு அப்புரம்.. குறலில் sensuality இவரிடம் தான் பார்க்கிறேன் //

    நன்றாகச் செய்கிறார். பொதுவாக வங்காளப் பாடகர்கள் எல்லாருமே முழு ஈடுபாட்டோடு பாடுகின்றார்கள். ஷ்ரேயா கோஷலை எடுத்துக் கொள்ளுங்கள். அவரும் அப்படித்தான். அருமையாகப் பாடுகிறார். உதித் நாராயணன் தமிழை உதிர்த்து விட்டுப் போவார். அவருக்கு உதிர்த்த நாராயணன் என்றே பெயர் வைத்திருக்கலாம்.


    /////////தமிழில் காதல் கோட்டை படத்தின் டைட்டில் பாடல் காதலே நிம்மதி என்ற பாடலைப் போல இருக்கிறது இந்தப் பாடல்///////////
    கேட்ட கேள்விக்கு நீங்க தான் ஒழுங்கா பதில் சொல்லியிருக்கீங்க... அனேகமா காலேஜிலே உங்க notes தான் circulation லெ இருக்கா ? ? ? ////

    ஆகா! இதெப்படித் தெரியும்? இருந்துச்சு. படிக்கும் போது நீங்க சொன்னது போலத்தான் இருந்தது. பெரிய நோட்டுகளை வாங்கி வெச்சு....வீட்டுல உக்காந்து அந்த அந்த சப்ஜெக்ட்டுகளை நான் புரிஞ்சுக்கிட்டு எனக்குப் புரிஞ்ச மாதிரி எழுதி வெச்சிருப்பேன். கலர்கலரா படமெல்லாம் போட்டிருப்பேன். அது ஜெராக்ஸ் கடைக்கு எல்லாரும் கொண்டு போவாங்க. ஆமா! அந்த நோட்டுகள் எங்க?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.