Sunday, June 01, 2008

என்னுடைய பின்னூட்டங்கள் - ஜூன் 2008

ஜூன் 2008ல் மற்ற வலைப்பூக்களில் நானிடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

90 comments:

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2008/05/5312008.html

ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு விதம். அந்த வீட்டுக்குள்ள ஒளிஞ்சிக்கிட்ட பாட்டிதான் பயங்கர காமெடி நியூஸ் :D

மது அருந்த வழியில்லைன்னா மது விரும்பிகள் அந்த விடுதியை புறக்கணிக்க வேண்டியதுதான். ஹலால் உணவு இல்லைன்னா அதை உண்கிறவர்கள் மற்றதைப் புறக்கணிக்கிற மாதிரி.

heart broken kid அப்படீங்குற படத்துல அமெரிக்கர் ஒருத்தர் மெக்சிகோ போய் பாஸ்போர்ட் எல்லாம் தொலைச்சிட்டு.. திரும்ப வர்ரதுக்கு இந்த முயற்சியெல்லாம் செய்வாரு. ஒவ்வொரு வாட்டியும் அமெரிக்கன் போலீஸ் பிடிச்சி திரும்பவும் மெக்சிகோவுக்குள்ள விட்டுரும். அதுதான் நினைவுக்கு வருது.

ஆமா அந்த கங்கை சோப்புல குளிச்சீங்கதானே ;)

G.Ragavan said...

http://thanjavuraan.blogspot.com/2008/05/1.html

இந்தியக் குடியுரிமை அதிகாரிகளைப் பத்திச் சொன்னீங்களே...அது உண்மைதான். மார்ச் நடுவுல இந்தியாவுக்கு விடுமுறைக்கு வந்தேன். சென்னைல குடியுரிமை அதிகாரி புன்னகையோட நெதர்லாந்துல வேலை பாக்குறீங்களா? லீவுக்கு வந்திருக்கீங்களா? அப்படீன்னு தமிழ்ல கேட்டப்போ எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா! மத்த நாடுகளில் இமிக்கிரேஷன்ல அவங்க மொழியில இப்பிடிப் பேசுறது நெறையப் பாத்தாச்சு. நம்ம கிட்ட நம்மூர்ல இப்பிடிப் பேசுனா எப்படி இருக்குங்குற ஏக்கம் போயே போச்சு :) இது தொடரனும்குறது என்னோட விருப்பம்.

இளாவைச் சந்திச்சீங்களா? அவரு ரொம்ப லொள்ளராச்சே! :D

G.Ragavan said...

http://ulaathal.blogspot.com/2008/06/angkor-wat.html

ஆகா அருமையான பயணக்கட்டுரை. என்னமோ எங்களைக் கையப் பிடிச்சுக் கூட்டீட்டுப் போற மாதிரி இருக்கு.

அந்த அப்சராவுக்கு என்னாச்சு? அதைச் சொல்லுங்க. ஆவலா காத்திருக்கேன்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/05/blog-post_30.html

வாழ்த்துகள் ஆசிஷ் மற்றும் அம்ருதா.

இந்தப் பாட்டெல்லாம் எனக்கும் பிடிக்கும். ராஜா சின்ன ரோஜா படத்துல வர்ர பாட்டு ரொம்பவே பிடிக்கும். :)

G.Ragavan said...

http://thooyaskitchen.blogspot.com/2008/06/blog-post.html

எங்க வீட்டுல அசைவம் எடுக்குற அன்னைக்குக் கண்டிப்பா ரசம் இருக்கும். ஏன்னா அசைவஞ் சாப்ட்ட்டு ரசஞ் சோறு சாப்டா.. ருசியே தனிதான்.

மெளகுரசம் வேற மாதிரி வைப்போம். மெளகும் பூண்டும் சீரகமும் வெறும் சட்டியில லேசா வறுத்திக்கிருவோம்.

அப்புறம் அதையே எதக்கலும் கொதக்கலுமா அரைச்சி வெச்சுக்கிருவோம்.

புளி கரைச்ச தண்ணியைக் கொதிக்க விட்டு.... புளிவாடை போறப்போ இந்த அரைச்சி வெச்சதப் போட்டு கொதிக்க விடுவோம். வேண்டிய உப்புப் போட்டு எறக்குனாப் போதும். கொத்தமல்லியும் தூவிக்கிறலாம். சிலர் தாளிச்சும் ஊத்திக்கிருவாங்க.

G.Ragavan said...

http://idhuthanunmai.blogspot.com/2008/06/blog-post_01.html

எனக்கு ஒரு விஷயம் புரியலை! ரொம்ப காலமா பெண் விபச்சாரம்னு ஒன்னு இருக்குதே! அதுக்கு இந்த அளவுக்கு யாரும் அதிர்ச்சி அடைஞ்சாப்புல தெரியலையே! மனைவியிடம் திருப்தி இல்லாதவங்க அங்க போற மாதிரி கணவனிடம் திருப்தி இல்லாதவங்க இங்கன்னு வெச்சுக்கிற வேண்டியதுதானே. அப்படிக் கணவனால முடியலைன்னா அந்தப் பொண்ணு பத்தினியா சும்மாயிருக்கனுமா என்ன? தெரிஞ்சிக்கிறதுக்காகக் கேட்டேன்.

G.Ragavan said...

http://kappiguys.blogspot.com/2008/05/blog-post_30.html

கலக்கல் கப்பி. ஆனா ஒன்னுப்பா... இவங்களுக்கெல்லாம் வலைப்பூக்கள்னு ஒன்னு இருக்குன்னே சொல்லாதீங்க. புண்ணியமாப்போகும்.

G.Ragavan said...

http://kappiguys.blogspot.com/2008/06/blog-post.html


குழந்தைங்க கிட்ட பாரபட்சம் காட்டுறாங்கங்குறத விட குழந்தைகள் கிட்ட மனம் விட்டுப் பேசிப் பழகி வளக்கலைங்குறதுதான் உண்மை.

என்னது நன்றியா? என்னையா கப்பி. உங்களுக்கு அகோனியா வந்ததப் பத்தி எழுதுவீங்கன்னு பாத்தேன். அதை ஒங்க குருநாதர் வேற சொல்லீருந்தாராமே! அவர் சொன்னாக் கேக்க மாட்டீங்களா! :)

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2008/06/blog-post.html

வீடு ரொம்ப அழகா இருக்கு. இத்தனை பூச்செடிகள் இருந்தாலும் தரையெல்லாம் மண்ணில்லாம தண்ணியில்லாம கறையில்லாம துப்புரவா இருக்கு. பாக்கவே அழகு.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/05/blog-post_3687.html

உண்மையிலேயே அருமையான வசனங்கள். தமிழில் இப்பிடி விளையாண்டா தட்டுறதுக்கு ரெண்டு கை பத்தாது. ஆயிரம் கையிருந்தாலும் தட்டிக்கிட்டேயிருக்கலாம்.

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2008/06/blog-post_03.html


யப்பா ராமு... இந்தப் பாட்டுத்தான் படத்துலயே எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பிடிச்ச பாட்டு. இந்தப் பாட்டைத் தேடித் தந்தமைக்கு நன்றி பல. இப்பிடியே..... அந்த "என் இனிய பொன்னிலாவே" படத்துப் பாட்டெல்லாம் குடுத்தா... ஹி ஹிஹி ஹி...

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2008/06/blog-post_04.html

ஹா ஹா ஹா ஹா கலக்குங்க கதாநாயகரே.. கலக்குங்க. உங்க ரசிகாசிகாமணிகளின் கூட்டம் லச்சத்துல இருந்து கோடியாகப் போகுதுன்னு தெரியுது. தொடர்ந்து கலக்குங்க.

G.Ragavan said...

http://spbfansvoice.blogspot.com/2008/05/blog-post.html

நண்பர் அசோக் நன்றாகப் பாடியிருக்கிறார். மிகவும் அருமையான பாடல்.

G.Ragavan said...

எல்லா வீடுகளிலும் இருக்கிறது
ஓவ்வொரு மீன் தொட்டி
நீளம் அகலம் வேறு
ஆயினும் தொட்டி தொட்டிதான்
மீன் மீன்தான்
அமெரிக்க மீனுக்கும்
அலங்காநல்லூர் மீனுக்கும் வாழ்க்கை ஒன்றுதான்!!!!!

G.Ragavan said...

http://madhumithaa.blogspot.com/2008/06/blog-post.html

முயல்கள் அழகு. உருட்டி வைத்த பருத்தி போல...தொட்டால் மென்மை... கைபட்டால் மெதுமை... ம்ம்ம்....யாருமில்லாமல் தனியாக வாழும் இந்த முயல் தன்னை அனாதை என்று நினைக்குமா?

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2008/06/blog-post_05.html

அடடே! இத ஒங்ககிட்டயும் கே.ஆர்.எஸ் சொல்லீட்டாரா? எங்கிட்டயும் ரொம்பப் பெருமையா சொல்லிக்கிட்டாரு!!!!! இன்னும் என்னென்ன ரகசியங்கள் இப்பிடியிருக்கோ! அவரு சொன்னதெல்லாம் பதிவுல போடுங்க. நாங்களும் தெரிஞ்சிக்கிறோம். :)

G.Ragavan said...

http://raamcm.blogspot.com/2008/06/blog-post.html

:) விஜய் படத்துக்கு படம் வந்தப்புறம் விமர்சனம் எழுதுறதே எச்சகச்சம். படம் வர்ரதுக்கு முன்னாடியே தலைப்பை வெச்சே எழுதலாமே!

அந்தக் கவிதை நல்லா இருந்துச்சு. அது கவிதை இல்லை. நல்ல கவிதை. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

புதுக்கேமராவா? சூப்பரு. என்னைய ரெண்டு படம் பிடிக்கிறது!!! :D திருப்பரங்குன்றம் பழமுதிர்ச்சோலைன்னு கூட்டீட்டுப் போயி.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2008/06/95.html

இந்தப் பாட்டு பிடிச்சிருக்கா...சரி. ஜானகி நல்லா பாடியிருக்காங்களா. அதுவும் சரி. ஆனா // ரொமாண்டிக்கா பாட, இளமை ததும்பும் குரல் வேணும்-னா யாரைப் பாடக் கூப்பிடலாம்? சு-வா? ஜா-வா? :-)) //

இது குசும்பு. நான் இந்தப் பக்கம்னு சொல்லிக்கிட்டே அந்தப் பக்கத்துக்கு கை நீட்டுற XXXXXதனம்.

குழலூதும் கண்ணனின் வண்ணமேனி
கதை சொல்வான் கண்ணிலே அந்த ஞானி

இந்த வரிகள் எந்தப் பாட்டுலன்னு கண்டுபிடிச்சு...அந்தப் பாட்டைக் கேளுங்க. நீங்க போட்டிருக்குற பாட்டுக்குப் பின்னாடி வந்த பாட்டு.

கங்கைக் கரைத்தோட்டம்... கண்ணிப் பெண்கள் தோட்டம்.. கண்ணன் நடுவினிலே..... ஹோ ஹோ....

இது போதாதா

கண்ணா கருமை நிறக் கண்ணா... உன்னைக் காணாத கண்ணில்லையே..

இதுவும் போதாதா....

குருவாயூருக்கு வாருங்கள்... ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்... ஒருவாய்ச் சோறு ஊட்டும் தாய்முன் உட்கார்ந்திருப்பதைப் பாருங்கள்....

இதுவும் போதாதா..

கோகுலத்தில் ஒரு நாள் ராதை.. கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்.. ஏனடி ராதா என்று என்னடி சேதி என்று ஸ்ரீரங்க பாலன் வந்தான்...தானொரு ஆனந்த ராகம் தந்தான்...

பத்தலையா....

யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே...ஸ்ரீராமன் பாட வந்த கம்பநாடன் நானே.... என்ன பாட்டுன்னு தெரியுதுல்ல....

அடுத்தது

கண்ணன் ஒரு கைக்குழந்தை.. கண்கள் சொல்லும் பூங்கவிதை..

இன்னும் எடுத்துச் சொல்லிக்கிட்டேயிருக்கலாம். அத்தனை பாட்டுங்க இருக்கு.

நீங்க போட்டிருக்கும் பாடலும் மிக அருமையான பாடல். ஜானகி நல்லாப் பாடியிருப்பாங்க. ரொம்ப நாள் கழிச்சி கேக்க வெச்சதுக்கு நன்றி.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/06/blog-post.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஜி.ரா மாதிரி சி.யா டி.யா?னு//

சி தான்! சி தான்! சி தான்! :-)
இதுல மட்டும் சர்வேசன் கூட ஜிரா கட்சி தான்! :-) //

ஹி ஹி இந்த விஷயத்துல தமிழ்நாடே நம்ம கட்சீலதான் இருக்கு. :) ஆந்திரா மலையாளம் எல்லாம் வெளியில இருந்து ஆதரவு குடுக்குது. வடக்கு மட்டுந்தான் ஹெலன் ஹெலன்னு எடக்கு பண்ணுது. :D

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/06/blog-post_11.html

அவங்க நாட்டுல இருக்குற இயற்கையை இயற்கையா விட்டுவைக்கிறதுல அவங்க அவங்கதான். மற்றொரு பயணத் தொடர். தொடருங்க டீச்சர்.

இங்க ஐரோப்பாவுலயும் ஊரூருக்கு ரெயில்வே ஸ்டேஷன்லயும் ஏர்ப்போர்ட்டுலயும் இன்பமேர்ஷன் செண்டர் வெச்சி...அதுல இப்பிடி பிட்டு நோட்டீசா அடிச்சுக் குடுத்துர்ராங்க. போகவும் பாக்கவும் ரொம்ப வசதியா இருக்குது. இப்பக் கூட நானு அப்பா அம்மா ஆஸ்திரியா போய்ட்டு வந்தோம். அங்கயும் இப்பிடித்தான்.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2008/06/95.html

ரவி, உங்கள் மனம் புண்படும் படி (பட்டிருச்சுதானே? இல்லைன்னா இந்தப் பின்னூட்டத்தை இக்னோர்டு..) பின்னூட்டம் இட்டதற்கு வருத்தங்கள்.

எஸ்.ஜானகி நன்றாகப் பாடியிருக்கிறார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நானும் அவருடைய ரசிகன். ஆனால் இசையரசியின் குரலும் இனிமையும் பாடும் திறமும் வளமும் இன்னமும் பிடிக்கும். அவ்வளவுதான்.

இந்த இடத்தில் ஏன் ஒப்புமை என்ற ஆத்திரத்துப் பின்னூட்டம் அது. மற்றபடி இந்தப் பாடலை எஸ்.ஜானகி சிறப்பாகவே பாடியிருக்கிறார் என்பதே எனது கருத்தும்.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2008/06/blog-post_11.html

ஆஆஆஆஆஆஆஆஆஆஆவ்.... இதுல இவ்வளவு விவகாரங்க இருக்கா....... வெவரமாச் சொல்லீருக்கீங்க. பொண்ணுங்க ஏற்கனவே ரொம்பத் தெளிவு. இனிமே ஒன்னும்........ சொல்ல வேண்டாம்....

// (அன்னிக்கு பார்த்து குளிச்சு,அழகா ட்ரஸ் பண்ணி அப்படியே முந்தானை காத்துல ஆட,வாசனையெல்லாம் பூசி,தேவதை பீலிங்கோட வந்திருப்பீங்க) வர்றதப் பார்த்தும் கண்டுக்காம இருப்பான்.மூஞ்சைத் திருப்பிப்பான்.நீங்க இதைப் பார்த்துட்டு 'பய புள்ளைக்கு என்ன ஆச்சோ'ன்னு பரிதாபப்பட ஆரம்பிப்பீங்க.அந்தப் பரிதாபம் லவ்வுல முடியும்..சாக்கிரத... //

கிழிஞ்சது... ஏற்கனவே நம்மள யாரும் பாக்கலையேன்னு பொலம்பீட்டிருக்கேன். இதுல இது வேறையா! நல்லாருங்க...ரொம்ப நல்லாருங்க...

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2008/06/blog-post_11.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

விசில் அடிச்சி அசின் புடிச்ச ஜிரா என்பது கோலிவுட்டில் இருந்து பம்பரவுட் வரைக்கும் பிரபலம்! //

ஐயா....ஆஆஆஆஆஆஆஆ ஐயா...ஆஆஆஆஆ ஏன் இப்பிடி? ஏன் இப்பிடி...நான் எங்க பிடிச்சேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

// அவரை பூஜா-கூஜா என்று பழித்துச் சொன்ன ரிஷானை கன்னிப் பெண்கள் நாளை முதல் முற்றுகைப் போராட்டம் நடத்துவார்கள்! //

முற்றுகையா முத்தக்கையா? ரிஷானுக்கு அப்ப முத்த யோகம்தான்.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2008/06/96.html

மிகவும் அருமையான பாட்டு. ஆனா ஒரு சிறு திருத்தம். மெல்லிசை மன்னரையும் இசைஞானியையும் முதன்முதலா இசையில இணைச்சது தாய் மூகாம்பிகை. :-)

அன்னையின் அருள் வந்து மோதி அப்படிச் செஞ்சது.

ஆனாலும்....

ஆனாலும்....

ஆனாலும்....

ஆனாலும்....

அடுத்த பின்னூட்டத்தப் பாருங்க :)

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2008/06/96.html

ஆனாலும்...

ஆனாலும்...

நீங்க கண்ணன் அருள்னே சொல்லுங்க...

ஏன்னா... அதுல மெல்லிசை மன்னர் "நாரணன் தேவி திருமகளே..." அப்படீன்னுதான் பாடுவாரு. :)

அதாவது படத்தோட இறுதிப் பாட்டு பாலமுரளி கிருஷ்ணா, மெல்லிசை மன்னர், சீர்காழி கோவிந்தராஜன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து பாடுவாங்க.

பாலமுரளி கலைமகளுக்கும்
மெல்லிசை மன்னர் அலைமகளுக்கும்
சீர்காழி மலைமகளுக்கும் பாடியிருப்பாங்க.

அதுவுமில்லாம மெல்லிசை மன்னரோட இசையில் முதன்முதலில் இளையராஜா பாடியது கிருஷ்ணகானம் பாகம்-2க்காக. அந்தப் பாடல் கிடைக்காமல்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். அதில் ஏழிசை வேந்தர் பாடிய தேவதாருவே காமதேனுவே என்ற பாடல் மிக மிக அருமையாக இருக்கும்.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2008/06/96.html

மெல்லத்திறந்தது கதவு படத்திற்காக இசையமைக்கப்பட்ட முதற்பாடல் குழலூதும் கண்ணனுக்குப் பாடல் அல்ல. அது "வா வெண்ணிலா" பாட்டு.

மெல்லிசை மன்னரையும் இசைஞானியையும் இணைத்த பெருமை சுந்தரராஜனையே சாரும். சுந்தரன்னா அழகன். அழகன்னா முருகன்தானே ;)

ஆர்.சுந்தர்ராஜன் முதன்முதலா சுகமான ராகங்கள் படத்துல மெல்லிசை மன்னர் இசையில இசைஞானியைப் பாட வெச்சாரு. அதோட தொடர்ச்சியாதான் மெல்லத்திறந்தது கதவுல அவரு இவங்க ரெண்டு பேரையும் ஒன்னா இசையமைக்க வெச்சது.

இருவரும் இசையமைக்க உட்கார்ந்த பொழுது இளையராஜா சொன்னாராம் மெல்லிசை மன்னரிடம்..."அண்ணே...சி.ஆர்.சுப்பாராமன் சண்டிராணியில ஒரு பாட்டு போட்டிருக்காருன்னே. அந்தப் பாட்டு மாதிரி ஓரு பாட்டாச்சும் போடனும்"

இவரும் சிரிச்சிக்கிட்டே "என்ன பாட்டு?"ன்னு கேட்டாராம்.

வான் மீதிலே இன்பத் தேன்மாரி பேயுதேங்குற பாட்டு. பானுமதி பாடியிருக்காங்க.

அப்ப மெல்லிசை மன்னர் சொன்னாராம். அந்தப் படத்துக்கு சி.ஆர்.சுப்பாராமனைத்தான் இசையமைப்பாளரா நியமிச்சிருந்தாங்களாம். ஆனா...திடீர்னு அவரு காலமாயிட்டாராம். இந்த சமயத்துல சண்டிராணி, தேவதாஸ் போன்ற படங்களுக்கு இசையமைக்கனும். ஆனா நியமிச்ச சுப்பாராமனும் போயிட்டாரு. அப்ப அவர் கிட்ட உதவியாளரா இருந்த இவரைக் கூப்டு இசையமைக்கச் சொன்னாங்களாம். இவரும் ஒத்துக்கிட்டாராம். அதுவும் ஒரு கண்டிசனோட. அதாவது இசை விஸ்வநாதன்னு போடாம குருவோட பேரான சி.ஆர்.சுப்பாராமன்னுதான் போடனும்னு சொன்னாராம். தேவதாஸ், சண்டிராணி படங்க அவர் பேர்ல வந்த காரணம் இதுதானாம்.

உடனே...இளையராஜா... அப்ப...அந்தப் பாட்டு மாதிரி ஒரு பாட்டு குடுங்கன்னு கேட்டாராம். அந்த பாட்டு மாதிரி ஏன்...அந்தப் பாட்டையே தர்ரேன்னு... அந்தப் பாட்டோட மீட்டரையே பயன்படுத்தி போட்ட மெட்டுதான் வா வெண்ணிலா பாட்டு.

அப்புறம் இன்னொரு திருத்தம். சக்கரக் கட்டிக்கு சித்திரக் குட்டிக்குப் பாட்டுல சித்ராவும் ஷைலஜாவும் கிடையாது. சசிரேகா மற்றும் குழுவினர். :)

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2008/06/96.html

// குமரன் (Kumaran) said...

ம்ம்ம். எங்க முருகன் அழகன் தான். அதில் ஐயமே இல்லை. ஆனால் எனக்குச் சுந்தரராஜன் என்றால் எங்கள் திருமாலிருஞ்சோலை அழகர் தான் நினைவுக்கு வருகிறார். அவர் பேரு தானே சுந்தரராஜபெருமாள். //

குமரன், உங்கள் திருமால் இருஞ் சோலையில் பெயர் சௌந்தரராஜப் பெருமாள். :) சுந்தரராஜன் இல்லை. அடுத்த வாட்டி கோயிலுக்குப் போறப்போ நல்லா கவனிச்சுப் பாருங்க.

G.Ragavan said...

http://engineer2207.blogspot.com/2008/06/blog-post.html

படம் பாத்தாச்சா! நானுந்தான்...இதோ விமர்சனம். :)

http://gragavan.blogspot.com/2008/06/dasavatharam-kamalhasan.html

நீங்க சொன்னதுகளையும் ரசிச்சேன். தமிழைக் காப்பாத்த தெலுங்கர் வருவாருன்னு சொல்றப்போ சிரிப்பு வந்துருச்சு. ஆனால் அந்த நெலமைலதான் இருக்கோம்.

அந்த ஜப்பான் பொண்ணு நல்லா சண்டை போடுறாங்க. நீங்க என்னவோ படிச்சீங்களே.. அது கராத்தே சண்டையா? அப்ப மக்கள் எச்சரிக்கையா இருக்கனும்.

G.Ragavan said...

http://cyrilalex.com/?p=438

நீங்களும் பாத்தாச்சா... நானுந்தான். ஹி ஹி

http://gragavan.blogspot.com/2008/06/dasavatharam-kamalhasan.html

நீங்க சொன்னாப்புல மாறாம நடிக்க மாட்டாரோன்னு பயம் வருது. நானும் அதைக் கோடிகாட்டீருக்கேன்.

மத்தபடி படம் கண்டிப்பா பாக்கனும். I agree with you.

G.Ragavan said...

http://thamilvalai.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf/#comment-23

நானும் பாத்துட்டேன். விமர்சனம் இங்கே

http://gragavan.blogspot.com/2008/06/dasavatharam-kamalhasan.html

G.Ragavan said...

http://gopinath-walker.blogspot.com/2008/06/blog-post.html

படம் பார்த்தேன். படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் படத்தைப் பார்க்கலாம். கண்டிப்பாகப் பார்க்கலாம்.

படம் தொய்வில்லாம ஓடிக்கிட்டேயிருக்கும். கருணாநிதி ஜெயலலிதா புஷ்ஷுகளைத் தவிர்த்திருக்கலாம்.

பூவராகனும் பலராம் நாயுடுவும் நல்ல பாத்திரங்கள்.

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2008/06/blog-post_14.html


:-)

படம் நன்றாக இருக்கிறது. கண்டிப்பாகப் பார்க்கலாம். ஆனால் சில அவதாரங்கள் அலுப்பூட்டுகின்றன. மேக்கப் சரியில்லை என்பதும் உண்மை.

நானும் நேற்றிரவு படம் பார்த்தேன். விமர்சனம் இங்கே

http://gragavan.blogspot.com/2008/06/dasavatharam-kamalhasan.html

G.Ragavan said...

http://vinaiooki.blogspot.com/2008/06/blog-post_13.html

ஹா ஹா ஹா செம காமெடி போங்க. மண்டபத்துல எழுதிக் கொடுத்துதான் வாங்கீட்டு வந்திருப்பாங்க போல.

என்னுடைய விமர்சனத்துக்குச் சுட்டி குடுத்ததற்கு நன்றி.

G.Ragavan said...

http://nirubar.blogspot.com/2008/06/10.html

அத்தனை அவதாரங்களிலும் இரண்டு அவதாரங்கள் மட்டுமே மனதில் நிற்கின்றன. ஒன்று பலராம் நாயுடு. மற்றொன்று பூவராகன். பாட்டு சுமார் ரகம். மற்றவையெல்லாம் ஏதோதான்.

ஆனா படத்தைப் பார்க்கலாம்.

G.Ragavan said...

http://videospathy.blogspot.com/2008/06/blog-post_14.html

கடைசியாச் சொன்னீங்களே.. அதுதான் என் கருத்தும். உண்மையான கமலுக்கு இறுதியிடம்தான்.

படத்தின் சிறப்பே...தொடர்புச் சங்கிலிதான். தொடங்கியதில் இருந்து முடியும் வரையில் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று ஓடுகிறது.

மேக்கப் சரியில்லை. உறுத்தலாகத் தெரிகிறது. நவராத்திரியிலோ மைக்கேல் மதன காமராஜனிலோ இவ்வளவு மேக்கப் தேவையிருக்கவில்லையெ!!!!!

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2008/06/kamal-i-spent-3450-plus-extras-on-you.html

வாங்க...என்னடா மங்கலாவே இருந்த ஜோதி திடீர்னு பிரகாசம் ஆகுதேன்னு நெனச்சேன். பாத்தா..ஒங்க பதிவு.

படத்துல நெறைய நுண்ணரசியல் இருக்கு.

ஒரு சின்னப் பையன் கமல் மேல கல்ல விட்டு எறிவானே... அவனுக்கு மேக்கப்பைப் பாருங்க. அப்படியே ஆளுடைப்பிள்ளையார் போலவே இருக்கும். அப்படீன்னா யார்னு தெரியும் தானே? :-)

சீ-தாம்-பரம்...நானும் கவனித்தேன். அப்புறம் ராமசாமி நாயக்கர், கலைஞர்...இப்பிடி நெறைய இருக்கு.

நானும் ஏதோ விமர்சனம்னு ஒன்னு போட்டிருக்கேன்.

http://gragavan.blogspot.com/2008/06/dasavatharam-kamalhasan.html

G.Ragavan said...

http://kaladi.blogspot.com/2008/06/blog-post_13.html

திண்ணை நினைவுகள் முட்டி மோதீருச்சு போல :)

ஆனா ஏன் சோகமா முடிச்சீங்க :(

திர்ணைன்னு எங்கூர்ப்பக்கம் சொல்வாங்க. எனக்கும் வீட்டில் பிடித்த இடங்களில் திர்ணையும் ஒன்று. அதில் ஏறுவதும்..குதிப்பதும் விளையாட்டுதான்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/06/blog-post_2653.html

குமரனிடம் கேள்விகளா? என்ன கேக்குறது?

1. உங்கள் கருத்துப்படி கோழிக்கறியில் எந்தப் பகுதி மிகவும் சுவையானது?

2. ஆட்டாத கறியை ஏன் ஆட்டுக்கறி என்கிறார்கள்?

3. அமெரிக்கா இந்தியா தவிர்த்த ஏதாவது ஒரு நாட்டில்தான் இனிமேல் வாழவேண்டும் என்ற நிலை வந்தால் எந்த நாட்டிற்குச் செல்ல விரும்புவீர்கள்?

4. தங்கள் வாழ்க்கையைத் தீர்மானித்துக்கொள்ளும் உரிமை உங்கள் குழந்தைகளுக்குக்குக் கொடுக்கப்படுமா?

5. சின்னவீடு வைத்துக் கொள்வதைக் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2008/06/blog-post_13.html

ஒப்பனை தவிர மற்ற தொழில்நுட்பங்களில் படம் சிறப்பாக வந்திருக்கிறது. பொழுதுபோக்கும் படமும் கூட. இசைதான் இசைவாக இல்லை. நானும் எதிர்பார்ப்பில்லாமல்தான் சென்றேன். படம் ஒருமுறை பார்த்தாயிற்று. இன்னொரு முறை கண்டிப்பாக பார்ப்பேன். ஆனால் இங்கு இரண்டு மூன்று நாட்கள்தான் படம் ஓடும்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/06/blog-post_13.html

உண்மைதான் வெட்டி. முதல் பதினைந்து நிமிடங்கள் அபாரம். மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. கருத்து ஒருபக்கம் இருக்க...அந்தப் பகுதி சிறப்பாகவே வந்திருக்கிறது. படம் முழுதும் மெனக்கெட்டிருக்கிறார்கள்.

இசைதான் சரியில்லை. தேவாவைக் கூப்பிட்டிருந்தால் கூட நல்ல ஹிட் பாட்டுகள் கொடுத்திருப்பார்.

ஒரு ஐயம். பூவராகன் என்று நினைக்கிறேன். பூ - பூமி. வராகம் என்றால் பன்றி. அப்படி உண்டான பெயர் என்றே நான் நினைக்கிறேன்.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2008/06/kamal-i-spent-3450-plus-extras-on-you.html

// Sridhar Narayanan said...

//ஆளுடைப்பிள்ளையார் போலவே இருக்கும். //

கொண்டை போட்ட சைவப்பிள்ளைகள் (சிறுவர்கள் என்ற அர்த்ததில் சொல்கிறேன்) எல்லாம் ஆளுடைப்பிள்ளை என்று நினைத்துக் கொண்டால் என்ன செய்வது?

அப்படி வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு வைக்கப்பட்ட காட்சியாக இருந்தால், மூன்று மணிநேர திரைப்படத்தில் ஒரு விநாடி காட்சி 'மட்டும்' உங்கள் கண்ணுக்கு தெரிகிறது. என்னத்தை சொல்ல :-)

ஏன் இன்னொரு காட்சியில் 'உங்களைப் போல தெலுங்கு பேசுபவர்கள் வந்து தமிழ் வளர்ப்பார்கள்' என்று சொல்வதும் அந்தக் காட்சியை விட்டு எடுத்துப் பார்த்தால் தமிழக அரசியலை ஒட்டி பல அர்த்தங்களைக் கொடுக்கும். இல்லையா?

அவர் பரந்துபட்ட அறிவோடு திரைக்கதையை அமைத்திருக்கலாம். ஆனால் படத்தின் பாதையில் அந்த காட்சிகள் நெருடலாக இல்லை என்பதே எனது எண்ணம். //

ஸ்ரீதர், ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். படத்தை ரசித்தேன். பார்த்தேன். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது என்பதே என் கருத்தும். நான் சொல்லிருப்பதையெல்லாம் வைத்துக் கொண்டு..படத்தைப் பார்க்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. பார்க்கப்பட வேண்டியபடம். பாராட்டவும் விமர்சிக்கவும் படவேண்டிய படம். விலக்கப்பட வேண்டிய படமல்ல.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2008/06/blog-post.html

படம் பாத்துட்டீங்களா... அதான் விமர்சனத்துல தெரியுதே. உங்க கருத்துகளை நான் ஒத்துக்கிறேன். படத்தைக் கண்டிப்பாப் பாக்கலாம். ஆனால் கமலின் உழைப்பிற்காகவே.

G.Ragavan said...

http://manjoorraja.blogspot.com/2008/06/blog-post.html

தசையை அவதாரம் எடுக்க வைக்கிறத விட... தன்னுடைய நடிப்பை அவதாரம் எடுக்க வைக்கனும் கமல். அதுதான் நல்லது. கமலின் கடின உழைப்பிற்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

G.Ragavan said...

http://iniya-inbaa.blogspot.com/2008/06/blog-post.html

அருமையான விமர்சனம். படத்தில் கமல் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றீர்கள். அருமை.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2008/02/blog-post_04.html

காத்திருக்கிறோம்... காத்திருக்கிறோம்...

"வலை" உலக நாயகனே.... வா வா

G.Ragavan said...

http://madhumithaa.blogspot.com/2008/06/blog-post_15.html

பாத்துட்டீங்களா! ஆகா... பாக்கலாம் ஒரு வாட்டி. என்ன வருத்தம்னா... இவ்ளோ யோசிச்சிக் கஷ்டப்பட்டு... இப்பிடியாச்சேன்னுதான்...ம்ம்ம்ம்ம்

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/06/dasavatharam-quiz.html

1. கிருஷ்ணவேணி
2. தேவிஸ்ரீபிரசாத்
3. மாயா, கிரைஸ்ட் பிளெச்சர்
4. Cargo Plane
5. Chaos Theory, Butterfly Effect
6. 2.45
7. அனு
8. வைரமுத்து (நடுவுல கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்னெல்லாம் வருதேய்"
9. வின்செண்ட் பூவராகன் (பூவராகவன் இல்லைன்னு நெனைக்கிறேன்)
10. Segway

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2008/06/97.html

நான் கொடுத்த பாட்டை வலை ஏற்றியமைக்கு நன்றி பல திறு கண்ணபிறான் றவி சங்கற் அவர்களே

றவி, தாய் மூகாம்பிகைக்கு முன்பே வருவான் வடிவேலன் தான் பெயர் வாங்கி தந்தது

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/06/dasavatharam-quiz.html

ஜாஸ்மின்
165 நிமிடம்னு இங்க போட்டிருந்தாங்க. அப்பொ ரெண்டே முக்கால் மணி நேரம் தானே?
பாடுனது கமல் தான். வேற யாரு?

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2008/06/97.html

// * கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் - வாணி/யேசுதாஸ் - கண்ணன் பாட்டில் முன்பே வந்தது! இதோ!
* அடி ராதா! ஸ்ரீ கிருஷ்ணன் வந்தான் - வாணி //

றவிசங்கற், படத்தில் அத்தனை பாடல்கலிலும், இந்த இரண்டு பாடல்கள் மிகவும் பிடிக்கும்.

திருக்கோயில் பாடலும் அருமையனதெ. ஒவ்வொரு ஊரகக் கூட்டிக் கொன்டு செல்வர்கள் பாட்டில்.

அதே போல வடதிசையில் பாட்டில்.. வடகத்திக் கோயில்கள் பலவற்றைக் காட்டுவார்கள்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/06/blog-post_16.html

டீச்சர், இந்தப் படம் நல்லாருக்கும். புதுமையான கதை. இன்னைக்கும் கூட. அன்னைக்கு எப்படியிருந்திருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. காதலி கூட ஒரு நாள்...அதாவது பகல் மட்டும் வாழனும்னு காதலன் நெனைக்கிறான். அந்தக் காதலிக்குக் கல்யாணம் ஆயிருச்சுன்னு தெரிஞ்சும்...

பாட்டெல்லாம் ரொம்ப நல்லாயிருக்குமே டீச்சர். ஆண்டவன் இல்லா உலகமிதுன்னு ஒரு பாட்டு டி.எம்.எஸ், வாணி ஜெயராம் பாடியிருப்பாங்க. சூப்பரா இருக்கும். மத்த பாட்டுகளும் நல்லாயிருக்கும். ஆனா மறந்து போச்சு. தட்சிணாமூர்த்தி இசைன்னு நெனைக்கிறேன்.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2008/06/blog-post_17.html

இந்த மசாலாப் படங்கள்ள... சக்தி மசாலா... ஆச்சி மசாலாப் படங்கள்ளாம் இருக்காமே....அதையும் போடுறது...நீங்க போட்டுருக்குறது வடக்கத்தி மசாலாக்களாச்சே!

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2008/06/blog-post_16.html

அமைதியும் அருளும் பொலியும் முகம். இத்தனை நாள் இவரது சிவச் சொற்பொழிவுகளைக் கேளாமல் போனேனே.

சைவச் செம்மல்கள் அனைவரும் நம்மை விட்டுப் போகிறார்களே...அடுத்து எவரிடம் சென்று சொற்பொழிவுகளைக் கேட்பது!!!!

இந்த பொழுதில் இவரைக் கேட்க நேர்ந்ததே!

அவருடைய ஆன்மா சிவபதம் அடைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. வணங்குகிறேன்.

G.Ragavan said...

http://surveysan.blogspot.com/2008/06/ssm-same-sex-marriage.html

இங்க நெதர்லாந்து வந்தப்போ அப்பட்டமாகத் தென்பட்ட விஷயங்கள்ள இதுவும் ஒன்னு.

ஆனா இங்க அதப் பெரிய விஷயமாவே எடுத்துக்கிறதில்லை. அலுவலகத்துலயே இருக்காங்க. சரி. அது அவரவர் விருப்பம். தலையிட நமக்கு உரிமையில்லை.

ஆனா பிறப்புலயே இப்பிடியிருக்குங்குறது உண்மையிலேயே புதிய செய்தி.

ஒரு கேள்வி. இங்க நூத்துக்குப் அஞ்சு பேரு ஓரினச்சேர்க்கைன்னு வெச்சுக்குவோம். இது பிறப்பால வர்ரதுன்னா... இதே விகிதாச்சாரம்...அல்லது கிட்டத்தட்ட இதே அளவு.... இந்தியாவுலயும் இருக்கனும்ல? அவங்கள்ளாம் என்ன பண்ணுவாங்க?

நீங்க போட்டிருக்குற படத்தை மாத்தனும்னு தேவையில்லை. அன்பைப் பரிமாறிக்கொள்வதில் முத்தம் முதலிடம். இருக்கட்டும். தப்பில்லை.

G.Ragavan said...

http://kavinaya.blogspot.com/2008/06/blog-post_13.html

தட்டுல இருக்குற ஒவ்வொரு ஜிலேபியும் ஜிலுஜிலுன்னு இருக்கு. அதுல ரெண்டு எடுத்து கடிச்சிக்கனும்னு தோணுது.

ம்ம்ம்.. நம்மளையும் கூப்டுட்டீங்க. சரி பதிவு போட்டுருவோம்.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4

ஜனனிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். எல்லாம் வல்ல முருகப் பெருமாள் திருவருளால் நற்பண்பும் நல்லறிவும் நற்செல்லங்கள் அனைத்தும் பெற்று நீடு வாழ்க.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/06/blog-post_17.html

டீச்சர்...டீச்சர்... நீங்க போட்டுருக்குறது ஜாங்கிரி. ஜிலேபி இல்ல... யாரும் பாக்குறதுக்கு முன்னாடி படத்த மாத்தீருங்க... :D

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/06/blog-post_17.html

// துளசி கோபால் said...

வாங்க ராகவன்.

புளிச்சுக்கிடக்கும் வட இந்திய ஜி(ஜ)லேபி யாருக்கு வேணும்? நம்ம பக்கம் ஜிலேபின்னா(வே) ஜாங்கிரிதான்:-)))

வேணுமுன்னா 'ஷிவ்ஜி வாயிலே ஜாங்கிரி'ன்னு தலைப்பை மாத்திப்புடலாமா:-)))) //

ஹிஹி எனக்கும் ஜிலேபியை விட ஜாங்கிரிதான் பிடிக்கும். :) நல்லா செவசெவன்னு ஜிராவுல ஊறிக்கெடந்த ஜாங்கிரிதான் பெஸ்ட். அதோட முழுப் பேரு ஜஹாங்கிரி :-) முகலாயர் காலத்துல உருவான பண்டம்.

--------------

// இலவசக்கொத்தனார் said...

தசாவதாரம் படம் பார்த்தா குத்தம் கண்டுபிடிக்க வேண்டியது.

சி.வா.ஜி பதிவு படிச்சா குத்தம் கண்டுபிடிக்க வேண்டியது. //

இலவசக் கொத்தனாற் அவற்களே...குத்தம் கண்டுபிடிக்கிறோம்னா சொல்றீங்க? எங்க தப்பு இருக்குன்னு சொல்லித் திருத்துறோம்னு எடுத்துக்கலாமே! ;-) நீங்களும் அந்தக் கண்ணபிறான் றவிசங்கற் கூடச் சேந்துக்கிட்டு எனக்கு எதிறாப் பேசத் தொடங்கீட்டீங்களே!

// இந்த ஜிறா நிலமை வர வர மோசமயிக்கிட்டே வருதே. சீக்கிரமா அப்பா அம்மா கிட்ட சொல்லி ஒரு டச்சு பொண்ணைக் கட்டி வைக்க வேண்டியதுதான். அப்போ தெரியும் குத்தம் கண்டுபிடிச்சா என்ன நடக்குமுன்னு. //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... பாவங்க இந்த ஊர்ப் பொண்ணுங்க... நாளோரு பாய்பிரண்டுன்னு நிம்மதியா இருக்காங்க. விட்டுருங்க அவங்கள.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/06/krs.html

:-))))))))))))

பாலாஜி பாலாஜி..... இது நான் தொடங்கலை. கமல் தொடங்கினாரு. அதுக்கும் முன்னாடியே கே.ஆர்.எஸ் தொடங்கினாராம்.

நான் நிப்பாட்டிடேன். கமலும் கே.ஆர்.எஸ்-உம் நிப்பாட்டிடாங்களான்னு தெரியலை.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/06/krs.html

// வெட்டிப்பயல் said...

// G.Ragavan said...

பாலாஜி பாலாஜி..... இது நான் தொடங்கலை. கமல் தொடங்கினாரு. அதுக்கும் முன்னாடியே கே.ஆர்.எஸ் தொடங்கினாராம்.
//
கமல் இதை எந்த வலைப்பதிவுல எழுதினார்னு சொன்னா நல்லா இருக்கும் ;) //

அட... வலைப்பதிவுல விமர்சனம் எழுதுனா.. வலைப்பதிவுலதான் படம் பாக்கனுமா என்ன! கமல் ஒரு படத்துல சொன்னாரு. அதைப் பத்திச் சொல்றப்போ சொன்னேன். கமல் வலைப்பூவுல இல்லைதான். ஆனா கே.ஆர்.எஸ் இருக்காரே...வலைப்பூவுல மொதமொதலா அதைச் சொன்னதும் அவரே. அதுனாலதான் அவரு "எது ஒலித்ததோ அது நன்றாகவே ஒலித்தது"ன்னு சொல்றாரு.

//
நான் நிப்பாட்டிடேன்.
//
நல்லது... ஆனா இதுக்கு என்ன சொல்றீங்க?

அம்பி
//ஜிறா பதிவு படிச்சு தான் இப்ப எல்லாமே எமக்கு வல்லினம் தான். நீங்க கூட றவிசங்கர் ஆயிட்டேங்களே. :)// //

அது சரி... நான் செஞ்சத அவங்க பின்பற்றுகிறவர்களா இருந்தா..நான் நிப்பாட்டுனா அவங்க நிப்பாட்டிருக்கனும்ல. அவங்க அவங்க விருப்பப்படி செய்றாங்க.

//
கமலும் கே.ஆர்.எஸ்-உம் நிப்பாட்டிடாங்களான்னு தெரியலை//
கேட்டா அவுங்களை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேனு சொன்னாலும் சொல்வாங்க ;) //

இப்ப சொன்னியே அது கருத்து. ஆன்மீகச் சிங்கம்....21ம் நூற்றாண்டின் ராமானுஜர், சண்மதச் செல்வர், செந்தமிழுக்கே சிக்கெடுக்கும் சிக்கலார் கே.ஆர்.எஸ் போன்ற தலைவர்கள் செய்தால் அதைப் பின்பற்றுவார்கள் மக்கள். வாழும் எடுத்துக்காட்டுகளாகிய கே.ஆர்.எஸ் போன்றோரைக் கண்டு மக்கள் கற்றல் எளிது (ஸ்மைலியெல்லாம் போடலை. அதுனால ரொம்பவே சீரியசாச் சொல்றேன்)

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/06/blog-post_5036.html

ஹா ஹா ஹா நான் பாத்தப்ப இப்ப இருக்குற கும்மிகள்ளாம் இருக்கலை. ஆனா இப்பிடி புகுந்து விளையாடுறீங்க. :D

எனக்கு இந்தப் படத்தப் பாக்க எவ்ளோ செலவாச்சு தெரியுமா?

ஆம்ஸ்டர்டாம்ல இருந்து அல்மெராவுக்கு டிரெயின் டிக்கெட் - 5.60 யூரோ
அல்மெரா ஸ்டேஷன்ல டோனேர் கபாப் - 7.5 யூரோ
படம் பாக்க டிக்கெட் - 12.50 யூரோ
காப்பி - 2 யூரோ
படப் பெட்டி தாமதமானதால கடைசி டிரெயினை விட்டாச்சு. அதுனால டாக்சிக்கு 16 யூரோ

ஆக மொத்தம் = 41 யூரோ 60 செண்ட்டுகள். நீங்கள்ளாம் டாலர்ல பொலம்புறீங்க. நான் யூரோவுல பொலம்புறதப் பாத்து சந்தோஷப்படுங்க.

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2008/06/blog-post.html

பொன்னியின் செல்வன் ஒரு அருமையான புதினம். படிக்கப் படிக்க கதைக்குள்ளேயே சென்று விடுவோம். அவ்வளவு அருமையான புதினம். பாத்திரப்படைப்புகள்.

தசாவதாரத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம். ஆனால் உலகத்தரம் என்றேல்லாம் எந்த வகையிலும் சொல்ல முடியாது. அதில் போட்டிருக்கும் உழைப்பைத் தவிர. இது என் கருத்து.

G.Ragavan said...

http://ilavanji.blogspot.com/2008/06/blog-post_16.html

நகைச்சுவையும் கண்ணீரும் கலந்து பதிவுகள் பல தரும் வலையுலகக் காமதேனுவே.... மீண்டும் உங்களது பதிவுகளைக் கண்டு சொல்லொனா மகிழ்வை மனம் எய்துகிறது.

பதிவுகளில் எழுத்துகள் மட்டுமல்ல புகைப்படங்களும் கவிபாடும் என்று காட்டிய கற்பகதருவே! இன்னும் எத்தனை புகைப்படங்கள் தருவே? :D அட நெறையக் குடுங்கன்னு சொன்னேன். :)

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2008/06/521.html

வாவ்.. ஜெயச்சந்திரன் வாரமா! சூப்பர் :) நன்றி நன்றி நன்றி

அருமையான பாட்டுங்க இது. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில வந்த நல்ல பாட்டுகள்ள இது ஒன்னு.

// தமிழன்... said...

ஓ.. ஜெயச்சந்திரன் வாரமா அதானே பாத்தேன், ஆனா கப்பி அண்ணன்தான் எல்லா பாட்டும் போடுறாரு ஜெயச்சந்திரன் ரசிகரோ..
அண்ணே ஒரு சந்தேகம் பூவே உனக்காக படத்தில "சொல்லாமலே" பாட்டு யார் பாடினதுண்ணே....? //

தமிழன், அதுவும் ஜெயச்சந்திரன் பாடியதுதான். எஸ்.ஏ.ராஜ்குமார் இசைதான். :)

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2008/06/520.html

சின்னப் பாட்டுதான். ஆனா அழகான பாட்டு.

ஒரு சின்ன திருத்தம். பாடியவர் எஸ்.ஜானகி அல்ல. இசையரசி பி.சுசீலா அவர்கள்.

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2008/06/518.html

இளையராஜா இசையில் வெளிவந்த இனிமையான பாடல். ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்....ஆகா...இனிமை.. இனிமை.. இனிக்க இனிக்க இளமை.

இதே படத்தில் சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன் என்றொரு சிறந்த பாடலையும் ஜெயச்சந்திரன் பாடியிருக்கிறார்.

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2008/06/519.html

எப்பேர்ப்பட்ட பாட்டுய்யா இது! ஒரு காலத்துல தமிழ்நாட்டையே கலக்கி...ஒரு இயக்குர்/நடிகர் மற்றும் நடிகைக்கு வாழ்வு கொடுத்த படமாச்சே! பாட்டாச்சே! இந்தப் படம் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்னு அத்தனை மொழியிலும் ஹிட். ஹிட்டோ ஹிட். அருமையான பாட்டைக் குடுத்தமைக்கு நன்றி பல.

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2008/06/525.html

நன்றி நன்றி நன்றி :-)

விரும்பிக் கேட்ட பாடலை உடனே தந்த வலைப்பூ வள்ளலே! நன்றி.

இந்தப் பாடல்தான் ஜெயச்சந்திரன் முதலில் தமிழில் பாடிய பாடல்.

இந்தப் பாடல் இயக்குனர் ஸ்ரீதரின் அலைகள் என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது.

கன்னட நடிகரான விஷ்ணுவர்தன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதற்குப் பிறகு மழலைப் பட்டாளங்கள் படத்தில் கதாநாயகனாகவும்.. விடுதலை படத்தில் துணைக் கதாநாயகனாகவும் நடித்தார்.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2008/06/blog-post_1521.html

மனைவின்னா தாலி இருக்கும். துணைவிக்கும் தாலி இருக்கலாம். ஆன சர்ட்டிபிகேட் இருக்காது.

சுருங்கச் சொன்னா பொண்டாட்டி வெப்பாட்டி.

லக்கி, கோயிங் ஸ்டெடி கிண்டல் செய்யப் பட வேண்டியதுன்னா... துணைவி காமெடியும் கிண்டல் செய்யப்பட வேண்டியது தான். My comment is not based on my political ideas.. but just a comment on their personal life.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2008/06/blog-post_1521.html

// ஜிரா கவுத்துப்புட்டிங்களே,

வாழ்க்கை 'துணை' நலம் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் வப்பாட்டி குறித்து சொல்லி இருக்காரா ?

துணைவியை - வப்பாட்டி என்று சொல்வது சரிவராது..ஏனென்றால் துணைவியை பொது இடத்திற்கு கூடவே விழாக்களுக்கும் கூட்டிச் செல்வார்கள், மனைவிக்கு இருக்கும் சகல உரிமைகளும் உண்டு. //

மரியாதை உன்டு..... சர்டிபிகேட் உன்டா? :-)

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2008/06/528.html

வாணி ஜெயராம் முதன்முதலில் தேசிய விருது பெற்ற முதல் பாடல். மெல்லிசை மன்னரின் இசையில் கவியரசர் எழுதிய அழகான பாடல். கேட்கக் கொடுத்தமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://madhumithaa.blogspot.com/2008/06/blog-post_6566.html

உண்மைதான் மதுமிதா. மிகச்சிறப்பான விளப்பரவுத்தி என்றே எனக்கும் தோன்றுகிறது. உங்களோடு சேர்ந்து நானும் பாராட்டுகிறேன். அந்த விளம்பரம் எடுத்தவரைத்தான்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2008/06/blog-post_24.html

உண்மைதான் ஜோcஅப் சார். எல்லா பதிவும் எழுத்தல்ல. ஆன நல்ல எழுத்துகளும் பதிவில் இருக்கு

G.Ragavan said...

http://imsaiarasi.blogspot.com/2008/06/blog-post_24.html

:-)

//
ஏதேனும் உங்களை வருத்தப்படும் செய்யும் வகையில் எழுதி இருந்தால் தயை கூர்ந்து என்னை மன்னியுங்கள் ஜி.ரா அண்ணா. //

இப்பிடி எழுதுனதுலதான் வருத்தம் வந்துருச்சு. :D ஆனாலும் தையைய கூர்ந்து மன்னிச்சாச்சு :)

சரி. பதிவுக்கு வருவோம். படம் எனக்குப் பிடிச்சிருந்தது. நானும் பாத்தேன். ஆனால் அதில் பிடிக்காத அம்சங்களைக் குறிப்பிட்டும் எழுதியிருந்தேன்.

சரிம்மா கமலை விட்டுர்ரேன். அந்த ரெங்கராஜ் நம்பியை எடுத்துக்கிருவோம். அந்தக் குலோத்துங்கனத்தான் வில்லனாக்கியாச்சே. அதுனால அவன் நல்லவனா கெட்டவனா... அல்லது நல்ல சைவனா.. கெட்ட சைவனான்னு பாக்கத் தேவையில்லை. படத்துல அவன் மட்டும் இல்லை...எல்லாச் சைவர்களையும் வில்லனாக் காட்டியாச்சு. ஆகையால... சைவர்களையும் விட்டுருவோம்.

ஆனால் ரங்கராஜ் நம்பி. அந்தப் பாத்திரம் நல்லவரா கெட்டவரா? அதான் கேள்வி. ஏன்னா..... கல்லை மட்டும் கண்டால்னு கேள்வி கேக்குறவரு... அஞ்சுல எட்டு போகாதுன்னு சொல்றத எப்படி எடுத்துக்கிறது? ஒருவேளை ரங்கராஜ நம்பியும் வைணவமே பெரிது. விஷ்ணுவே பெரிய கடவுள்னு சொல்றவரா இருந்தா... அஞ்சுல எட்டு போகாதுன்னு சொல்றதும்....அறிவோமை ஹரி ஓம்னு மாத்துறதும்...ஒப்புக்கொள்ளலாம். ஒருவேளை அந்த ரங்கராஜு உண்மையிலேயே ஆத்ம பக்தியில் இருந்தால்...நமச்சிவாயன்னு சொல்றது அவருக்குப் பெரிய விஷயமாகவே இருக்காது. ஏன்னா ஆழ்வார்கள்ல யாரோ ரெண்டு பேரும் நாயன்மார்கள்ள ஒரு பத்துப் பன்னிரண்டு பேரும்...இந்த அருணகிரி மாதிரி ஆளுங்களும் சிவாய முருகாய கிருஷ்ணாயன்னு சொல்லீருக்காங்களாம். ஆனால் அவரை உத்தமராக் காட்டி...well...கருணாநிதிகிட்ட இந்தப் பாத்திரத்தின் மனவுறுதியைக் குறிப்பிட்டு அதைச் சிறப்பாகச் சொன்னாரம் கமல். அதையும் கருணாநிதி பாராட்டியிருக்காரம். ஆனா குலோத்துங்கனோட உறுதிக்கும் நம்பியோட உறுதிக்கும் வித்தியாசம் எனக்குத் தெரியலை. என்ன குலோத்துங்கன் மன்னன். அதுனால கடல்ல தூக்கிப் போட்டான். நம்பி அப்படியில்லை. ஆகையால செத்தாலும் சிவன் பேரைச் சொல்லக் கூடாதுன்னு நெனைச்சான். அப்புறமென்ன ரெண்டு பேருக்கும் வித்யாசம்? ஒருவேளை சிவன் பேரைச் சொல்றதுல வருத்தமே இல்லை. ஆனா நீ சொல்லி நான் செஞ்சுட்டா உன்னோட ஆணவம் வெற்றி பெற்றதா இருக்கும்..அதுனால சொல்லலைன்னு சொல்லீருக்கலாம். ஆனால் அஞ்சு எட்டு டயலாக்கு எல்லாம் வெச்சிப் பாத்தா... நம்பி அப்படியெல்லாம் நெனைக்கிறவர்னு தோணலை.

அப்படி இருக்குறப்போ அந்தப் பாத்திரத்தின் மனவுறுதியை முதல்வரிடம் சிலாகித்துக் கமல் பேசியதை வெச்சுப் பாக்குறப்போ....நம்பி நல்லவன்னு அவர் சொல்ல வர்ரதாத்தான் எனக்குத் தோணுது. அதைத்தாம்மா நான் கேள்வி கேட்டேன். உனக்காவது நம்பி நல்லவனா? கெட்டவனா? நல்ல வைணவனா? கெட்ட வைணவனான்னு புரிஞ்சதா?

எனக்கு வைணவத்தின் மேல வெறுப்பெல்லாம் கிடையாது. தமிழ்ச் சொல்லாண்டு ஆண்டாள் பாடிய பாவும் பல்லாண்டாய் கோயிலில் நின்றாண்டு வரும் பல்லாண்டும் எனக்கும் பிடிக்கும். ஆனா அந்தக் கேள்விகள் கேள்விகளாத்தானே இருக்கு. நீயாச்சும் பதில் சொன்னா இந்த அண்ணனுக்கு ஏதாச்சும் புரிஞ்சாலும் புரியலாம். :-)

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2008/06/5-poornima-jayaraman-psuseela-psusheela.html

// rapp said...

சீனத்து பட்டு மேனி என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படம் பேரென்னங்க? //

வணக்கம் ராப். அந்தப் பாட்டு தாய்மூகாம்பிகை என்ற படத்தில் இருக்குது. ஜனனி ஜனனின்னு இளையராஜா பாடுவாரே

// அதேபோல ஷங்கர்(கணேஷ்) வாயசைக்கும் பழைய 'என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி' பாட்டையும் கொஞ்சம் வலையேத்த முடியுங்களா? வீடியோ இல்லைனா கூட பரவாயில்லை. ஆடியோ இருந்துச்சின்னா அதுக் கூட போதுங்க.//

ஓ அந்தப் பாட்டா... குன்னக்குடி வைத்தியநாதன் இசை. நடராசன்னு ஒருத்தர் பாடியிருக்காரு. படம் பேரு தெரியாதே. ஆனா அதை இங்க வலையேத்த முடியாது. ஏன்னா இங்க இசையரசி பி.சுசீலா பாடிய பாடல்கள் மட்டுந்தானே போடுவோம். தேன் கிண்ணம்னு ஒரு வலைப்பூ இருக்கு. அங்க நேயர் விருப்பமெல்லாம் போடுவாங்க. அவங்ககிட்ட கேளுங்களேன்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/06/blog-post_25.html

சூப்பர் பதிவு பாலாஜி. செம கலக்கல். போட்டுத் தாக்கியிருக்க...

// //
உங்க டேமேஜருக்குத் தமிழ் தெரியும்ல. இல்லை இப்ப ஆளு மாறியாச்சா?//
அவர் எப்பவுமே எனக்கு மேனஜரா இருந்ததில்லை ;) //

அவரு தப்பிச்சுட்டாரேன்னு வருத்தப்படுறதா! நீ மாட்டிக்கலையேன்னு சந்தோஷப்படுறதா! :D

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/06/blog-post_25.html

// அவர் யாரை சொன்னாருனு தெரியல. நான் உங்களை தான் சொன்னாருனு நினைச்சிட்டு இருந்தேன். நீங்க செந்தில்னு நினைக்கறீங்க போல.ஆனா என் பதில் ரெண்டுக்குமே கரெக்டா போச்சு :-) //

நானும் என்னைத்தான் சொன்னேன் :D

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/06/3.html

:) நல்ல கேள்விகள் நல்ல வடைகள். மன்னிக்க.. விடைகள் :D

காலேஜ்ல படிக்கிறப்போ பஜனையா.. செம காமெடியா இருந்திருக்கும் போலவே. கனாக்காணும் காலங்கள் நாடகத்தில் வரும் கிஷன் மாதிரி இருந்திருக்கும் போல!

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/06/blog-post_26.html

:-)

அதாவது கோவி.கண்ணன் சொன்னா புரிஞ்சிக்குவாரு
வெட்டி பாலாஜி சொன்னா கேட்டுக்கிறுவாரு
ஜிரா (எ) கோ.இராகவந்தான் சொன்னாப் புரிஞ்சிக்கவும் மாட்டாரு... கேட்டுக்கிறவும் மாட்டாரு... ஆகையால அவர் கேட்டதுக்குப் பதில் சொல்வீங்களாக்கும் :D

G.Ragavan said...

கண்ணன் பாடல்கள் வலைப்பூக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

கிருஷ்ணா நீ வேகமாய் வாராய் என்ற பாடல் பிள்ளைக்கன்னட வகையில் எழுந்தது. அட நம்மூர்ல பிள்ளைத்தமிழ்னா கருநாடகத்தில் பிள்ளைக்கன்னடமாத்தானே இருக்கனும்.

http://kannansongs.blogspot.com/2008/06/100-krs_26.html

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/06/blog-post_26.html

// கொத்ஸ் சொன்னதைப் பாத்து, இப்ப எனக்கே ஜந்தேகம் வந்துருச்சி!
இராகவன் போன ஜென்மத்துல "அவரோ"? அடியேன் "இவரோ"?
:-)))) //

இம்மையில் இமையானான் உமையாள் மகன். மறுமையை மறைத்தொழித்தான் முழுவேந்தி புதல்வன். மும்மையும் எம்மைச் செம்மையாகக் காத்தவன்...என்றென்றும் தனை மறக்கவொட்டாது உடனிருப்பவன் செந்தமிழ்ச் செல்வன் வேலவன். ஆகையால அவராவோ இவராவோ இருந்திருக்க வாய்ப்பில்லைன்னுதான் தோணுது. :-)

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/06/blog-post_27.html

1. முத்தைய்யா
2. சிநேகிதியே - வித்யாசாகர்
3. ஜீவன் - கீர்த்தி சாவ்லா
4. லீலா - ஜி.ராமநாதன்
5. சதாசிவ பிரம்மேந்திரர் - கே.வி.மகாதேவன் - வாணி ஜெயராம் பாடியிருக்கிறார். மானச சஞ்சரரே...
6. ஊத்துக்காடி, ஹரிணி, கல்யாணிமேனன், ராமலட்சுமி
7. கத பறயும்போழ்
8. எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நானென்றான்...இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்... ஆகா...தன்னை வீட்டில் வைத்து வேலைக்காரனாக வளர்த்தாலும் ரங்காராவின் அன்புக்குத் துணையாக எங்கும் எதிலும் கண்ணனாக வருவாரே..
மூன்று தெய்வங்கள் படத்திலும் வருவார். ஆனால் அதில் விஷ்ணுவாக வருவார்.
9. பி.எஸ்.சசிரேகா - கே.ஜே.யேசுதாஸ்
10. துரியோதனன் - அசோகன்

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2008/06/blog-post_27.html

ஹா ஹா ஹா இது முந்தி மெயில்ல வந்துச்சு... அதையே மாத்தி சொல்லீருக்கீங்க. நல்லாருக்கு. :-)

G.Ragavan said...

http://cyrilalex.com/?p=440

சபாஷ்.. சரியான போட்டி.. சிறுகதைதானே.. அறிவியல்தானே....எழுதீருவோம். :-)

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2008/06/blog-post_28.html

அடக்கடவுளே.. பாவங்க அந்தப் பூனையும் கொரங்கும்....

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/06/blog-post_25.html

// வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

// அவர் யாரை சொன்னாருனு தெரியல. நான் உங்களை தான் சொன்னாருனு நினைச்சிட்டு இருந்தேன். நீங்க செந்தில்னு நினைக்கறீங்க போல.ஆனா என் பதில் ரெண்டுக்குமே கரெக்டா போச்சு :-) //

நானும் என்னைத்தான் சொன்னேன் :D//

சிரிக்காதீங்க.. இன்னும் சான்ஸ் இருக்கு ;) No More **** :-)) //

அட.... ஆமாம்ல.... அத மறந்துட்டேன்... அப்போ ஆப்பு வரனும்னா எப்ப வேணும்னாலும் வரலாம்னு சொல்லு!!!!

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/06/blog-post_27.html

நாக்கு ஒக்க சந்தேகம்...ஏமண்ட்டே... நேனு முதட்லோ உத்தரம் செப்பேப்புடே 9/10 செப்பேனுகா? அட்லுண்ணேப்புடு..

// குமரன், ப்ரசன்னா முதல் ஆட்டத்திலேயே 9/10 // அண்ட்டே......... :-) நா பேரு அக்கட ராவலிகாதா? :D

இது கண்ணன் பாடல் பதிவு என்பதால் குமரன் பெயரிலேயே பரிசைக் குடுத்து விடுங்கள். அதுவே பொருத்தம்.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2008/06/30.html

வாங்கய்யா வாங்க...

ஒன்னு சொல்றேன் குறிச்சி வெச்சிக்கோங்க. உள்ளூர்ல இருந்து பணம் சம்பாதிக்கிறது முடியுந்தான். ஆனா உலக அனுபவம் சம்பாதிச்சிருக்கீங்களே நீங்க. அதை யோசிங்க. குக்கர்குள்ளயே வோண்டா சிட்டி ஓட்டாம எத்தனையெடங்க பாத்திருக்கீங்க. பழகீருக்கீங்க. அதைப் பாத்து அவங்களும் பொறாமைப் படுவாங்க. இக்கரைக்கு அக்கரைப் பச்சேய்... கண்டுக்காம மனசுக்குப் பிடிச்ச மாதிரி இருங்க.

சகோதரி திருமணம் நல்லபடி நடந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. முருகன் அருளால் நீடு வாழ்க. பீடு வாழ்க.

G.Ragavan said...

http://videospathy.blogspot.com/2008/06/blog-post_29.html

இசையமைப்பாளர் ரவீந்திரன் சிறந்த பாடல்கள் பலவற்றிற்குச் சொந்தக்காரர். மலையாள மெல்லிசைச் சிற்பி என்று கூடச் சொல்லலாம்.

மாலை வீடு வந்து பாடல்களையும் கேட்கிறேன். இப்பொழுது அலுவலகம் ஓடுகிறேன். :-)

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/06/linked-list.html

கலக்கல் பாலாஜி. மணல் கயிறு படத்தை விடவும் கலக்கல் கட்டளைகள். :-)

இப்பிடியே குடும்பம் ஒரு கதம்பம், திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி, வீடு மனைவி மக்கள், ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ஆகிய படங்களையும் ரீமேக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். :-)