Friday, June 01, 2007

என்னுடைய பின்னூட்டங்கள் - ஜூன் 2007

ஜூன் 2007ல் மற்ற வலைப்பூக்களில் இடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

255 comments:

«Oldest   ‹Older   201 – 255 of 255
G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/06/4.html

டீச்சர்...நெறைய பதிவுகள் போட்டிருக்கீங்க. பாக்காம விட்டிருக்கேன். எல்லாம் கால நேர வித்தியாசம் செய்ற வேலை.

பொண்ணுங்களுக்கு மேப்பு படிக்கத் தெரியாதுன்னு சொல்றது ஒரு விதத்துல உண்மைதான். என்னோட தோழிகள் சிலரே மேப்பை உத்து உத்துப் பாத்துக்கிட்டிருப்பாங்க. அது ஏனோ...அப்படித்தான் போல. கார்ல ஜிபிஎஸ் சிஸ்டம் இருந்தா பிரச்சனையில்லை. அதுவே வழியைச் சரியாச் சொல்லீருது. இங்க அது ரொம்பப் பிரபலமா இருக்கு.

G.Ragavan said...

http://kavithavinpaarvaiyil.blogspot.com/2007/06/blog-post_24.html

நீங்களும் எட்டு போட்டாச்சா...சூப்பர். அணில்குட்டியின் கமெண்ட்டுகள் சூப்பரோ சூப்பர்.

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/06/blog-post_25.html

// அது என்ன திருப்பாவையோ, திருவாசகமோ ,ஹிரோயின் வரும் போது பின்னனியில் ஒலிக்குதே அது ரொம்ப நல்லா இருந்தது.//

அது திருப்பாவை. மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் என்ற பாவை. பாடியது கோமதிஸ்ரீ. இவர் பழைய இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி அவர்களின் மகள். அவர் யாருன்னு கேக்குறீங்களா? தமிழரா இருந்தாலும் மலையாளத்துல ரொம்ப பிரபலமா இருந்தாரு. தமிழ்ல அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்துக்கு இசையமைச்சதும் இவர்தான்.மாசிலா உண்மைக் காதலே..மாறுமோ செல்வம் வந்த போதிலே. சிவாஜி படம் பத்திப் பேச வந்துட்டு மத்த படத்தைப் பத்தியெல்லாம் பேசுறோம் பாத்தியா! அப்புறம் அங்கவை சங்கவையப் பத்திச் சொல்லவேயில்லையே!

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/06/8.html

அடேங்கப்பா! ஐயா..சாமீ. உண்மையாச் சொல்றேன். இப்படியெல்லாம் கண்டிப்பா யோசிச்சே ஆகனுமா! :((((( முடியலைங்க.

G.Ragavan said...

http://princenrsama.blogspot.com/2007/06/blog-post_26.html

மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி. அவரது ஆன்மா அமைதிபெற இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து வாடும் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

G.Ragavan said...

http://baavaa.blogspot.com/2007/06/blog-post_26.html

அரசியல்வாதியையும் சினிமாக்காரங்களையும் நம்பவே கூடாதுங்குறது சரியாத்தான இருக்கு. இங்க ரெண்டு பக்கத் தொண்டர்களும் அடிச்சிக்கிறாங்க. ஆனா தலைவர்கள் கொஞ்சிக்கிறாங்க!!!!!!

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2007/06/226.html

:) நல்லா எட்டு போட்டிருக்கீங்க.

நீங்க சொல்றதெல்லாம் வெச்சிப் பாக்கைல....எடம் பொருள் ஏவல் மாறியிருந்தாலும் உள்ளடக்கம் மாறலையோன்னு தோணுது. :) அது சரி...அதிரசத்த தட்டுல வெச்சா என்ன எலையில வெச்சா என்ன..கைலயே குடுத்தாலும் என்ன :))))))))))))))

அது சரி...மொதமொதல்ல வாசிக்கிறதுக்கு "என்ன என்ன வார்த்தைகளோ" பாட்டா எடுப்பாங்க. ஏற்கனவே அது பாடக் கஷ்டமான பாட்டு. ம்ம்ம்...ஓரோன் ஒன்னுன்னு வாய்ப்பாட்டுல தொடங்கீருக்கலாமோ :)

G.Ragavan said...

http://pakkatamilan.blogspot.com/2007/06/tag-8.html

எட்டு போடச் சொன்னேன். இன்ஸ்பெக்டரும் எட்டு போடச் சொன்னாரு. நான் சொன்னதுக்கு ஒரு எட்டுதான் போட்டிருக்க. இன்ஸ்பெக்டருக்கு மூனு எட்டு போட்டிருக்க. ம்ம்ம்...கவனிச்சிக்கிறேன்.

சரி...பதிவு உண்மைல கலக்கலாத்தான் இருக்கு. :) ரசிச்சேன்.

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/06/blog-post_8516.html

கொடுமை. மிகக் கொடுமை. இவர்களின் மனதை யா கழுவி விட?

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/06/blog-post_27.html

அந்த நபர் சொல்றது பொய்யாத்தான் இருக்கனும். ஏன்னா படம் பாத்தவங்க அதுல கதையே இல்லைன்னு சொல்றாங்களே. இல்லாத கதையை எப்படித் திருட முடியும்!!!!!

G.Ragavan said...

http://muthuvintamil.blogspot.com/2007/06/blog-post.html

வாங்க வாங்க. உங்களைத் திரும்பவும் வலைப்பூக்கள்ள வரவேற்கிறோம்.

சரியாத்தான் சொல்லீருக்கீங்க. ஒத்துக்கிறோம்.

G.Ragavan said...

http://angumingum.wordpress.com/2007/06/27/tp_intro

வாங்க சித்தார்த். ஆண்டாளின் திருப்பாவை ஒரு அழகான அன்புக் கவிதை. அப்படியே காதலனை நினைத்து நினைத்து உருகி, அந்த மோகத்தில் வேகத்தில் தானாகக் கவிதை பீறிட்டு வந்தது. அதை அப்படியே படிப்பதும் சுகம். விளக்கம் சொல்லப் படிப்பதும் சுகம். 2005 மார்கழியில் http://iniyathu.blogspot.comல் திருப்பாவைகளுக்கு எளிய விளக்கம் சொன்ன நினைவலைகளைக் கிளறி விட்டீர்கள். உங்கள் பதிவுகளையும் படிக்கிறேன். காத்திருக்கிறேன்.

(உங்கள் சொற்கள் தொடர்பான ஐயங்களை எனது பதிவு தெளிவு செய்யவும் வாய்ப்புள்ளது.)

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/06/blog-post_27.html

எட்டாக்கனியா எட்டாங்கனியா? என்னைக் கேட்டா எட்டுங் கனிதான்னு சொல்வேன். :)

// அதுல வருகைப் பதிவேட்டுலப் பார்த்தா 138 பேர் ஆங்கிலத்துல தான் கையெழுத்துப் போட்டிருப்பாங்க. என்னத்தவிர தாய்மொழியில கையெழுத்துப் போட்ட அந்த இன்னொருத்தர் ஒரு ஜப்பானியர் :) //

அருமை. உன்னைப் பாராட்டுகிறேன். இப்பவும் அப்படியேதானா? இது தெரிஞ்சிருந்தா ஒன்னயக் கையெழுத்துப் போடச் சொல்லிப் பாத்திருப்பேனே. ஆகா!!

// “தம்பி நல்லாப் பேசினப்பா! உனக்கு யாரு ப்ரிபரெசனெல்லாம்?” னு கேட்டதுக்கு “எங்கக்கா” அப்படின்னு பெருமையா சொன்னதும் + எனக்கு ஒரு மிட்டாய் கொடுக்கிறதுக்கே ரெண்டு தடவை யோசிக்கிற எங்கண்ணன் அன்னைக்கு எனக்கு டீ , பன்னெல்லாம் வாங்கிக்கொடுத்ததும் தான் :) ) //

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? அதான் ஆர்வலர் டீபன் பூசல் தருமாமே! :)))) இன்னொரு வாழ்த்துகள்.

// “முதல் முதலா முழுசா ஒரு சிகரெட் பிடிச்சப்போ எனக்கு வயசு 10. கடைசி சிகரெட் பிடிச்சப்போ வயசு 22”. //

நல்ல வேலை செஞ்ச. இதுல சிறப்பு என்னது தெரியுமா? கடைசி சிகரெட்னு சொன்னியே...அதான். அது அப்படியே இருக்கட்டும்.

ரொம்ப நல்லாயிருந்தது பதிவு. ஐதராபாத்துக்கு வந்தாச்சா? எப்படிப் போகுது?

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/06/blog-post_27.html

தேவா...எட்டோ "மகா"தேவா....

// பெரிய அட்டை ஓண்ணை ரெடி பண்ணி அதுல்ல "தேவ் லெண்டிங் லைப்ரரி"ன்னு பெருசா எழுதி வீட்டு வாசல்ல தொங்க விட்டு //

ஆகா...அந்தப் புத்தகங்கள்ளாம் இன்னமும் இருக்கா? இருந்துச்சுன்னா எனக்குப் பரிசாக் குடுத்துருங்களேன் :)

// என் மூதாதையர் மண் பார்க்க ஊர் போனப் போது.. அந்த குரல் கேட்ட வீதிகளின் வெறுமை என்னை உலுக்கியது... வீடுகள் கேட்பாரற்று கிடந்தது மனத்தைக் குடைந்தது //

இது எங்க ஊருக்குப் பொருந்துங்க. சின்ன வயசுல போனப்பல்லாம் கலகலன்னு இருந்த ஊரு...இப்ப வெறிச்சுன்னு இருக்கு. எப்பவாச்சும் யாராச்சுங் கண்ணுல பட்டு...பெரும்பாலும் வயசானவங்க.."ராகவா...எப்ப வந்த" ஒரு இழுவை ஒவ்வொரு சொல்லிலும் இருக்கும். "அப்பா அம்மா வரலியா? எங்களையெல்லாம் மறந்தாச்சா" இப்பிடித்தான் கேப்பாங்க. ரொம்பச் சங்கடமா இருக்குங்க. இங்க நெதர்லாந்துல பாருங்க...ஆம்ஸ்டர்டாம்ல வேல பாக்காங்க. ஆனா பக்கத்துல ஏதாச்சும் பட்டிக்காட்டுல தங்கீருக்காங்க. நெதமும் வரப்போக இருக்காங்க. நம்மூர்ல.....

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/06/blog-post_27.html

// ஆனால் மதவாதிகள் சொல்லுவதோ மதத்திலே வாதம் கூடாது என்று... //

இது தவறான கருத்துதான். எனக்கும் ஏற்பில்லை. Nothing Stays. நிற்பது இருக்கலாம். ஆனால் நிலைப்பது எதுவுமில்லை. இறையருளைத் தவிர. இதுதான் என்னோட கருத்து.

// அட போங்கப்பா நீங்களும் உங்க பொழப்பும்..
I BELIVE IN THE GOD WHO BELIEVES IN ME..//

அதே அதே போடா போடான்னு போய்க்கிட்டேயிருக்கனும்.

// எனக்கு நண்பர்கள் குறைவு.. ஆனால் நான் நிறையப் பேருக்கு நண்பன்....//

அட்ரா அட்ரா அட்ரா...சூப்பரு. :)

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/05/1.html

// எல்லாரும் எங்கே போய்டீங்க..ஆணிப் புடுங்க சொல்றாங்களா??பாபாஜி, வெட்டி,ஜி ரா..அருட்பெருங்கோ..இப்படி நிறைய பேரை ஆளையே கானோம்!!! //

இருக்கேம்ப்பா. இப்பக் கூட எட்டு போட்டு லைசென்ஸ் வாங்கீருக்கேனே :) ஆனா நீ சொல்றாப்புல டிபிகல் ஜிரா பதிவு போட்டு நாளாச்சு. என்ன பண்றது..உள்ளூரு ஆணின்னாலும் சரி...இது வெளிநாட்டு ஆணியா இருக்கு...கொஞ்சம் கொஞ்சமா நெம்பித்தான் எடுக்க வேண்டியிருக்கு. அதான்.

தீவாளி மலரா? இப்ப என்ன தீவாளி மலரு? அது நவம்பருல வரும்னு நெனைக்கிறேன்.

G.Ragavan said...

http://muthuvintamil.blogspot.com/2007/06/blog-post_27.html

ஓ நீங்களும் போனீங்களா...சூப்பர். தொடருங்க...

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/06/8.html

எட்டும் மெட்டை எட்டாக் குரலில் பாடுவீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த மெட்டைக் கேட்கும் நாள் எந்நாளோ!

திருப்பாவை ஒரு கவிதை நூல். பக்தியெல்லாம் ஒரு பக்கத்துல இருக்கட்டும். அட இல்லாமலும் இருக்கட்டும். அது கவிதை. நல்ல கவிதையை ரசிக்கிறவங்க திருப்பாவையை ரசிப்பாங்க.

// ஓம் + நம சிவாய
ஓம் + நமோ பகவதே வாசுதேவாய
ஓம் + சரவண பவ
என்று தனித்தனியாத் தான் நிற்கும்!
நாம் தான் ஓதும் போது, சேர்த்து ஓதிட வேண்டும்!

ஆனால் ஒரே ஒரு மூலாதார மந்திரம் மட்டும் தான் பிரணவத்தையும் தன்னுள்ளே சேர்த்து ஒலிக்கிறது!
ஓம் நமோ நாராயணாய
என்று ஓங்காரமும் சேர்த்தா தான் திருவெட்டெழுத்து! //

புரியலை. இங்கயும் ஓம் + நமோ நாராயணாய தானே.

G.Ragavan said...

http://vaazkaipayanam.wordpress.com/2007/06/28/tut2/

இந்த அரசரின் மம்மியைப் பற்றி BBC ஒரு விவரணப்படம் செய்திருக்கிறது. ஐதராபாத் சென்றிருந்த பொழுது IMAX திரையரங்கில் அதைப் பார்க்க நேர்ந்தது. அடடா! எப்படி அந்தக் கல்லறையைக் கண்டுபிடித்தார்கள்......அந்த மலையில் தேடிக்கொண்டேயிருந்திருக்கிறார்கள். ஆனால் கிடைக்கவில்லை. அப்பொழுது தண்ணீர் சுமந்து வந்த எகிப்தியச் சிறுவன் ஏதோ இடற விழுந்திருக்கிறான். அப்படிக் கண்டுபிடித்ததுதான் இந்தக் கல்லறை. அந்தச் சிறுவனுக்கும் ஒன்றும் ஆகவில்லை.

இந்தக் கல்லறைக்குள் முதலில் நுழைந்தது (அனுப்பப்பட்டது) ஒரு எகிப்தியச் சிறுவன். அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் லக்கி பேர்டு என்ற பறவையை பாம்பு விழுங்கியிருக்கிறது. வேள்ளையரைக் கொசு கடித்திருக்கிறது.

அதெல்லாம் உள்ளூராட்களின் வேலையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் பிரமீட் திருட்டு என்பது வெள்ளையர்கள் கொண்டு வந்ததல்ல. அதற்கும் முன்பே உள்ளூர்க்காரர்கள் செய்து வந்ததுதான். அவர்கள் எல்லாம் நன்றாக இருந்தார்கள் என்றே நம்புவோம்.

ஒருவர் இறந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் தொந்தரவு செய்ய வேண்டுமா என்பது ஒரு கேள்வி. செய்யப்பட வேண்டும் என்றுதானே விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். அத்தோடு இந்தப்ப் பிரமீடுகளை ஆராய்வதால் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கலாம்.

உங்கள் பதிவைத் தொடருங்கள்.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2007/06/blog-post_28.html

:) நல்லாயிருக்கு கதை. ஒரு நாவலைச் சுருக்கிச் சிறுகதையாக குடுத்திருக்கின்றீர்கள். ரசித்துப் படித்தேன் என்று உங்களுக்குச் சொல்லனுமா என்ன? :) படிக்கின்ற மற்றவர்களுக்கும் இந்தக் கதை பிடிக்குமென்றே நம்புகிறேன்.

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/06/shot-at-2007-06-28.html

வாழ்த்துகள் பல. பணியில் சிறப்பாகச் செயலாற்ற வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/06/making-of-sivaji-oru-koodai-sun-light.html

வெள்ளையா இருந்தாத்தாம் மதிப்பா என்ன! என்னவோ போங்க இளா. இவ்வளவு யோசிக்கிறாங்க. இவ்வளவு செலவழிக்கிறாங்க. நல்லவிதமா எதையாவது யோசிக்கக் கூடாதா!!! ஆனா இதுக்கு ஒரு வருசம் ஆச்சுங்குறதெல்லாம் டூ மச்சாத் தெரியுது. lord of the rings...all the three parts were taken in four years....just watch the movie...what shankar did is nothing.

G.Ragavan said...

http://santhoshpakkangal.blogspot.com/2007/06/199.html

படிக்கும் போது சிரிப்பு வரலை. எரிச்சலும் வருத்தமும் வந்தது. என்ன மக்களோ! இவங்களை வெச்சுத்தான வெள்ளாமையே பண்றாங்க.

G.Ragavan said...

http://raamcm.blogspot.com/2007/06/blog-post_8052.html

நல்ல முயற்சி. இதுவரைக்கும் பெங்களூர்ல பல வலைப்பதிவர் சந்திப்பு நடந்திருக்கு. ஆனா இது புதிய முயற்சி. சிறப்பாக நடக்க எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2007/06/blog-post_25.html

எனக்கும் ஒரு ஆசை. யாழ்பாணத்துக்குப் போய்....அங்கே சந்தோஷமா மக்களோட மக்களா சுத்திப் பழகி...அங்கவுள்ள சமையலைச் சாப்பிட்டுக் கொண்டாடனும்னு. வருவேன். கண்டிப்பா வருவேன்.

இந்தப் புத்தகமும் பார்க்கப் பரவசமாக இருக்கிறது. சென்னை செல்கையில் வாங்க வேண்டும்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/06/11.html

நன்றி நன்றி. ஒன்றுக்கு இரண்டாக பரிசு. :)

கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்...ஒரு அழகான மோகம் ததும்பும் பாடல். அதில் ஷ்ஹாஆஆஆ என்று ஜானகி பாடுகையில் மிகச் சிறப்பாக இருக்கும்.

மாலை நேரத்து மயக்கம் மிகச் சிறப்பான பாடல். சூலமங்கலம் ராஜலட்சுமி அவர்கள் இசையில் வந்த பாடல். ஒரு மென்மையான பாடலை எல்.ஆர்.ஈசுவரி மிக அழகாகப் பாடியிருப்பார். கண்டிப்பாக அனைவரும் கேட்க வேண்டிய பாடல்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/

சங்கீத சுரங்கள் பாடல்...ஆகா...அழகிய கவிதை. பார்க்கவும் கேட்கவும்.

அள்ளித்தந்த பூமியும் அருமையான பாடல். மலேசியா வாசுதேவன் அருமையாகப் பாடியிருப்பார்.

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி...நல்ல பாடல்.

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2007/06/193.html

தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லைன்னா...தந்தை சொல் மிக்க மந்திரமில்லைங்க. அப்பா அப்பாதான்.
படிக்கவே பெருமையா இருந்தது. இதைக் கண்டிப்பா ஒங்க தந்தையும் படிச்சுப் பாசத்துல ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டிருப்பாரு.

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2007/06/6.html

இந்த வேற்று விண்ணுயிர்களே ஒரு ஆச்சரியமான விஷயந்தான். நினைக்கவும் பேசவும் எழுதவும்.

zoo hypothesisனு சொன்னியே அதுதான் மதநம்பிக்கைகளுக்கெல்லாம் அடிப்படை. எங்கயோ உக்காந்துக்கிட்டு நம்மள வெச்சுப் பாத்துக்கிட்டிருக்காங்கன்னு நம்புறதுதானே பலப்பல வகையான கடவுள் நம்பிக்கை.

இப்ப அறிவியல்ல சிக்னல் அனுப்புறாங்க. அது சேந்துச்சா...சேரலையா...சேந்தும் பதில் சொல்லலையா..ஒன்னும் தெரியாது. அப்படி விண்ணுயிர்களோடு தொடர்பு வைக்க எவ்வளவு முயற்சி பண்றாங்க. வேண்டாம் விண்ணுயிர் ஒன்னுமே இல்லைன்னு ஒரு கூட்டம்.

அதே மாதிரி..கடவுள் எங்கையோ இருக்காருன்னு..அவரோடு தொடர்பு வெச்சுக்க என்னென்னவெல்லாம் பண்றோம். அது போச்சா...போகலையா...போயும் பதிலில்லையா..எதாவது தெரியுமா? அப்படியும் தொடர்பு வெச்சுக்கிற எவ்வளவு முயற்சி பண்றாங்க. அட..கடவுளே இல்லை...இதெல்லாம் பண்ணாதீங்கன்னும் சொல்றாங்களே...

பாத்தியா அறிவியலும் ஆன்மீகமும் எவ்வளவு ஒத்துமையா இருக்கு :)))))))))))

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/06/blog-post_9979.html

மகிழ்ச்சிதான். ஆனால் இதைவிடவும் பழங்கோயில்கள் தமிழகத்தில் இருக்கையில் அவைகளை இப்படிப் பெருமையாக சொல்லிக்கொள்ள வகையில்லாத அளவிற்குப் பராமரிக்கும் நம்மை என்ன சொல்ல...மதுரை மீனாட்சியம்மன் கோயிலும்...தஞ்சைப் பெரிய கோயிலும்...ம்ம்ம்ம்...சரி விடுங்க. எதுவும் சொன்னா வயித்தெரிச்சல்காரன்னு சொல்வாங்க.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/06/blog-post_29.html

வாங்க சார் வாங்க. எட்டு போட்டு நீங்களும் லைசென்ஸ் வாங்கீட்ட்டீங்க...சூப்பரு.

ரெண்டு நாளா ஊர்ல இல்லாம பதிவு போடாம இருந்தீங்க. இன்னைக்குச் சேத்து வெச்சு எட்டு பதிவு..அதாவது எட்டு பத்திய பதிவு.

நீங்க போட்ட எட்டும் சரிதான் சார். உங்களப் பத்தி எட்டு தகவல்கள் சொல்லனும். சொல்லீருக்கீங்களே. சரிதான். நல்ல தகவல்கள்தான்.

ராமநாதனையும் ஆளக் காணோம். துளசி டீச்சரும் இன்னமும் எட்டு போடலை. நீங்க கூப்டீங்க. அப்பப் போட்டுருவாங்கன்னு நெனைக்கிறேன்.

G.Ragavan said...

http://kosappettai.blogspot.com/2007/06/blog-post.html

உண்மைதான். இனிமேலாவது விஜயகாந்த்த குடிகாரர்னு நேரடியாகவோ குடிபுகுந்ததுன்னு நாசூக்காவோ திட்டாம கருத்தியல் வழியில எதிர்க்கப் பழகிக்கனும். இல்லைன்னா....விஜயகாந்த்தை இவங்களே வளத்து விட்டிருவாங்க. அட என்ன கருமம்டா கருத்து இருக்கு எதுக்கன்னு கேட்டீங்கன்னா...அந்தக் கருமம் எங்கையுமே இல்லையேங்குறதுதான் நெலமை. என்னவோ போங்க.

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2007/06/peter.html

ஒரு மாசத்துக்கு முன்னாடி என்னோட நண்பி ஷஷங்க் ரெடெம்ஷன்னு ஒரு படம் பாத்தேன். ரொம்ப நல்லாயிருந்ததுன்னு சொன்னா. நானும் அப்படியான்னு கேட்டுக்கிட்டு இங்க அப்படி ஒரு படம் வந்திருக்காம். நல்லா இருக்காம்னு சொன்னேன். அப்பத்தான் அது 13 வருசத்துக்கு முன்னாடி வந்த படம்னு தெரிஞ்சது. அதே படத்த பள்ளிகொண்ட அழகரு சிவிஆரு போன வாரம் பாத்ததாச் சொன்னாரு. இப்ப நீயும் விமர்சனம் போட்டிருக்க. படத்தப் பாத்தே ஆகனும் போல!! :)

விமர்சனம் அருமை. நல்ல அறிமுகம். இது தொடர வேண்டும் என்பதே என் கோரிக்கை.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/06/21.html

பாதிமதிநதி போது மணிசடை நாதர் அருளிய குமரன் புகழைப் படிப்பதும் கேட்பதும் உரையுணர்ந்தோர் சொல்லிப் புரிவதும் பேரின்பம்.

இந்தத் திருவேரகத்துத் திருப்புகழ் எனக்கு மிகவும் பிடித்தது. இதை எளிய மெட்டில் பாடுவதும் மிகப் பிடித்தம். யாமிருக்க பயமேன் என்ற திரைப்படத்தில் இந்தப் பாடலை மெல்லிசை மன்னர் இசையமைத்து வாணிஜெயராம் பாடியிருக்கிறார்கள். கேட்க அருமையாக இருக்கும். ஆனால் பாடல் என்னிடம் இல்லை. அந்த வீசிடி தமிழகத்தில் கிடைக்கிறது. அதிலிருந்து யாரேனும் பிரித்துக் கொடுத்தால் மிகவும் மகிழ்வேன்.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/06/21.html

நல்ல விளக்கம். திருப்புகழ் மீண்டும் வலம் வரத்துவங்கியிருப்பது குறித்து மெத்த மகிழ்ச்சி.

நேயர் விருப்பம் வானொலியில் மட்டுமா வானொலி காட்டும் முருகன் அடியவடிடமும் உண்டுதானே. வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய...இதை என் விருப்பமாகக் கேட்கிறேன். :)

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/06/friday-spl.html

முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2007/06/blog-post_29.html

சிறில் நல்ல முயற்சி. நமக்குத் தெரிஞ்சத அடுத்தவங்களுக்குச் சொல்லிக் குடுக்குறது. ஆனா வலைப்பதியுறவங்கள்ள எத்தன பேருக்கு இது தேவைப்படும்னு தெரியலை. ஆனாலும் தொடருங்க. ஏத்துன விளக்குல எங்கையாவது இருள் போனா நல்லதுதான்.

G.Ragavan said...

http://tamilpeter.blogspot.com/2007/06/blog-post_7934.html

எளிய விளக்கங்கள். மிக அருமை. தொடரட்டும்.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/06/blog-post_382.html

ரொம்பவும் சுடச்சுட இருக்கீங்கன்னு நெனைக்கிறேன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விருப்பம். அது அளவுக்கு மீறிப் போகைலதான் பிரச்சனையே. இது எல்லா விருப்பங்களுக்கும் பொருந்தும்.

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2007/06/blog-post_2404.html

ரவி, என்னாச்சு? எந்தப் பதிவுல பிரச்சனை? அமைதி. அமைதி. யாரு அந்த மலேசியா நாதாரி?

G.Ragavan said...

http://milakaai.blogspot.com/2007/06/blog-post_549.html

ஏய்யா...என்னென்னவோ இடவொதுக்கீடு அதுஇதுன்னு பொலம்புறோமே...அதுல கொஞ்சத்த இவங்களுக்கும் குடுத்திருந்தா இந்தப் பிரச்சனையே வந்திருக்காதுன்னு நெனைக்கிறேன்.

இனிமே என்ன செய்யனும் தெரியுமா? ஆம்பிளைகள் அத்துமீறல்....பெண்களில் கொலை முயற்சி அப்படீன்னுதான் தலைப்புப் போடனும்.

அந்தப் பெண்கள் செய்தது தவறு என்பதில் மறுப்பேதும் இல்லை. ஆனால் நம்முடைய அணுகுமுறையும் மாறவேண்டியிருக்கிறது. i feel itz high time government does something and public changes itz perception on them.

G.Ragavan said...

http://manggai.blogspot.com/2007/06/blog-post_8786.html

மீனாட்சியின் உடல் வேதனை தீரனும், மன அமைதி பெறவும் இறைவனை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.

காக்காக் கடவிய நீ காவாது இருந்தக்கால் ஆர்க்குப் பரமாம் ஆறுமுகவா!

G.Ragavan said...

http://penathal.blogspot.com/2007/06/15.html

பாத்துட்டேன் பாத்துட்டேன் ஷ்ரெக் 3 பாத்துட்டேன். ரசிச்சேன். ரசிச்சேன். தவளைராஜாவை போட்டுத்தள்ளீட்டாங்க. ஷ்ரெக்கு அப்பாவாயிட்டாரு. அதுல பாருங்க..டாங்கிக்கும் டிராகனுக்கும் பொறந்த குட்டிகள்..ரொம்ப அழகு. ரொம்பவே.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/06/blog-post_28.html

அருமை அருமை....மிகவும் அருமையான பாடல். முன்பு கேட்டிருக்கிறேன். மறந்து விட்டது. மீண்டும் நினைவூட்டியமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/06/2.html

எளிய நடை. சென்னை டூ பெங்களூரா? பெங்களூர் மகாத்மியங்களைக் கேட்கக் காத்திருக்கிறோம். அத்தோட இளா சொன்னத வழிமொழியிறேங்க. :)

G.Ragavan said...

http://penathal.blogspot.com/2007/06/blog-post.html

சுரேஷ், ஒரு தமிழ்வாணனின் திகில்கதைப் புத்தகம் படிச்ச உணர்வு. அப்பப்பா...என்னங்க இது..வாழ்க்கைல இப்பிடிப் போட்டுத் தாக்கீருக்கீங்க...நல்லாயிருக்கு எட்டு.

G.Ragavan said...

http://thamilachi.blogspot.com/2007/06/blog-post_4140.html

பெரியார் சரியாத்தான் சொல்லீருக்காரு. ஆனா இந்த விஷயத்துல...பக்திப்பசுக்களும் பகுத்தறிவுப் பிம்பங்களும் அவங்க ஆம்பிளைத்தனத்தை உணர்ந்துர்ராங்க. அது வருத்தத்திற்குரிய விஷயம்.

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2007/06/blog-post_29.html

சூப்பரப்பு. பிரமாதம். ஒவ்வொன்னையும் படிச்சுச் சிரிச்சேன். நல்லாயிருக்குது.

// அருட்பெருங்கோ said...
தல ஒன்னு விட்டுட்டீங்க...

செந்தழல் ரவி - mokkai@24X7 :) //

கோ, நான் ரவிக்கு என்ன கடவுச்சொல் சொல்லலாம்னு யோசிச்சுக்கிட்டேயிருந்தேன். ஒன்னும் பட்டுன்னு சொல்ல முடியலை...நீ சொல்லீட்ட. :))))

// Anonymous said...
வெட்டிப்பயலுக்கு நுவ்வா_நேனா என்றல்லவா இருக்க வேண்டும்? ;) //

அதான......

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/06/blog-post_29.html

அப்பா சாமியோவ்...இதெல்லாம் தாங்காது சொல்லீட்டேன். இப்படியா தெறந்து காட்டுறது....கண்ணக் கட்டுதே. கொத்சு...கொத்சு....

சரி. ஒரு சீரியஸ் மேட்டரு. சென்னை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் ரிசப்ஷன்ல இந்த அனுமார் செலைய வெச்சு மொதமொதல்ல open heart surgery செஞ்சவருன்னு வெச்சிருக்காங்க. அடைப்புக்குறிக்குள்ள mythologyன்னும் வெச்சிருக்காங்க.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/06/blog-post_30.html

ஆகா..அருமையான பாட்டு. கேட்டு ரொம்ப நாளாச்சு.

எடுப்பார் கைப்பிள்ளை தேவா...பொருத்தமான பேருதான். :)

G.Ragavan said...

http://godshavespoken.blogspot.com/2007/06/blog-post_24.html

கவிதை கவிதையா எழுதீருக்கீங்க. நல்லாருக்கு. வஜ்ராயுதம்.மின்னலு.சூப்பரு.

G.Ragavan said...

http://vincyclicks.blogspot.com/2007/06/blog-post_29.html

ஆகா...நெல்லையப்பர் தேரோட்டம் என்றால மனசுக்குள் பலகோடி பூக்கள் பூக்கும். நெல்லை நினைவுகளும்தான். நன்றி. நன்றி. நன்றி.

G.Ragavan said...

http://avanthikave.blogspot.com/2007/06/blog-post.html

நல்லாருக்கு கதை. ரசிச்சேன்.

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2007/06/194.html

ஆகா...படிக்கும் போதே ருசியா இருக்குதே...சாப்டா எப்பிடி இருக்கும். ஆமா...நம்மூர்ப்பக்கமெல்லாம் தேங்கா அரைச்சி ஊத்தாம கொழம்பு வெக்க மாட்டாங்களே! இது மட்டும் அப்படியில்ல போலிருக்கு.

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2007/06/blog-post_30.html

எட்டு பதிவிட்டமைக்கு நன்றி ஐயா. உங்கள் பதிவைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பதிவு படிக்கும் பொழுது மகிழ்ச்சியும் சோகமும் மாறிமாறியடித்தாலும் முடிவு மகிழ்ச்சி என்பதால் அமைதி கொள்கிறோம். முருகனருள் முன்னிற்கும்.

«Oldest ‹Older   201 – 255 of 255   Newer› Newest»