Thursday, May 01, 2008

என்னுடைய பின்னூட்டங்கள் மே 2008

மே 2008ல் மற்ற வலைப்பூக்களில் நானிடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

87 comments:

G.Ragavan said...

http://hollywoodpaarvai.blogspot.com/2008/04/hobbit.html

ஓ படத்தை இன்னும் எடுக்கவே தொடங்கலையா! என்ன கொடுமை இது! 2011க்கு இன்னும் மூனு வருசம் இருக்கே. இப்பிடியா தாமதப் படுத்துறது!!!!!

G.Ragavan said...

http://blog.ravidreams.net/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/#comment-1414

இங்கே ஒரு நண்பர் தொலைபேசி செய்து.. ஒரு நல்ல செய்தி. இங்கே குருவி வருகிறது. வருகின்றீர்களா என்றார். நான் விஜய் படமெல்லாம் பார்ப்பதில்லை என்றேன். இந்தியாவில் என்றால் நானும் பார்ப்பதில்லை... இங்கே என்பதால் போகிறேன் என்றார். இங்கே என்ன... எங்கே என்றாலும் விஜய் படத்தை நான் பார்ப்பதில்லை. ஒருவேளை உண்மையிலேயே அது நல்ல படமெல்லாம் தெரிந்து போகும். பிறகு பார்த்துக் கொண்டல் போயிற்று என்றேன். உங்கள் விமர்சனம் படித்த பிறகு விஜய் படத்தின் மீதான கருத்தில் மாற்றமில்லை என்று உறுதியாகியிருக்கிறது.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/05/blog-post.html

// இலவசக்கொத்தனார் said...

ரீச்சர், நிச்சயமான தகவல்தானா? அது அந்த சமயத்தில் வாயு நிரப்பட்ட குறியீடாகக் கூட இருக்கலாம் என்ற எண்ணம் எழுந்ததால் இக்கேள்வி. இத்துறையில் இருப்பவர்கள் யாரேனும் உறுதிபடக் கூறினால் தேவலாமே. //

கொத்ஸ், டீச்சர் சொல்வது சரியென்றே தோன்றுகிறது. பயன்முடிவு தேதி தெரியாமல் வாய்வடைத்த தேதியைச் சொல்லி என்ன பயன்? ஆகையால் அது பயன்முடிவுத்தேதியாக இருக்கவே வாய்ப்புள்ளது.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2008/05/blog-post.html

மிகவும் நல்ல பாடல். பக்திச் சுடர் கே.பி.சுந்தராம்பாள் பாடி முருகன் பாடல் கேட்பது என்பது பெருமகிழ்ச்சியே. பாடலைத் தேடிக் கொடுத்த குமரனுக்கு நன்றி.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2008/04/blog-post.html

// //தெரியாது நான் செய்த பிழையால் நீ வெறுத்தாயோ//

வெறுத்தேன் இல்லை! வெறும் தேன்! //

தேனின் சுவை இனிப்பு. அந்த இனிப்பும் இல்லாத வெறும் தேன் என்கின்றீர்களா ரவி ;)

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2008/04/blog-post.html

// இலவசக்கொத்தனார் said...

சூப்பர் பாட்டு.

//ஒருகால் முறைசெய்தாலும் //

உரை செய்தாலும் எனக் கேட்டு வந்தேன். உரை / உறை எது சரி எனப் புரியவில்லை. அல்லது முறைதான் சரியா?

உரை - பேச்சு - தேவையில்லாத பேச்சு
உறை - காரமான வசவு

இப்படி இருக்கலாமா?இந்த வரிக்குப் பொருள் தாருங்களேன். //

கொத்ஸ், முறைதான் இங்கு சரி. முறை சொல்வது என்பதற்குப் புகார் சொல்வது என்று பொருள். முறையீடு என்று இன்றும் சொல்வார்களே. முருகனிடம் சென்று முறையிட்டால் துன்பங்கள் நம்மைக் காண விடாமல் திரை செய்வான் என்று பொருள் கொள்ள வேண்டும்.

G.Ragavan said...

http://mrishanshareef.blogspot.com/2008/05/blog-post.html

சலித்த நிலவொளிக்குக் கீழே சலிக்காத கவிதையை எழுதியிருக்கின்றீர்கள் ரிஷான். அருமை.

G.Ragavan said...

http://blogintamil.blogspot.com/2008/05/blog-post_03.html

நல்ல தொகுப்பு ஷைலஜா.

// எம்.ரிஷான் ஷெரீப் said...

ஆஹா..
ஜிரா பாடலாசிரியரா? ஷைலஜா அக்கா,உங்க தயவுல இந்த விஷயத்தை நான் இன்னிக்குத் தான் தெரிஞ்சுக்கிட்டேன்..அந்தக் குட்டிப் பையன் கிட்ட எவ்ளோ திறமை இருக்கு பாருங்க :) //

ஆமாப்பா ஆமா... அந்த ஒரு பாட்டு எழுதுறதுக்குள்ளயே எனக்குப் போதும் போதும் ஆயிருச்சு. அதுக்கப்புறம் எழுதவேயில்லை :)

// Blogger எம்.ரிஷான் ஷெரீப் said...

ஆன்மிகப் பதிவாச்சே..நம்ம கேயாரேஸ்ஸைக் காணோமேன்னு பார்த்தா..கடைசில சும்மா நச்னு போட்டிருக்கீங்க ஷைலஜா அக்கா..
சூப்பரு..! //

இப்ப சொன்னீங்களே.. இது சூப்பர். ஆன்மீகம்னா கே.ஆர்.எஸ். கே.ஆர்.எஸ்னா ஆன்மீகம்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/05/krs.html

21ம் நூற்றாண்டின் ஆழ்வாராகிய திரு கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களின் விருப்பப் பாடல்களை வழங்கிப் பெருமை கொண்ட கானா பிரபாவிற்கு நன்றி பல.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/05/krs.html

// அந்தக் கூடையில் மின்னி மினுக்கும் நட்சத்திரங்களை எல்லாம் அப்படியே அள்ளி அள்ளிக், காதலியின் மேல் பொழிய மனசு துடிக்குது! ஆனால் தேவதையோ "லிமிட் ஃபைவ்" என்கிறது! //

ஆகா ஆகா ஒங்கக் காதலி குடுத்து வெச்சவங்க.அவங்கமேல தாரகைகளை அள்ளித்தெளிக்க விரும்புறீங்க. கண்ணன் மேல இப்பிடிச் செய்ய கோபிகைகள் விரும்புவாங்களாம். அந்த மாதிரி இருக்கு ஒங்க பக்தி கலந்த அன்பு. ஒங்க பூஜ்யஸ்ரீ காதலியை நல்லா பாத்துக்கோங்க. :)

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/05/krs.html

கானாபிரபாவுக்கு ஒரு கேள்வி. கே.ஆர்.எஸ் படத்தப் போடாம எதுக்கு ரெண்டு கிஷ்னரு படம் போட்டிருக்கீங்க? இதெல்லாம் தப்பு. என்னோட படத்த ரிஷானோட படத்தப் போட்டுட்டு.. கே.ஆர்.எஸ்க்கு வர்ரப்போ அவரோட சாமியான கிருஷ்ணரின் படத்த ரெண்டு வாட்டி போட்டிருக்கீங்களே!

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/05/krs.html

பிரபா, கே.ஆர்.எஸ் ஒரு பொய் சொல்லீட்டாரு. அவருக்குப் பிடிச்ச பாட்டு ஒன்னு இருக்கு. ரொம்ப ரொம்பப் பிடிச்சப் பாட்டு. அதைத்தான் இப்பல்லாம் அடிக்கடிக் கேட்டு புளகாங்கிதம் அடையுறாராம். அந்தப் பாட்டு இந்தப் பாட்டுதான்.

http://www.imeem.com/people/W1QMsu/music/112TPCC0/kamalhassan_ksr_dasavatharam_kallai_mattum_kandal/

G.Ragavan said...

http://mrishansharif.blogspot.com/

பஞ்சை வைத்து நெஞ்சை அடைக்கும் சோகம் கதை முடிகையில் அழுத்துகிறது. நல்ல எழுத்துக்குத்தான் அந்தத் திறமையுண்டு. நல்ல எழுத்து. வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://faheemapoems.blogspot.com/2008/05/blog-post.html

கவிதையைப் படிக்கும் பொழுது தொண்டையை அடைக்கிறதே... அப்பப்பா... சோகத்தை சோற்றுக்குள் வைத்து விழுங்கு என்று ஊரில் சொல்வார்கள். ஆனால் அச்சத்தைச் சோற்றிலும் பீதியை நீரிலும் கலந்து உண்டால்....நினைக்கவே அச்சமூட்டும் சூழல் என்பதை எளிதாகப் புரிய வைத்து விட்டீர்கள். நல்ல கவிதை. நன்று.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/05/blog-post_02.html

இங்க ஆம்ஸ்டர்டாம்லயும் படகு வீடுகள் உண்டு. ஆனா அதுக்குக்க் கரெண்ட்டு...கேஸ் எல்லா கனெக்ஷனும் இருக்கும். அரசாங்கத்துல பதிவு செய்யப்பட்ட வீடுகள். ஆனா அதுல ஏழைகள்தான் குடியிருக்காங்களான்னு தெரியலை.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/05/blog-post_01.html

டீச்சர்ங்குறத மறுபடியும் கதை சொல்லி நிரூபிச்சிட்டீங்க. சூப்பர்.

ஜேட் எனப்படுவது மரகதம் இல்லை. எமரால்டுதான் மரகதம். மரகதம் கண்ணாடி மாதிரி இருக்கும். கேடு கண்ணாடி மாதிரி இருக்காது. ஆனா ரெண்டும் ஒரு குடும்பந்தான்னு நெனைக்கிறேன். சரியாத் தெரியலை.

G.Ragavan said...

http://blogintamil.blogspot.com/2008/05/blog-post_03.html

// ஆனா அவ்ளோ குட்டிப்பையன் இல்லையே //

ஹி ஹி உண்மையப் போட்டு ஒடச்சிட்டீங்களே ஷைலஜா.

// எங்கவீடுவந்தாரே தோசைகூட சாப்பிட்டாரே (மைபா தந்தேனா நினைவில்லை?:) //

இல்லையே. தோசை, பொங்கல், சாம்பார், சட்னி, ஹல்வா என்று கதம்பமாக அல்லவா கட்டினேன்.

// உங்க கற்பனைல உருவாகும் ஒருபாடல் என் அரங்கனைப்பற்றி அடுத்து வரணும் அதை நான் உருகிப்பாடணும் ..என்ன செய்வீங்களா?! //

ஆகா. தாராளமாகச் செய்யலாமே. இந்த வாரமே எழுதீருவோம்.

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2008/05/295.html

திலகம்... திலகம்... என்னுடைய ஆதரவு நீட்டத் திலகத்திற்கே. ஓங்கி உலகளந்தான் போல் நிமிர்ந்து நிற்கும் திலகமே சிறப்பு. :) சிறுவயதில் திலகம் இட்டுக் கொண்ட பெண்களையும் சிறுமிகளையும் பார்த்திருக்கிறேன். அது அழகாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் இப்பொழுது அப்படி இட்டுக் கொள்கின்றவர்கள் யாருமில்லை போல.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/04/4.html

கலக்கல் வெட்டி. ரொம்ப நாள் கழிச்சி திரும்பவும் தொடங்கீருக்க. அற்புதம். அற்புதம்.

இப்பிடி ஒருத்தரயொருத்தர் ஏமாத்திக்கிட்டேயிருந்தா கண்டிப்பா காதல் வரனுமே.... வரட்டும். காதல்தான. அதுனால மோதல் வராம இருந்தாச் சரி.

G.Ragavan said...

http://kadalaiyur.blogspot.com/2008/05/blog-post_04.html

இந்தச் சம்பளம் கேக்குறவங்கள என்னதான் செய்றது? ஒருத்தர் வந்து இப்பிடித்தான் கேட்டாரு. சொல்ல மாட்டேன்னு சொல்லீட்டேன். அவரு தோராயமாத் தொடங்கி இவ்வளவு இருக்குமான்னு கேட்டாரு. சொல்லவே முடியாதுன்னு திட்டவட்டமா மறுத்துட்டேன். அதான் நல்லது. கேட்டாச் சொல்ல முடியாதுன்னு சொல்லீர்ரதுதான் நல்லது. எவ்வளவா இருந்தா இவருக்கென்ன.

G.Ragavan said...

http://devakottai.blogspot.com/2008/04/blog-post_21.html

ஆகா. கொடுத்து வைத்தவர் நீங்கள். இசைமேதைகளையும் சிறந்த பாடகர்களையும் ஒரே மேடையில் காணும் பேறு பெற்றிருக்கின்றீர்கள். மிகச் சிறப்பு.

அத்தனை பாடல்களும் அருமை. இந்தப் பாடல்களையெல்லாம் கேட்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/04/13.html

நல்ல விளக்கங்கள். நன்று குமரன்.

// முகம்...அதே பொருளில்...(தேவஸ்ய முகம் ஆசீர்) வடமொழியில் வந்தாலும்...
முகம் என்பதும் பழந்தமிழ்ச் சொல்லே! இரு மொழிகளிலும் ஒரே சொல் ஒரே பொருள் என்பது coincedence-aaa என்பது ஆய்வுக்குரியது! //

வடமொழிக்கு வாய் இல்லை. தமிழுக்கு முகம் இல்லை என்று எங்கோ படித்திருக்கிறேன். அது உண்மையா என்பது வேறு விஷயம். ஆனால் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2008/05/91.html

நுண்மான் நுழைபுலன் இல்லான் எழில்நலம் மண்மான் புனைபாவை யற்று

இதுதான் அந்தக் குறள்

சாதனா சர்கம் சிறப்பாப் பாடியிருக்காங்க.

சாதனா சர்கம் சோதனா நரகம்னு முந்தி கிண்டல் பண்ணுவேன். இப்ப அந்தக் கிண்டலைத் திரும்ப வாங்கிக்கிறேன்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/05/blog-post.html

பதிவைப் படிக்கும் பொழுதே பாடகர் யார்னு தெரிஞ்சு போச்சு. அடுத்து கொஞ்சம் படிச்சதும் படமும் பாட்டும் தெரிஞ்சு போச்சு. இசையைக் கேட்டதும் பாட்டு இதுதான் உறுதிபடுத்திக்கிட்டாச்சு. :)

G.Ragavan said...

http://girirajnet.blogspot.com/2008/05/blog-post_8973.html

அதெல்லாம் சரி... இந்தப் படங்களை இங்க போடுறதுக்கு ஜோதிகா கிட்ட அனுமதி வாங்கியாச்சா? :D

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/05/blog-post.html

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு என்று இருக்கையில் இது போலச் செய்வது மூடத்தனம். சுருட்டு குடிக்கச் சொல்லி நக்கீரர் சொன்னதா தரவு இல்லாதப்ப இது தொந்தரவு. மொதல்ல இத நிப்பாட்டனும். ஏன்னா.... நாளைக்கு எவனாச்சும் சொகுசுப் பேர்வழி முருகன் பக்தரா இருந்து... எதையாவது ஏடாகூடமா மறந்து தொலைச்சா வம்பாப் போயிரும். அதையெல்லாம் படையல்ல வைக்க வேண்டியிருக்கும்.

G.Ragavan said...

http://ponvandu.blogspot.com/2008/05/blog-post_07.html

இந்த மல்ட்டிலெவல் மார்க்கெட்டிங்கே ஒரு மன்னாரு அன் கோ வேலைன்னு புரியலையே மக்களுக்கு.

நீங்க சொன்ன மாதிரி.... பேராசைதான் அடிப்படைக் காரணம். அதை மறக்கவே முடியாது.

இப்பிடித்தான் முந்தி கோனிபயோன்னு ஒரு மருத்துவப் பொருள் கொண்ட உள்ளாடை, சாக்ஸ்..அது இதுன்னு ஒரு நிறுவனம் வந்துச்சு. இப்ப அதக் காணவே காணோம்.

பெரும்பாலும் எல்லாம் ஹாங்காங்...சைனா பக்கத்துக்குக் கம்பெனிகளா இருக்கும். ஏன்னு தெரியலையே.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2008/05/08-05-2008.html

கடிதம் எழுதுவது ஒரு கலையாம். அக்கலையிலும் சிக்கலை உண்டாக்கும் நக்கலை உம்முடைய கடிதத்திலே கண்டேன். கடிதம் நக்கல் செய்த கொத்ஸ் வாழ்க வாழ்க என்று மனமார வாழ்த்துகிறேன்.

G.Ragavan said...

http://songs.arutperungo.com/2008/05/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b0%e0%af%80%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d

நல்ல முயற்சி. இவையிரண்டுமே எனக்குப் பிடித்த பாடல்கள். ரொம்பவும் பிடித்த பாடல்கள்.

G.Ragavan said...

http://manasukulmaththaapu.blogspot.com/2008/04/2.html

இப்பிடியொரு திருப்பமா! மதுரைல இருந்து திருச்சிக்குக் கூட்டீட்டுப் போய் இப்ப திருவண்ணாமலைல வந்து நிக்குதே கதை.

G.Ragavan said...

http://manasukulmaththaapu.blogspot.com/2008/04/3.html

கதையச் சோகமா முடிச்சீங்கன்னா.. அமெரிக்காவுக்கே ஆட்டோ வரும்னு இப்பவே எச்சரிக்கிறேன் :)

G.Ragavan said...

http://manasukulmaththaapu.blogspot.com/2008/05/4.html

அப்பாடியோவ். சினிமா மாதிரி ரயில்வே ஸ்டேஷன்ல முடிச்சாலும் சந்தோசமா முடிச்சிட்டீங்க. ரொம்ப நன்றி.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/05/blog-post_08.html

ஆகா..இந்த வாரப் பாடல்கள் உங்களுடையனவா. என்னுடைய வாழ்த்துகள்.

அனைத்துமே அருமையான பாடல்கள். எல்லாமே எனக்கும் பிடித்த பாடல்கள்.

அன்புள்ள மான்விழியே என்று குறும்பூ பூக்கும் எளிய இனிய காதல் பாடல்.

நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சரமே

மஞ்சள் எப்போதும் நிலையானது.. மழை வந்தாலுமே கரையாதது...கவியரசர் வரிகளும் இசைஞானியின் இசையும்..எஸ்.ஜானகியின் குரலும் நம்மைப் புதுவுலகம் அழைத்துச் செல்கின்றன என்றால் மிகையில்லை.

ஜெயச்சந்திரன் எனக்கும் மிகவும் பிடித்த பாடகர். இவர் தமிழில் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளப்படவில்லை. ஆனால் தமிழில் இவர் பாடியது எல்லாமே சிறப்பான பாடல்கள். சமீபத்திய ஒரு தெய்வம் தந்த பூவே ஆகட்ட்டும்....பழைய வசந்தகால நதிகளிலே பாடல் ஆகட்டும். அவர் தனித்தன்மை கெடாமல் பாடியிருப்பார். இந்தப் பாடலும் எனக்குப் பிடிக்கும். பூவிலே மேடை நான் போடவா.. முடிக்கும் பொழுது இசையரசி சிறிது பாடுவார்கள். அதுவும் அருமை.

யாருக்குப் பிடிக்காது பூங்கதவு தாழ் திறக்க? உமாரமணனும் தீபன் சக்கரவர்த்தியும் அழகா பாடியிருப்பாங்க.

உலகவும் தென்றல் காற்றினிலே... ஓடமிதே.. நாம் மகிழ ஊஞ்சலாடுதே... கேக்கும் போதே ஊஞ்சல் ஆட்டுதல்ல. நல்ல பாட்டு.

இதே மாதிரி இன்னொரு வாய்ப்பு உங்களுக்குக் குடுக்கனும்னு நானும் பிரபா கிட்ட கேட்டுக்கிறேன்.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2008/05/blog-post.html

வா என்று வாய் திறந்து வாய்தா வாங்க வக்கில்லாதவன் என்ற வசைப் பெயரை வாங்கிடாமல் பதிவிட்டு வாக்குகள் பல வாங்கிய உங்களைப் பாராட்டும் அதே வேளையில் கொத்தனாரின் கொத்தாளத்தனத்தைக் கொஞ்சமேனும் திட்ட வேண்டும் என்ற நல்ல பண்பை நினைவு படுத்தியமைக்கு நன்றி. இந்தப் பதிவிற்கு என்னுடைய மானமார்ந்த வாழ்த்துகள். :)

G.Ragavan said...

http://msmrishan.blogspot.com/2008/05/blog-post.html

ஜோடிப்படங்கள்ள கடைசிப் படம் ரொம்பப் பிடிச்சிருக்கு. ஏன்னா... அதுலதான் ரெண்டு தட்டுகளும் லேசா ஒன்னோட ஒன்னு தொட்டுக்கிட்டு ஜோடிக்கான இலக்கணத்தோட இருக்கு. :)

G.Ragavan said...

http://radhasriram.blogspot.com/2008/05/blog-post.html

நீங்க சொன்னாப்புல லதா இப்ப பாடுனா... ரொம்பவே கஷ்டமா இருக்கு. இசையரசி பி.சுசீலா எல்லாம் ஒதுங்கியிருக்காங்க. அது மாதிரி அவங்களும் செய்யலாம்.

ஜனக்ஜனக் படத்துல பாட்டெல்லாமே சூப்பர். வசந்த் தேசாய்தான் வாணி ஜெயராமை அறிமுகப் படுத்தியது. குட்டி என்ற படத்தில்.

அந்த கதக் நடனக் கலைஞர்...தமிழில் காத்தவராயன் படத்தின் தொடக்கத்தில் சிவ தாண்டவம் ஆடியிருக்கிறார்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/05/blog-post_12.html

ரொம்பச் சின்ன வயசுல காய்கறியே சாப்பிட மாட்டேன். எங்க அத்தை திட்டுவாங்க. மீனு கோழி கறின்னா திம்பேன். தூத்துக்குடில மதியம் வீட்டுல இருந்து எடுத்துட்டுப் போன சாப்பாட்டை பக்கத்துல இருந்த நண்பன் வீட்டுல சாப்ப்பிட்டேன். அப்ப புளியூத்துன கத்தரிக்காய் குடுத்தாங்க. நல்லாருந்துச்சு வீட்டுல சொல்லி செய்யச் சொல்லி திட்டு வாங்கினேன். :) ஏன்னா அத வீட்டுல அடிக்கடி செய்வாங்களாம். ஹி ஹி

அதுக்கப்புறம் கத்தரின்னா விடுறதில்லை. திரும்பவும் அம்மா அப்பா கிட்ட வந்தப்புறந்தான் வெட்டுகத்திரிக்காய் சாப்டது.

சொரியாசிஸ் வந்தப்ப எல்லாரும் அறிவுரை சொன்னாங்க. கத்தரியே தொடாதன்னு. நானும் கொஞ்சம் பயந்திருந்தேன். இப்பல்லாம் வெட்டுறதுதான். :)

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2008/05/blog-post_08.html

அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லாள்
ஊரில் யாவர் உள்ளார்
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றிச் சொல்வேன்
அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆ

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/05/blog-post_13.html

ஓ இப்பப் புதுசா இதெல்லாம் போடுறாங்களா? நான் இந்தக் கனாக் காணும் காலங்கள் அப்படீங்குற நாடகத்த மட்டும் பாப்பேன். அது கூட டீவி கெடையாது. நெட்டுலதான். ஒரு சைட்ல அன்னைன்னைக்கி நாடகங்கள போடுறாங்களே. திருவிளையாடல்னு பேரைப் பாத்தேன். ஆனா வேற ஏதோன்னு நெனைச்சி விட்டுட்டேன். உங்க பதிவைப் படிச்சப்புறமா அதுல ஒரு எபிசோடு பாத்தேன். நல்ல முயற்சி. ஆனா யாரோ ராகேஷ் சின்ஹான்னு ஒருத்தர் இயக்குனர். அதுதான் ஆச்சரியம்.

இராமாயணத்தையும் பாத்தேன். எல்லாம் வடக்கத்திப் பசங்க. அதான் நீங்க சொன்னாப்புல ஒல்லிப் பிச்சான்களா இருக்காங்க. ஆனா இராமாயணத்தை விட திருவிளையாடல் நல்லாருக்குற மாதிரி தோணிச்சு. முருகனா நடிச்ச பையனுக்கு மட்டும் நல்ல விக் வாங்கிக் குடுக்கச் சொல்லுங்க.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2008/05/blog-post_15.html

நீங்கள் சொல்வது போலப் பூங்கோதை நல்லவர் போலத்தான் தெரிகிறது.

என்னுடைய குரல் மாதிரியே இல்லைன்னு சொல்லியிருக்கலாம். அதென்ன தாந்தான்னு ஒத்துக்கிறது. இப்பிடியெல்லாம் இருந்தா அரசியல்ல இருக்க முடியாதும்மா... நீங்க நல்லவங்க்களா இல்லையான்னு தெரியாது. ஆனா நீங்க உங்க குரல்தான் ஒத்துக்கிட்டதுல இருந்து நீங்க ஏதோ உப்புப்புளி மொளகாய்க்குச் சிபாரிசு செஞ்சிருப்பீங்க போலத் தெரியுது.

G.Ragavan said...

http://kuttiescorner.blogspot.com/2008/05/blog-post_14.html

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் துர்கா :) முருகனருளால் நீடு வாழ்க. பீடு வாழ்க.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/05/blog-post_15.html

எல்லாமே நல்ல பாட்டுதான். எனக்கும் பிடிச்ச பாட்டுகதான்.

ஆனா ஒன்னு மட்டும் பிடிக்கலை.

// சுசீலா பாடரதும் பிடிக்கும், ஆனா அவங்க, ரூல்ஸ் படி பாடிட்டு போயிடுவாங்களோ? ஜானகி, SPB மாதிரி, இவங்களுக்கான ஒரு ஸ்டைல் பாடலில் சேர்த்து, மேலும் மெருகேத்துவாங்கங்கரமாதிரி ஒரு தோணல் எனக்கு. //

இதுதான் செம காமெடி. இத நீங்க சொல்லிருக்கும் எஸ்.ஜானகியும் எஸ்.பி.பியும் கூட ஒத்துக்கா மாட்டாங்க.

என்னங்க பாடலை அவங்க? குரலை மாத்திப் பாடுனாலோ பாட்டுக்கு நடுவுல சிரிச்சாலோதான் மெருகேத்துறதா? அப்ப அது காமெடிதான். :)

குரலை மாத்தாமலே குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றுன்னு பாடுறப்போ குட்டி பத்மினிக்குப் பொருந்தாமலா இருந்துச்சு. குழந்தை பாடுற மாதிரி இல்லைன்னு யாருக்காச்சும் தோணுச்சா?

அதே படத்துல அன்புள்ள மான்விழியேன்னு பாடுறப்ப குழைவு இருக்குமே. காதல் குழைவு.

ஏன் செவ்வந்திப் பூமுடிச்ச சின்னக்கான்னு பட்டிக்காட்டு டப்பாங்குத்துப் பாடலையா. சைரனைப் போலப் பாடனும்னு சொன்னதப் பாடலையா!

கேட்டேளே அங்கே...அதப் பாத்தேளா இங்கே... வாங்கோண்ணா..வாங்கோண்ணா... இதுவும் மெருகேத்துதல் இல்லைன்னா... என்ன சொல்றது.

எஸ்.ஜானகி இளையராஜா இசையில நிறைய பாடியிருக்காங்க. நீங்களும் நிறைய கேட்டிருக்க்கீங்க.. அதுனால ஒங்களுக்கு அப்படித் தோணுது.

துளித்துளி துளித்துளி மழைத்துளி
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே...
காத்தோடு பூவுரச...பூவ வண்டுரச...
லாலீ லாலீ லாலீன்னு நெறையப் பாட்டுக இருக்கு. எடுத்துச் சொன்னா சொல்லிக்கிட்டேயிருக்கலாம்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/05/blog-post_15.html

சர்வேசன் இந்தப் பாட்டைக் கேட்டுப்பாருங்க. இதுல எஸ்.பி.பியும் இசையரசியும் பாடியிருக்காங்க. இளையராஜா இசையில்.

http://uk.youtube.com/watch?v=3_qdZdzRvvg&feature=related

இதுலயும் ஒங்களுக்கு மெருகேத்துறது தெரியலைன்னா... ஒன்னும் சொல்றதுக்கில்ல.

இளையராஜா இசைல நெறைய அவங்க பாடலை. அதுனால இளையராஜா பாட்டுகளை நெறைய கேட்டுப் பழகுன ஒங்களுக்கு அவங்க சாதனை புரியலைன்னு தோணுது.

G.Ragavan said...

http://shaliniyin.blogspot.com/2008/05/1.html

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

இந்தத் தத்துவங்களப் படிச்சுப் புரிஞ்சு அதன் படி வாழ்ந்தாங்கன்னா... காக்கா புராணப்படி.... நூறு வடை கிடைக்கும்னு வடை கவ்வியார் பாட்டி சொல்லீருக்காங்க. :-)

நல்லாவே யோசிச்சிருக்க.. :)

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2008/05/blog-post.html

ரொம்பவும் அழகான பாடல். இந்தப் பாட்டு மாதிரி எளிமையான பாடல் வரிகள் இருந்தா வாய்ப்புக் குடுங்கன்னு லதா மங்கேஷ்கர் எம்.எஸ்.விஸ்வநாதன் கிட்ட சொன்னாங்களாம். ஆனா அவரு கடைசி வரைக்கும் பயன்படுத்திக்கலை. ஏன்னா உச்சரிப்பு சரியிருக்காதாம். :D அவரு இசையமைப்பாளர்.

இசையரசி பிறப்பால தெலுங்கா இருந்தாலும் அவங்க வாயில "நம்ம தமிழ்நாட்டுல"ன்னு வருது பாத்தீங்களா. முந்தி கூட ஒரு பேட்டியில தமிழும் தெலுங்கும் ரெண்டு கண்கள்னு சொன்னாங்க.ம்ம்ம் அவங்க பாடகி.

நல்ல வீடியோவை பகிர்ந்தமைக்கு நன்றி பிரபா.

G.Ragavan said...

http://papaasangam.blogspot.com/2008/05/tamil-girls.html

என்னங்க இளா இது.. இட்லி அரைக்கிறது எப்படீன்னு பொண்ணுங்க கிட்டயா கேக்குறது? சரியாப் போச்சு போங்க. இதெல்லாம் பசங்க கிட்ட கேக்கனும்.

நம்மூர்கள்ள 1க்கு 3ன்னு போடுவாங்க. அதாவது ஒரு பங்கு உழுந்துக்கு மூனு பங்கு அரிசியாம். நான் சரிக்குச் சரி போடுவேன். அப்பத்தான் மெத்தோமெத்துன்னு வரும். அதுவுமில்லாம உழுந்து ஊறப் போடுறப்போ வெந்தயத்தையும் ஊறப்போட்டு அரைச்சா தோசை சுடும் போது அமெரிக்காவே உங்க வீட்டு வாசல்ல தட்டோட நிக்கும். அவ்வளோ கமகமக்கும்.

உழுந்தைத் தோலோடையும் அரைக்கலாம். இல்லாமயும் அரைக்கலாம். சுவையில வித்தியாசம் இருந்தாலும் ரெண்டுமே நல்லாருக்கும்.

இப்பத்தான் இந்த ஆம்ஸ்டர்டாம் மாநகரிலே ரெண்டு தோசையை வெங்காயத் துவையலோடு உள்ளே தள்ளிவிட்டு தெம்பாக இந்தப் பின்னூட்டத்தை இடுகிறேன்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/05/blog-post_4269.html

வீடு ஒன்று
பைகள் மூன்று
அதில் நினைவுகளோ கோடிக்கோடி
அவைகளைத் தேடித் தேடி
பதிவுகளாகப் பாடிப் பாடி
வருகின்ற துளசி டீச்சருக்கு வாழ்த்துகள். :)

அந்த அரமணை ரொம்பச் சல்லிசா வித்திருக்காங்க. கெடைச்சிர்ருந்தா ரெண்டு வாங்கிப் போட்டு ஓட்டலாஅ மாத்தீருக்கலாம்.

G.Ragavan said...

http://ushnavayu.blogspot.com/2008/05/blog-post_17.html

தில்லு முல்லு கலக்கல் படம். சிரிச்சிச் சிரிச்சு வயிறு வலிக்கும்.

அதுலயும் சௌகார் ஜானகியும் தேங்காய் சீனிவாசனும் சேர்ந்து வர்ர கட்டங்கள்ளாம் வயிறு மட்டுமல்ல ஒடம்பே குலுங்க வைக்கும்.

G.Ragavan said...

http://faheemapoems.blogspot.com/2008/05/blog-post_16.html

சேர்வோமா என்று விரும்பிய காதல் சேராமல் போவது ஒரு துயரென்றால்...சேர்ந்தும் சோர்ந்து போவது மறுதுயர். இவ்விதி பெண்களுக்கு மட்டுமே சதியாவதால்தானோ என்னவோ மனைவிக்குச் சதி என்று பெயர். எத்தனை தலைமுறை மாறினாலும் மனைவியை சமையலறைக்குள்ளேயும் அழுக்குத் துணிகளுக்குள்ளும் பாத்திரங்களுக்கும் பதிப்பதால்தானோ என்னவோ கணவனுக்குப் பதி என்று பெயர்.

சகோதரி...உங்கள் கவிதை நல்ல வெளிப்பாடு.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2008/05/indian-america-life.html

அவியல்னு தலைப்பு வெச்சதுக்கு அலம்பல்னு வெச்சிருக்கலாம் ;) அமெரிக்கான்னு போறது.. அங்க போயிட்டு இந்தியான்னு அழுகுறது. அதுக்குக் காரணம் நீங்க அன்பு வெச்சிருக்குறவங்க இந்தியாவுல இருக்காங்கன்னு நெனைக்கிறேன்.

அமெரிக்காவுல புது நண்பர்கள் உருவாக்கிக்கோங்க. பொழுது போகும்.
மேயரு சௌக்கியமா? :D

ரொம்பக் கஷ்டமாயிருந்தா ஆம்ஸ்டர்டாம்ல வேலையத் தேடீட்டு வந்துருங்க. அலுப்பே தட்டாது :-P

இங்கயும் இன்னைக்கு நேத்து மழைதான். திரும்பவும் குளிரத் தொடங்கீருச்சு. அதுவும் நல்லாத்தான் இருக்கு.

G.Ragavan said...

http://surveysan.blogspot.com/2008/05/blog-post_15.html

வாங்க சர்வேசன். இந்த ரெண்டு பாட்டுமே எனக்குப் பிடிக்கும். என்னாலயும் ஓட்டுப் போட முடியாது. ரெண்டு பேருக்கும் ஓட்டுப் போடும் வாய்ப்பு இல்லாததால நான் வாக்குப் பதியலை.

ஆனா ஓரு பதிவு பதிஞ்சிட்டேன். இதோ இங்கே.
http://gragavan.blogspot.com/2008/05/psuseela-psusheela-sjanaki.html

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/05/7.html

இந்தக் கொடுமைய முன்ன எங்கையோ படிச்சேன். மிகக் கொடுமையான வழக்கம். இதுல வீரம் சொட்டுக்குக் கூட கெடையாது. வக்கிரம்தான். இதைத் தடை செய்யவே வேண்டும்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/05/7.html

ஆகா... என்னுயிர்த் தோழன் :) சரிதானே?

G.Ragavan said...

http://pathivu.madurainagar.com/2008/04/blog-post_20.html

மதுரைச் சித்திரைத் திருவிழா படங்கள் அருமை.

ஒவ்வொரு ஆண்டும் அணிந்து வரும் பட்டின் நிறத்தை வைத்து அந்த ஆண்டிற்கான விவசாய விளைவுகளை முடிவு கட்டுவார்களாம். வெள்ளை என்றால் பருத்தி..செகப்பு என்றால் மிளகாய் வத்தல்...பச்சை என்றால் பாசிப்பயறு, காய்கறிகள்...இப்பிடிப் போகும். பலமுறை சென்றிருக்கிறேன்.

கள்ளழகர் வேடம் பூண்டவர்கள் கோடையின் கடுமையைக் குறைக்க நீர் தெளித்துக் கொண்டே வருவார்கள். சிறுவயதில் அவர்கள் சூடியிருக்கும் மலர்களின் மணமும்...உடையும்...நீர் தெளிப்பும் என்னை அச்சமூட்டியவை. :)

G.Ragavan said...

http://kappiguys.blogspot.com/2008/05/blog-post.html

தீக்குருவியை
தீந்தமிழினில்
தீச்சுவையென
தீ விமர்சனம் போட்டு விட்டாய் கப்பிய்யா!

உமக்குக் கோடிக்கோடி நன்றி.

விஜய் படம்னாலே பாக்குறதில்லைன்னு ஒரு முடிவு எடுத்து ரொம்ப நாள் ஆச்சு. ஆனாலும் ஏதாச்சும் ஒரு படம் உருப்படியா நடிக்கக் கூடாதான்னு நப்பாசை வரும். ஆனா... அந்த ஆசையெல்லாம் ஆண்டவனுக்கே அடுக்காதுன்னு தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக விஜய் இருப்பதை நினைத்துப் பெருமைப் படாமல் இருக்க முடிகிறது.

இங்கே ஒரு நண்பர் தொலைபேசி செய்து.. ஒரு நல்ல செய்தி. இங்கே குருவி வருகிறது. வருகின்றீர்களா என்றார். நான் விஜய் படமெல்லாம் பார்ப்பதில்லை என்றேன். இந்தியாவில் என்றால் நானும் பார்ப்பதில்லை... இங்கே என்பதால் போகிறேன் என்றார். இங்கே என்ன... எங்கே என்றாலும் விஜய் படத்தை நான் பார்ப்பதில்லை. நல்ல முடிவுதான்னு நம்புறேன். :D

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/05/blog-post_15.html

இந்த மாதிரி மெயில் ஒன்னு வந்துச்சு. படிச்சிட்டு இப்பிடி ரிப்ளை பண்ணேன்.

ஏய்யா இவ்ளோ பெரிய கம்பெரி பரிசுன்னு சொல்ற... ஆனா ஒன்னோட ஈ மெயில் ஐடீல அந்தக் கம்பெனியோட டொமைனே இல்லையேன்னு.

ரெண்டு நாளு கழிச்சி அதுக்கு ரிப்ளை... டொமைன் பேர லேசா தட்டிச் செதுக்கி (yahooo) அதுல இருந்து மெயில் அனுப்பீருந்தாங்க. செம காமெடி. கண்டுக்காம விட்டுட்டேன்.

ஆமா நாலு கோடி வைக்கிறதுக்கு அந்த அரமணைய வாங்கீருக்கலாம். :( விட்டுட்டீங்களே!

G.Ragavan said...

http://koculan.blogspot.com/2008/05/blog-post_17.html

தேவார நினைவுகள் தேனாக இருந்தன. நல்லதொரு அருமையான தேவாரச் செய்யுளை நினைவு படுத்தியமைக்கு நன்றி.

கற்றூணைப் பூட்டிக் கடலிலே பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயமே!


ஆயில்யன் சொன்னது போல பதிவு பயர்பாக்சில் வரவில்லை. ஜஸ்டிபை செய்ய வேண்டாம்.

G.Ragavan said...

http://pathivu.madurainagar.com/2008/05/blog-post_18.html

ஓங்கி விண்வளர்ந்தக் கோபுரப் படம் காட்டி
தாங்கள் தம் வலைப்பூவில் பதிவிட்டால்
தீங்கின்றி நாளெல்லாம் பின்னூட்டம் பல பெற்று
ஓங்கு பெரும் நெட்வொர்க் டிராபிக் ஊடு ஹிட்டுகள் :)

படங்கள் நல்லாருக்கு குமரன்.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2008/05/648.html

மிகவும் அருமையான பாடல் ரவி. இந்தப் பாடல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கொடுத்தமைக்கு நன்றி. :)

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2008/05/blog-post_10.html

என்ன படம்னே தெரியாம கேட்டு... கேட்ட உடனேயே ரசிச்சு.. ரசிச்ச உடனேயே பிடிச்சுப் போன பாட்டு இது. கலக்கல் கூட்டணின்னு சொல்வாங்க. அதுல இது ஒன்னு.

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2008/05/1.html

விழுந்த இடத்துல தோண்டீருந்தா பொதையல் கெடைச்சிருக்கமப்பா.. இப்பிடிக் கோட்டை விட்டுட்டியே.... என்ன பையன் நீ!!!!

ஒரு ரகசியம் சொல்றேன். எனக்கும்... இந்த பஸ்சுல ஏறுனதும் தூக்கம் வந்துரும். இப்பிடித்தான் கூர்க் போறதுக்கு நண்பர்கள் பஸ் ஏறுனோம். பஸ் பொறப்பட்டதும் நான் தூங்கீட்டேன். நடுவுல பஸ் டீக்கு நிப்பாட்டுன எடத்துல திரும்ப முழிச்சேன். பாத்தா பக்கத்துல கொட்டக் கொட்ட முழிச்சிக்கிட்டிருக்கான். தூங்குன்னு சொல்லீட்டு நான் தூங்கீட்டேன். காலைல பஸ் நிப்பாட்டுனப்பதான் முழிச்சேன். அவனுக்குக் கடுப்போ கடுப்பு. திரும்ப வர்ரப்ப என்னையத் தூங்க விடமாட்டேன்னு கடுஞ்சபதம் எடுத்தான். இதெல்லாம் நம்மளப் பதம் பாக்குமா.... பஸ் டுர்ர்ர்ர்ர்ர்ர்ரு... நான் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு...

கேமராவுக்கு ஏதாச்சும்னா ஓக்கே. நீ ஒழுங்கா வந்து சேந்ததே போதும். :)

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/05/blog-post_20.html


எல்லாரும் வெள்ளைக்காரக் கொழந்தைங்க போலத் தெரியுது. ம்ம்ம்ம்ம்...

கே.ஆர்.எஸ் ஆழ்வார் வந்து கதை சொல்வார்னு நானும் காத்திருக்கேன்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/05/blog-post_19.html

முருகனுக்கு என்ன பரிசுன்னு சிவக்கொழுந்து சொன்னாங்களா? :)

முருகனருள் எல்லாருக்கும் உண்டு குமரன். நான் கொஞ்சம் உரிமை எடுத்துக்குவேன். அவ்வளவுதான். :)

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/05/blog-post_19.html

// மதுரையம்பதி said...

// கொஞ்சம் கடினமாக இருக்கிறது என்று அவள் பெயரைச் சிவக்கொழுந்து ஆக்கிவிட்டார்//

அடப்பாவமே...அந்த அழகான பெயரையா சொல்ல வரல்ல....
இது வேணுமின்னு செய்யறது \...ஒண்ணும் சொல்லறதுக்கில்ல.. :-) //

ஆமாங்க. வேணும்னுதான் செய்றது. குமரனின் நட்பும் கேள்மையும் வேணும்னுதான் செய்றது. :) அதுல ஒங்களுக்கு எதுவும் பிரச்சனை இருக்கா? :D

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/05/blog-post_19.html


// குமரன் (Kumaran) said...

//இது வேணுமின்னு செய்யறது \...ஒண்ணும் சொல்லறதுக்கில்ல.. :-)//

அவரு பெங்களூரு வராமலேயா போயிடுவார்?! அப்படி வர்றப்ப என் சார்பா நாலு சாத்து சாத்துங்க. :-) //

ஆகா... ஆகா.. என்ன கொடுப்பினை. கொடுப்பது குமரன் என்றால் எதையும் ஏற்பது எனக்கு உவப்பே :)

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2008/05/valliyai-thottu-kavadi-chindhu.html

// குமரன் (Kumaran) said...

இராகவன்,

காவடிச்சிந்தில் இருக்கும் பாடல் புரிகிறது. ஆனால் முதல் இரு பத்தி புரியவில்லையே. பத்தி இல்லாதவன் என்பதாலோ? //

ஆகா... குமரனுக்குப் புரியவில்லையா.. அப்படியானால் நான் எழுதியதில்தான் குற்றம்.

// பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் நூற்களை நிறையப் படித்தீர்களோ? அந்த நடையில் எழுதியிருக்கிறீர்கள்?! //

தெரியலையே குமரன். அப்படி எதுவுமே யோசிக்கலை. மெட்டு வந்ததும்.. பட்டுப் பட்டுன்னு சொற்கள் விழுந்திருச்சு. ரொம்பவும் யோசிச்செல்லாம் போடலை.

// // பாவை அறியாப் பாலகன் பாலை அகல எண்ணிச் செய்த //

இது எனக்கு இரண்டு விதமாகப் புரிந்தாலும் முதல் புரிதலான திருப்பாவை அறியா பாலகன் என்பது தவறு என்பதால் அதனைத் தள்ளி அடுத்தப் புரிதலை மட்டுமே கொள்கிறேன். விரைவில் பாலை அகலட்டும். அதற்குத் தமிழ்வேள் அருளட்டும். // //

நன்றி குமரன். குமரன் வாழ்த்து தமிழ்த்தாய் வாழ்த்து :)

மூனாவதா ஒரு பொருளும் இருக்கு. வெண்பாவை அறியாப் பாலகன்
வஞ்சிப்பாவை அறியாப் பாலகன்
களிப்பான கலிப்பாவை அறியாப் பாலகன்

இப்பிடியும் வெச்சுக்கலாமே குமரன்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2008/05/valliyai-thottu-kavadi-chindhu.html

// VSK said...


சரின்னா நாளை பாடி வரும்!:)) //

அதெல்லாம் கேக்கக் கூடாது. மொதல்ல பாடி அனுப்புங்க. :) காத்திருக்கிறோம்.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2008/05/tamil-blogs.html

இளா... நான் ஒங்க பேரத்தான் போட்டுப் பாத்தேன். :) ஹி ஹி... இது வேறையா.... ஆண்டவா.. ஆண்டவா...

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2008/04/blog-post_10.html

இப்ப இந்தப் பாட்டு வரிகளையெல்லாம் கொடுத்ததுக்கு என்ன அடிப்படைக் காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?

எல்லாரும் அரசியலுக்காக சினிமால இருந்தா... இவரு சினிமாவுக்காக அரசியல்ல இருக்காரோன்னு சந்தேகம்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2008/05/blog-post_22.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இனி கண்ணன் பாட்டுக்கும் எங்களுக்கு ஆஸ்தான பாடகர் ஆயிட்டீங்க! கையைக் கொடுங்க! :-) //

இதுக்கு நான் என்ன சொல்ல வருவேன்னு நீங்களே ஊகிச்சுக்கோங்க. :)

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2008/05/303.html

:) நல்லவேளை... தப்பிச்சு வந்துட்டீங்களே. கடைசீல பானீபூரி சாப்டீங்களா? இல்லையா?

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/05/blog-post_22.html


ஷைலஜாவிற்கு வாழ்த்துகள். இந்த வார நேயர் ஆயிட்டீங்களே. :)

நேத்தே எல்லாப் பாட்டுகளையும் அந்தப் பாட்டுகளுக்கு உங்க விளக்கங்களையும் கேட்டேன். வழக்கமா எல்லாரும் எழுதுவோம். நீங்கப் பேசிப் பாடிக் கொடுத்துட்டீங்க.

எல்லாப் பாட்டுகளும் எனக்குப் பிடிக்கும். அத்திக்காய் பாட்டு ஒரு பாடம். தமிழை எப்படியெல்லாம் சிறப்பாப் பயன்படுத்தலாம்னு ஒரு எடுத்துக்காட்டு. அதுல ஒரு சிறிய திருத்தம்...சாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் வாழக்காய். சாதிக்காய் கெட்டது போல் அல்ல.

அப்படியே சரியா ஒங்க ஊர் பாட்டும் கண்ணன் பாட்டும் கேட்டுட்டீங்க ;)

பொய் சொல்லக் கூடாது பாட்டு முந்தி கேட்டதில்லை. இப்பக் கேக்குறேன். உருகுதே மருகுதே அருமையான பாட்டு. ஜி.வி.பிரகாஷ் சிறப்பாகவே இசையமைக்கிறார். மீடியாக்கர் வாரிசு இசை மாதிரி இல்லாம சிறப்பாக முயற்சிக்கிறார். பாராட்டி ஊக்குவிக்கப்பட வேண்டிய இசையமைப்பாளர் அவர்.

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2008/05/blog-post_19.html

கவிதை நல்லாருக்குன்னு கூடச் சொல்ல முடியலையேப்பா...

இந்தக் கொடுமைய எங்கன்னு சொல்றது.... கவியரசர் வரிகள்தான் நினைவுக்கு வருது. அதையே கொஞ்சம் மாத்திச் சொல்றேன்.

இல்லை ஒரு பிள்ளை ஏங்குவோர் பலரிருக்க அங்கு போய் ஏன் பிறந்தாய் சின்னமகளே!

வளக்க முடியாதுன்னு தெரியுதுல்ல.. அப்புறம் ஏம்ல பொண்டாட்டியத் தொடுறீங்க!!!!

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2008/05/93.html

இந்தப் பாடலுக்கு இசை மெல்லிசை மன்னர் இல்லை. மலையாள இசையமைப்பாளர் தேவராஜன் மாஸ்டர் என்று நினைக்கிறேன். ஆனால் உறுதியாக மெல்லிசை மன்னர் கிடையாது.

G.Ragavan said...

http://kappiguys.blogspot.com/2008/05/blog-post_26.html

தமிழ்மணத்தின் நட்சத்திரமே...வாழ்க வாழ்க. நகைச்சுவைச் செல்வனே வாழ்க வாழ்க. சிரிப்பை வரவழைக்கும் சித்திரனே வாழ்க.

இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துகள். அடுத்தடுத்து என்னென்ன பதிவுகள் போட்டுத் தாக்கப் போறீங்கன்னு காத்துக்கிட்டிருக்கம்யா! :)

G.Ragavan said...

http://sangamwishes.blogspot.com/2008/05/wishes_27.html


// ஜீ.ரா என்னும் ஆன்மிக பதிவருக்கு //

அப்பா ராமு, என்னையப் போயி ஆன்மீகப் பதிவர்னு சொல்றியே! இது ஒனக்கே நல்லாருக்கா.... சண்மதச் செல்வரும், சொல்லின் செல்வரும், ஆன்மீகச் சுனாமியும், 21ம் நூற்றாண்டின் ஆழ்வாரும், கலியுகக் கண்ணனும் ஆகிய திரு கண்ணபிரான் ரவிசங்கர் போன்ற மகான்களை ஆன்மீகப் பதிவர்கள் என்று போற்ற வேண்டிய வேளையில்.. கள்ளியிலும் பால் போன்ற கதைகளை எழுதிய என்னைச் சொல்லலாமா? அது அடுக்குமா?

G.Ragavan said...

http://kavinaya.blogspot.com/2008/05/blog-post_26.html

அருமையான பாடல். நேற்றே கேட்டேன். மிக நன்றாக அமைந்திருக்கிறது.

கந்தனைப் போற்றுவதில்... அதிலும் தீந்தமிழில் செந்தமிழ்க் கடவுளைப் போற்றுவதில்...தமிழருக்கு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்யும்.

பாட்டை சிறப்பாக எழுதிய உங்களுக்கும் பாடிய பாடகிகளாகிய மீனாவிற்கும் சித்ராவிற்கும் பாராட்டுகள்.

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2008/05/2.html

கொல்லிமலை இயற்கை எழில் சூழ்ந்த இடம். மு.வரதராசனார் இயற்றிய ரவிசந்திரிகா என்ற கதையைப் படிக்கையில் கொல்லிமலைக்குப் போய் விட மாட்டோமா என்ற ஆவல் ஓங்கும். தமிழில் எனக்குப் பிடித்த நாவல்களில் ரவிசந்திரிகாவும் ஒன்று. படிக்கத் திகட்டாத கதை அது.

படங்கள் நல்லா வந்திருக்கு. காமிரா கவிஞருக்குப் படமெடுக்கத் தெரியாதா...ஜீவ்ஸ் அண்ணாச்சிக் கேமராவுல ஏதாச்சும் கோளாறு :D (அண்ணாச்சி கோவிச்சிக்கறப்படாது)

திருமணம் நல்லபடி நடந்தது குறித்து மெத்த மகிழ்ச்சி. மணமக்கள் நீடு வாழ முருகனை வணங்குகிறேன்.

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2008/05/472.html

கப்பிஸ்ரீ, இந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படியே சின்னக் கொழந்தை மலரும் நினைவுகள் வந்துருச்சு. :((((((((((((((((((((

வாணி ஜெயராம் அழகாப் பாடியிருப்பாங்க. கூடப்பாடிய மலையாளப் பாடகி மாதுரி குளந்தைகலேன்னு பாடியிருப்பாங்க :) இவங்களுக்குப் பதிலா பி.எஸ்.சசிரேகா மாதிரி நல்ல தேர்ந்த பாடகியைப் பாட வெச்சிருக்கலாம்.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b2%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f

மீரு எப்புடோ சேசினே பாபம்..இட்ல சினிமா சூசிந்தி. மாவு சேசினே பாபம்....ஈ சினிமாகி விமர்சனம் சதுவிந்தி. :D

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2008/05/27.html

சந்தத் தமிழ்க் கவியாம்
முருகப் பெருமானின் சொந்தத் தமிழ்க் கவியாம்
அருணகிரி அள்ளித் தந்த கவியாம்
தீந்திருப்புகழினை ஓதி ஓதி
மற்றோர்க்கு சொற்சிக்கலை ஊதி ஊதி
பதிவிடும் வி.எஸ்.கேவிற்கு நன்றி பல. முருகனருள் முன்னிற்கும்.

இந்தத் திருப்புகழ் எனக்கு மிகமிகப் பிடித்தது. திமிரவுததியனைய நரக ஜனனம் என்று சொல்லும் பொழுதே பிறந்ததால் வந்த துயரம் விளங்கும். அந்தத் துயருக்குத் துயரை வைக்கும் துரையாம் தமிழ்க்கடவுளாகிய முருகப் பெருமானே அனைத்தும் தர வல்லார். அவறன்றி வேறு யார் வல்லார்!

G.Ragavan said...

http://dondu.blogspot.com/2008/05/blog-post_29.html

பி.ஜே.பியின் வெற்றி எந்த அளவிற்கு மனநிறைவாக இருக்கும் என்று யோசிக்கக் கூட முடியவில்லை. காவிரி விஷயத்தில் எல்லாக் கட்சிகளும் இரட்டை வேடம்தான். ஆனால் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற பெருமை பி.ஜே.பியை மட்டுமே சாரும்.

அதுவுமில்லாமல் காங்கிரசும் சரி.. ஜனதாதளமும் சரி.. காவிரிப் பிரச்சனையில் என்னதான் கர்நாடகாவிற்கு ஆதரவாக இருந்தாலும் தமிழர்கள் பாதுகாப்பில் கவனமாகவே இருந்தார்கள். நாகப்பா வீரப்பனால் கொல்லப்பட்ட போதும் கூட ஊரில் பாதுகாப்பு இருந்தது. நடுவில் ஒருமுறை தமிழர் வீடுகள் மீது தாக்குதல் நடந்தது. அதுவும் பி.ஜே.பியால். ம்ம்ம்... நடக்கப் போவதை யார் அறிவார்!

கர்நாடக பி.ஜே.பி கொஞ்சமும் நம்பிக்கையில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன செய்கின்றார்கள் என்று!

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/05/blog-post_30.html

ஆகா... இந்தப் பதிவு திரும்பவும் வந்திருக்குது. எனக்குப் பிடிச்ச பதிவும் கூட. :)

அது சரி... ஜிரா... கோரா.... இராகவன்னு எல்லாப் பேரையும் ஒன்னாப் போட்டுட்டீங்க! :D

G.Ragavan said...

http://sivanpaattu.blogspot.com/2008/05/blog-post_1343.html

பாட்டு அருமையான பாட்டு. என்ன குரல்...என்ன தமிழ்...என்ன இசை. அடடா! எல்லாரையும் ஒரு வாட்டி கும்புட்டுக்கிறேன்.

பதிவு வழக்கம் போல நல்லாருந்துச்சு. சட்டுன்னு சிவன் பாட்டா ராமன் பாட்டான்னு சந்தேகம் வந்தாலும்.. ஒங்க பதிவுங்குறதால வந்த சந்தேகம் ஓடியே போயிருச்சு. :)

மத்ததெல்லாம் எப்படியோ.. ஒம்பது ரசங்களும் நல்லாத் தெரியும். செய்யவும் சாப்பிடவும்.

புளிரசம்
தக்காளி ரசம்
இஞ்சி ரசம்
பூண்டு ரசம்
மெளகு ரசம்
கொத்துமல்லி ரசம்
பருப்பு ரசம்
கொள்ளு ரசம்
எலுமிச்சை ரசம்

G.Ragavan said...

http://kappiguys.blogspot.com/2008/05/blog-post_27.html

அருமை அருமை அருமை

G.Ragavan said...

http://kappiguys.blogspot.com/2008/05/3-born-into-brothels.html

ம்ம்ம்ம்... மனம் கனக்கிறது என்று மட்டும் கதை விட்டுக்கொண்டு நிறுத்திக் கொள்கிறேன்.

G.Ragavan said...

http://maduraiyampathi.blogspot.com/2008/05/blog-post_18.html

அடேங்கப்பா.... ஒன்னுமட்டும் புரியுது.... முருகனை வெச்சி எல்லாரும் கும்புடாம கும்மியடிக்கிறீங்க. :D முருகனோட தனிச்சிறப்ப்பான தமிழ்த் தொடர்பை அழிக்கனும்னு ஆண்டாண்டுகாலமா வேலை நடந்திருக்குன்னு மட்டும் புரியுது. நல்லாயிருங்க! வர்ரேன். டாட்டா! சும்மா ஆஜர் சொல்லீட்டுப் போக வந்தேன். ஏன்னா நீங்க சொல்ற விஷயங்கள் எதுவுமே எனக்குத் தெரியாது.